Monday, December 10, 2012

வரலாற்றில் இன்று Today in History 10/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 10

  1.     மானுட உரிமை நாள்
  2.     1041 - பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
  3.     1541 - இங்கிலாந்தின் எட்டாம்என்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக  தாமசு கல்பெப்பர்ம் பிரான்சிசு டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
  4.     1655 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.
  5.     1684 - ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.
  6.     1807 - சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.
  7.     1817 - மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20 ஆவது மாநிலமாக இணைந்தது.
  8.     1868 - உலகின் முதலாவது  வழி(சமிக்கை) விளக்குகள் இலண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.
  9.     1898 -இசுபெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
  10.     1901 - முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
  11.     1902 - அசுவான் அணை திறக்கப்பட்டது.
  12.     1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
  13.     1906 - அமெரிக்க அதிபர் தியொடோர் உரூசுவெல்ட்டுரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார் ; அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
  14.     1936 - இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்டு மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
  15.     1941 - இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் சப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.
  16.     1941 - இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் பிலிப்பீன்சை அடைந்தனர்.
  17.     1948 - மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
  18.     1973 - தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்  காவல்  படை அமைக்கப்பட்டது.
  19.     1975 - ர இரசியரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
  20.     1981 - தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிசுதான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.
  21.     1984 - தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெசுமண்டு டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
  22.     1989 - மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது

No comments:

Post a Comment