Saturday, December 8, 2012

கடி

கடி

 ஒருவர்: ஆஹா... நான் பிழைச்சிக்கிட்டேன்... ஆபரேஷன் சக்ஸஸ்..!
 மற்றவர்: யோவ்... ரொம்பக் கத்தாதே... இது எமலோகம்!
 -எஸ்.வேல் அரவிந்த், காங்கேயம்.

 ஏ ஆசிரியர்: திருக்குறளை எழுதியவர் யார்?
 மாணவன்: நம்ம ஆசிரியருக்கு என்னடா ஆச்சு?
 மற்றொரு மாணவன்: ஏண்டா..?
 மாணவன்: இப்பதான்டா, சார் போர்டுல திருக்குறள்னு எழுதினாரு. அதுக்குள்ளே திருக்குறளை எழுதினவர் யாருன்னு கேட்குறாரு பாரு!
 -எம்.மகாலட்சுமி,
 த/பெ. எம்.மகாராஜன்,
 ஜங்கால்பட்டி, தேனி மாவட்டம்.

 ஒருவர்: இன்னிக்கு மழை பெய்யும்னு சொன்னாங்களே... நீ கேட்டியா?
 மற்றவர்: நான் ஒண்ணும் கேட்கலே... அவங்கதான் சொன்னாங்க...!
 -பி.கவிதா,
 சிதம்பரம்.

 ஒருவர்: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே... இப்ப காணோமே?
 மற்றவர்: போன வாரம்தான் தீப்பிடிச்சி, எரிஞ்சி போச்சி..!
 -எஸ்.சடையப்பன்,
 திண்டுக்கல்.

 ஆசிரியர்: மாணவர்கள் சொல்லுகிற அதிகமான பதில் எது தெரியுமா?
 மாணவர்கள்: தெரியாது சார்...
 ஆசிரியர்: சரியான பதில்!
 -எஸ்.லிவின்,
 கும்பகோணம்.

 ஏ அப்பா: உன்னை அம்மாதானே அடிச்சாங்க... அதுக்குப் போய் இப்படி அழுதுகிட்டே இருக்கியே?
 மகன்: போங்கப்பா..! என்னால உங்கள மாதிரி அடி தாங்க முடியாது!
 -நா.வினேத்குமார்,
 த/பெ. சி.நாகராஜ்,
 427, அண்ணா தெரு,
 பாராஞ்சி கிராமம் (அஞ்சல்), அரக்கோணம் வட்டம்,
 வேலூர் மாவட்டம் 632 510

No comments:

Post a Comment