Wednesday, October 16, 2013

ஒன்றல்ல பல

 தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன்னர்த் தமிழ்நாடு ஆசுதிரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை விரிந்து பரந்து இருந்ததற்கு இதுவும் சான்றாகும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 +

ஒன்றல்ல பல

Comment   ·   print   ·   T+  
  • காட்டுப்பன்றி
    காட்டுப்பன்றி
  • மரு
    மரு
  • வால்ரஸ்
    வால்ரஸ்
யானைக்கு மட்டும்தான் தந்தங்கள் உண்டு என பெரும்பாலானோர் நினைத்திருக்கலாம். ஆனால் யானை தவிர வேறு சில விலங்குகளும் தந்தத்துடன் உள்ளன. உதாரணத்துக்குச் சில விலங்குகளைப் பார்க்கலாமா?
மரு
ஆப்பிரிகாவைச் சேர்ந்த மரு என்றழைக்கப்படும் காட்டுப் பன்றியினத்தைச் சேர்ந்த விலங்கிற்கு இரண்டு ஜோடி தந்தங்கள் உண்டு. பார்க்க பயங்கரமாகத் தோன்றினாலும், குணத்தில் மிகவும் சாதுவானவை இவை. புற்களையும் கிழங்குகளையும் மட்டுமே உண்டு வாழும்.
காட்டுப்பன்றி
ஆசியா முழுவதும் காணப்படும் காட்டுப்பன்றிக்கும் தந்தங்கள் உண்டு. பெயர்தான் காட்டுப்பன்றியே தவிர இவை பெயருக்கேற்ற மாதிரி காட்டுத்தனமாக வளர்வதில்லை. சுமாரான உடல் பருமன் கொண்ட இவை நிலத்தில் வேகமாக ஓடும். நீரிலும் சுலபமாக நீந்தும். கண் பார்வையில் அத்தனை கூர்மை இல்லை. மூக்கின் மோப்ப சக்தி, அந்தக் குறையைச் சமன்செய்துவிடுகிறது.
வால்ரசு
பனி படந்த ஆர்ட்டிக் பகுதியில் காணப்படும் வால்ரஸ் எனப்படும் பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்கிற்கும் தந்தம் உண்டு. ஆண், பெண் இரண்டுமே தந்தத்துடன் காணப்படும். பனிப்பாறைகள் மீது நடப்பதற்கும், துளையிடுவதற்கும் இவை தந்தங்களைத்தான் நம்பியிருக்கின்றன. ஆண் வால்ரஸ், தன் அதிகார எல்லையை விரிவுபடுத்த தந்தத்தை வைத்துத்தான் மற்ற விலங்குகளை அடக்கிவைக்குமாம். இவற்றின் தந்தம் சுமார் மூன்று அடி வரை வளரும்.
நர்வால்
ஆர்ட்டிக் கடலோரங்களிலும் அதையொட்டிய நதிகளிலும் காணப்படும் யுனிகார்ன் வகையைச் சேர்ந்த விலங்கு, கூர்மையான தந்தம் கொண்டது. ஆண் விலங்கிற்குக் கிட்டத்தட்ட 8 அடி நீளம் வரை இந்தத் தந்தம் வளரும். இத்தனை பெரிய தந்தம் எதற்குப் பயன்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நீரின் அளவைக் கணக்கிடுவதற்கான சென்சார்போலச் செயல்படலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சரியான காரணம் தெரியவில்லை. பெண் விலங்கிற்கும் தந்தம் உண்டு என்றாலும் இத்தனை நீளம் இல்லை.

அன்றாடம் முன்று பேரீட்சை உண்டுவர இரத்த அழுத்தம் அகன்று போகிறதாம்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIonDY8V3_3YfAQsK8hikdvoolPv0g-ymaVtVrvtzwwOwT_n3L4s3bfitCd23NG-S43SggANwYwsXrOTIf2f50t7IJVWvpmSOnakexRgHasW3q9LXN_to2ym0w3AqFLCXwm_EdOls9oNE/s320/perichai.jpg
ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.


அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது.

நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும்.

100
கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம்.
இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.



நன்றி:http://www.seithy.com/
- See more at: http://www.onlytamil.in/2013/10/blog-post_11.html#sthash.zXNyDdmd.dpuf

Posted by : si va October 11, 2013


ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.


அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது.

நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும்.

100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம்.

இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.



நன்றி:http://www.seithy.com/
- See more at: http://www.onlytamil.in/2013/10/blog-post_11.html#sthash.zXNyDdmd.dpuf
Posted by : si va October 11, 2013


ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.


அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது.

நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும்.

100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம்.

இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.



நன்றி:http://www.seithy.com/
- See more at: http://www.onlytamil.in/2013/10/blog-post_11.html#sthash.zXNyDdmd.dpuf
Posted by : si va October 11, 2013


ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.


அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது.

நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும்.

100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம்.

இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.



நன்றி:http://www.seithy.com/
- See more at: http://www.onlytamil.in/2013/10/blog-post_11.html#sthash.zXNyDdmd.dpuf

Wednesday, October 9, 2013

சிரி.. சிரி.. செப்.28


""ஆடி வந்தாத்தான் உங்க கடையிலே  விலை குறைச்சு விப்பீங்களா?''
""இல்லையே... ஆடாம வந்தாலும், எங்க கடையிலே விலை குறைச்சுதானே விப்போம்?''

மனைவி: நம்ம கல்யாண நாள்
அதுவுமா ராமசாமி உருப்படவே மாட்டான்னு திட்டறீங்களே... யார் அது?
கணவன்: அவன்தான் என் தலையில உன்னைக் கட்டின திருமண புரோக்கர்.

""வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு கேட்டீங்களே... இவர் வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே மாட்டார் ''
""ஏன்?''
""போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு''
எஸ்.பொருநை பாலு,
திருநெல்வேலி.

""பாம்பு டான்ஸ் ஆடிய பெண்ணை ஏன் போலீஸ் கைது செஞ்சுட்டாங்க?''
""திடீர்னு பாம்பு சட்டையை
உரிச்சிடுச்சி''
த.கிருஷ்ணஜோதி,
சென்னை-21.

""குடை ரிப்பேர் செய்றவனுக்குப் பொண்ணைக் கொடுத்தது தப்பாப் போச்சு''
""என்ன ஆச்சு?''
""கம்பி நீட்டிட்டான்''
அ.கற்பூரபூபதி, சின்னமனூர்.

தாத்தா: எனக்கு வயசாயிடுச்சு... அதனால "பேக் பெயின்' வந்துடுச்சு. இந்த சின்ன வயசுல உனக்கும் "பேக் பெயின்'னு சொல்றீயே?
பேரன்: எனக்கு ஸ்கூல் "பேக் பெயின்' தாத்தா
சி.ரகுபதி, போளூர்.

""டாக்டர்... டாக்டர்... வேகமாக ஓடினால் மூச்சிரைக்குது''
""மெதுவா ஓடுங்களேன்''
""பிக்பாக்கெட் அடிச்சிட்டு
எப்பிடி மெதுவா ஓடுறது?''

""நேற்றைக்கு ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்துவிட்டது''
""என்ன நடந்தது?''
""குதிரைதான்''
சுகந்தாராம்,
சென்னை-59.

சிரி... சிரி... அக்.05

சிரி... சிரி...

 ""இந்த நாய் ஏன் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு?''
""இந்த நாயோட எஜமான் தனது மகளிடம், இந்த நாய்க்கு வேணும்னா உன்னைக் கட்டி வைப்பேன். உன் காதலனுக்குக் கட்டி வைக்கமாட்டேன்னு சொன்னாராம்''
எஸ்.கிருஷ்ணன், திருவண்ணாமலை.

""ஏங்க உங்க பையன் சதா குடிச்சிட்டு திரியறான். கேட்கப்படாதா?''
""கேட்க வேண்டிய அவசியமே இல்லை. என் கோட்டாவா தினமும் ஒரு குவார்ட்டர் குடுத்திடுவான்''

""பரீட்சை ஹாலில் ஓராளு வந்து ஒரு விரலைத் தூக்கிக் காட்டிட்டு போறாரே எதுக்கு?''
""கேள்வித்தாள் அவுட்டாம்''

""நேத்து இண்டர்வியூ நடந்திட்டிருக்கும்போதே தூங்கிட்டேன்''
""அய்யய்யோ... அப்புறம்?''
""உடனே அப்பாயின்மென்ட் குடுத்து வேலையில சேரச் சொல்லிட்டாங்க''

""பட்டிமன்ற பேச்சாளர்கள் எல்லாரும் ஏன் வயதான பாட்டிகளா இருக்காங்க?''
""இது ஒரு புது முயற்சியாம். இதுக்குப் பேர் பாட்டி மன்றமாம்''

""கண்ணு சுத்தமா தெரியலை... டாக்டரை பார்க்கணும்''
""கண்ணு தெரியலைன்னு சொல்லுறீங்க. அப்ப டாக்டரை எப்படிப் பார்ப்பீங்க?''

""தலைவரோட மேடை பேச்சுல நகைச்சுவை தெறிச்சுதாமே? ''
""ஆமாம்... ஊழலை ஒழிப்போம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்போம்ன்னு ஒரே காமெடி போங்க''

""பழனி மலையிலே ஏற்பட்ட ரேப் கார் விபத்தை நான் கண்டிக்கிறேன்''
""தலைவரே... அது ரேப் கார் இல்லே. ரோப் கார்''
கு.அருணாசலம், தென்காசி.

Thursday, October 3, 2013

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.
* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.
* வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து, வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி, சிரங்கு குணமாகும்.
* சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும்.
* மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.
* 40 வயதை தாண்டிவிட்டால் அதிக உணவை தவிர்த்து சத்துள்ள உணவு குறைந்த அளவும், அதிக பழச்சாறும் பருகினால் நோய் வராது.

Monday, September 30, 2013

பழங்களின் அரசி என்றழைக்கப்படும் திராட்சை

பழங்களின்  அரசி 

என்றழைக்கப்படும் 

 

திராட்சை

பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை, மூன்று நிறங்களில் காணப்படுகிறது. சிவப்பு, பச்சை, கறுப்பு, என  நாட்டிற்கு ஏற்றவாறு நிறங்கள் மாறுபடுகின்றன. 
இந்த பழத்தில் வைட்டமீன் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதன் நிறம் கண்களை கவரும் வகையிலும், சாப்பிடுவதற்கு விரும்பதக்கதாகவும் இருக்கின்றது.
திராட்சை பழத்தில் இருந்து மருந்து, ஒயின், கிரேப் சீட் எண்ணெய், சாக்லேட், ஜூஸ் என பலவற்றை தயாரிக்கலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமீன் போன்ற சத்துக்களை உடலுக்கு வழங்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
இப்பழத்தை உண்பதால்.....
* உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
* பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்னைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
* திராட்சைப் பழத்துடன் மிளகை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர, நாக்கு வறட்டுதல் நீங்கும்.
* உடல் அசதி, பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கு திராட்சைப் பழம் ஏற்றது.
* திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர மாதவிடை கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாகும்.
* கண்பார்வையை அதிகரிக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கவும், சிறுநீரக பிரச்னையை அகற்றவும் இது பயன்படுகிறது.
* இளம் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு பிரச்னைக்கு, இதன் சாறு  எடுத்து தடவினால் விரைவில் பரு கொட்டிவிடும். முகத்தில் ஏற்படும் கருவளையத்தை போக்கவும், தோல் வியாதியை கட்டுப்படுத்தவும் திரட்சை பயன்படுகிறது.
திரட்சைப்பழம் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது. ஆகவே தினமும் இதை உண்டு வந்தால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம்.

Tuesday, September 17, 2013

நீரிழிவில் இருந்து விடுபட.....

நீரிழிவில் இருந்து விடுபட.....


* நீரிழிவு நோய் உள்ளவர்கள் நெல்லிக்கனிச் சாற்றை இனிப்பு சேர்க்காமல் தினமும் சாப்பிட்டு வர படிப்படியாய் குறைந்து குணமாகும்.
* கொன்றைப் பூவை 200 கிராம் எடுத்து நன்கு அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
* வெள்ளை மருதம் பட்டைக்கு நீரிழிவு நோயைத் தணிக்கும் ஆற்றல் உண்டு.
* அடிக்கடி முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும்.
* செம்பருத்திப் பூ கஷாயத்தில் தேன் சேர்க்காமல் மிளகு சேர்த்துப் பருகினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்.
* இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் வெந்தயம், வெந்தயக் கீரை குணமாக்கும்.
* முருங்கை இலை, எள்ளு பிண்ணாக்கு, உப்பு, மிளகாய் அனைத்தும் அவித்துச் சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

இதய நோயாளிகளுக்கு உடற்பயிற்சியும், மனப் பயிற்சியும்

இதய நோயாளிகளுக்கு உதவும் உடற்பயிற்சியும், மனப் பயிற்சியும்

இதய நோயாளிகள் சீரான உடற்பயிற்சியோடு எதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் மனப் பயிற்சியையும் மேற்கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம்.
எதற்கெடுத்தாலும் பயந்து, இதய நோய் வந்து விட்டதே என்று நினைத்து வருந்தி எப்போதும் முடங்கிப் போயிருப்பவர்களை விட, எதையும் சாதிக்க முடியும், எது நடந்தாலும் அதில் நன்மையே இருக்கும் என்று நேர்மறையான சிந்தனையுடன் வாழ்பவர்கள், பயப்படுபவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பயம் கொள்ளும் போது, இதயத்தின் வேகம் அதிகமாகி அதனால் உடலுக்கு அதிகமான ரத்த ஓட்டம் பாய்கிறது. அதே சமயம், எதையும் தைரியமாக எதிர்கொண்டு, நம்மால் முடியும் என்ற மனப்பான்மையோடு வாழும் போது, இதயத்துக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
இந்த மனப்பயிற்சியோடு, இதய நோயாளிகள் அவர்களுக்கு என்று உள்ள ஒரு சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்களுக்கு உயிர் வாழலாம் என்கிறது மருத்துவம்.
மேலும், நேர்மறை எண்ணங்களால், இதய நோயாளிகளும், நம்மால் உடற்பயிற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்து, உடற்பயிற்சி செய்வதாகவும், ஒரு சிலர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்து, அதனால் உடல் ஆரோக்கியத்தைப் பெற்று நேர்மறையான எண்ணத்தைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, ஒன்றை முயற்சி செய்து துவக்கிவிட்டால் மற்றொன்று தானாகவே வந்து வருகிறது.
எனவே மனப்பயிற்சியும், உடற்பயிற்சியும் எப்போதும் கைகொடுக்கும் என்பதை மறவாதீர்.

வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சியே போதும்

வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சியே போதும்

சுமார் 60 வயதைக் கடந்த பெண்மணிகள் வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சி மேற்கொண்டாலே ஆரோக்கியமான உடலைப் பெறலாம் என்கிறது புதிய மருத்துவ ஆய்வு ஒன்று.
பிர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தினர்,  60 வயதைக் கடந்த பெண்களை வைத்து இந்த ஆய்வை நடத்தினர்.
அதில் ஒரு குழுவை வாரத்தில் 3 நாட்களும், மற்றொரு குழுவை வாரத்தில் 2 நாட்களும், அடுத்த குழுவை வாரத்தில் 1 நாளும் உடற்பயிற்சி மேற்கொள்ள வைத்தனர்.
சுமார் 16 வாரங்கள் ஆன நிலையில், மூன்று குழுவில் இருப்பவர்களின் உடல் ஆரோக்கியமும் ஒரே சீராக இருந்தது. அவர்களது தசைகளும் வலுப்பெற்று இருந்தது.
இதன் மூலம், வயதான பெண்மணிகள், வாரத்தில் ஒரு நாளாவது உடற்பயிற்சி செய்தால் அவர்கள் ஆரோக்கியத்தை பெறலாம் என்றும், இதுவரை வாரத்தில் 5 அல்லது 6 நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று வயதானவர்களை மருத்துவர்கள் பரிந்துரைத்து வந்ததை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் நினைப்பது போல அல்ல பழச்சாறுகள்

நாம் நினைப்பது போல அல்ல 

பழச்சாறுகள்

பழச்சாறு.. உடலுக்கு மிகவும் நல்ல உணவு வகையில் முதலிடத்தில் இருப்பது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சரி, அதிக நாள் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் சரி முதலில் கொடுப்பது பழச்சாறு தான்.
மேலும், வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் நாம் அடிக்கடி பழச்சாறு கலந்து கொடுத்து வருவோம். பழச்சாறு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் உடலுக்கு மிக அதிக நன்மை கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால், பழச்சாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் நல்ல உணவாக இல்லாமல், அதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதாவது, பழச்சாறு தயாரிக்கும் போது, பழத்தை நன்கு மசித்து அதில் உள்ள நார் சத்துக்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறோம். இதனால், பழத்தின் முக்கிய நன்மையான நார்சத்து நமக்குக் கிடைக்காமலேயே போய் விடுகிறது.
அடுத்ததாக ருசிக்கு பழச்சாறில் சர்க்கரையை சேர்க்கிறோம். இது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். அதுவும் நோயாளி ஒருவர் தொடர்ந்து பழச்சாறை அருந்தி வந்தால், அவரது உடலில் சர்க்கரையின் அளவு கண்டபடி ஏறி இறங்க வாய்ப்பு ஏற்படும்.
எனவே, மிகவும் முடியாத நிலையில் இருக்கும் போது பழச்சாறு கொடுப்பதில் தவறில்லை. ஒருவரால் நன்கு பழத்தை மென்று சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது அவருக்கு பழச்சாறு தேவையில்லை. பழத்தை சாப்பிடும் போது, ஒரு வகையில் வாய் சுத்தம் செய்யப்படுகிறது. ஜீரண உறுப்புகளுக்கு எளிதாக ஜீரணம் செய்யக் கூடிய உணவு பொருள் கிடைக்கிறது. தேவையற்ற சர்க்கரை சேர்வதில்லை.

Monday, September 16, 2013

தமிழ் வளர்த்த பெருமகன்கள்!



வள்ளல் பாண்டித்துரை அவர்களிடம் திருக்குறளைத் திருத்தி அளித்தவர் இசுகாட் (Scot) என்பவர். எல்விசு எனக் குறித்துள்ளதால் முழுப் பெயரையும் தெரிவிக்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


பூ. கொ. சரவணன்
Comment   ·   print   ·   T+  
சிகமணி டி.கே.சிதம்பரநாதனின் மகனான தீர்த்தாரப்பன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். ஆற்ற முடியாத துயரத்தில் அமர்ந்திருந்த டி.கே.சி.க்கு ஒரு கடிதத்தை தந்தார்கள். அதை வாங்கி, கண்களை இடுக்கி மெதுவாக படித்தார். திடீரென்று கண்கள் பிரகாசமாகின. மகனின் மரணத்தை மீறியும் அவரின் குரலில் ஓர் உற்சாகம். “ஆஹா! ஆஹா” என்று அவர் பூரித்துப்போக, 'என்ன சங்கதி' என்று அவர் கையில் இருந்த தாளை வாங்கிப்பார்த்தார்கள். கவிமணி அவரின் மகனின் மறைவுக்கு எழுதியிருந்த இரங்கற்பா அது. “இப்படி ஓர் இரங்கற்பா கிடைக்க எத்தனை மகனை வேண்டுமானாலும் இழக்கலாம்!” என்று சொன்னாராம் ரசிகமணி. பெயருக்கு ஏற்ற ஆள்தான் அவர்.
சுசுமு ஓனோ எனும் ஜப்பானிய பேராசிரியர் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் பொற்கோவுடன் இணைந்து எண்ணற்ற ஆய்வுகளை தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை சார்ந்து செய்தார்கள். அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது. அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர் மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு.
பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து, கடந்த நூற்றாண்டில் தமிழ் வளர்த்தது வரலாறு. அவரை எல்விஸ் துரை எனும் ஆங்கிலேயர் சந்தித்தார். அவர் திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருப்பதாகவும், அதை மாற்றிக் கொண்டுவந்திருப்பதாகவும் சொன்னார். உள்ளுக்குள் எழுந்த அதிர்ச்சியை சற்றும் காட்டிக்கொள்ளாமல், “எத்தனை பிரதிகள் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஐநூறு!” என்று ஆர்வம் கொப்பளிக்க விடை வந்து விழுந்தது. அத்தனை பிரதியையும் அப்படியே பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார் பாண்டித்துரை தேவர். வேலையாளை அழைத்தார். “எல்லாத்தையும் குழி தோண்டி சீமெண்ணெய் ஊத்தி கொளுத்திடு!” என்றார். ஒரு தவறான திருக்குறள் பிரதிகூட தமிழனுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது என்று அத்தனை கவனம் இருந்தது அவரிடம்.
Keywords: தமிழ்மொழிஅறிஞர்கள்ரசிகமணிபாண்டித்துரை தேவர்திருக்குறள்
 - தமிழ் இந்து