மற்றவர்: யோவ்... ரொம்பக் கத்தாதே... இது எமலோகம்!
-எஸ்.வேல் அரவிந்த், காங்கேயம்.
ஏ ஆசிரியர்: திருக்குறளை எழுதியவர் யார்?
மாணவன்: நம்ம ஆசிரியருக்கு என்னடா ஆச்சு?
மற்றொரு மாணவன்: ஏண்டா..?
மாணவன்: இப்பதான்டா, சார் போர்டுல திருக்குறள்னு எழுதினாரு. அதுக்குள்ளே திருக்குறளை எழுதினவர் யாருன்னு கேட்குறாரு பாரு!
-எம்.மகாலட்சுமி,
த/பெ. எம்.மகாராஜன்,
ஜங்கால்பட்டி, தேனி மாவட்டம்.
ஒருவர்: இன்னிக்கு மழை பெய்யும்னு சொன்னாங்களே... நீ கேட்டியா?
மற்றவர்: நான் ஒண்ணும் கேட்கலே... அவங்கதான் சொன்னாங்க...!
-பி.கவிதா,
சிதம்பரம்.
ஒருவர்: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே... இப்ப காணோமே?
மற்றவர்: போன வாரம்தான் தீப்பிடிச்சி, எரிஞ்சி போச்சி..!
-எஸ்.சடையப்பன்,
திண்டுக்கல்.
ஆசிரியர்: மாணவர்கள் சொல்லுகிற அதிகமான பதில் எது தெரியுமா?
மாணவர்கள்: தெரியாது சார்...
ஆசிரியர்: சரியான பதில்!
-எஸ்.லிவின்,
கும்பகோணம்.
ஏ அப்பா: உன்னை அம்மாதானே அடிச்சாங்க... அதுக்குப் போய் இப்படி அழுதுகிட்டே இருக்கியே?
மகன்: போங்கப்பா..! என்னால உங்கள மாதிரி அடி தாங்க முடியாது!
-நா.வினேத்குமார்,
த/பெ. சி.நாகராஜ்,
427, அண்ணா தெரு,
பாராஞ்சி கிராமம் (அஞ்சல்), அரக்கோணம் வட்டம்,
வேலூர் மாவட்டம் 632 510
No comments:
Post a Comment