வரலாற்றில் இன்று
Today in History திசம்பர் 15
Today in History திசம்பர் 15
- 1256 - மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட் (இன்றைய ஈரானில்) என்ற இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.
- 1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.
- 1891 - சேம்சு நெய்சுமித்து கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
- 1905 - அலெக்சாண்டர் புசுகினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்பேர்க்கில் புசுகின் மாளிகை அமைக்கப்பட்டது.
- 1955 - உலகின் எட்டாவது அதிசயமான ஓல்சன் கடிகாரம் டென் மார்க் தலைநகரான கோப்பன் ஃகேகனில் ஓட விடப்பட்டது.
- 1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
- 1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
- 1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
- 1978 - மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அதிபர் சிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
- 1991 - இந்தியத் திரையுலகில் இமயம் என்று வருணிக்கப்படும் சத்யசித்ரேக்கு ஆசுகார் விருது வழங்கப்பட்டது
- 1994 - இணைய உலாவி நெட்சுகேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது
- 1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
- 2001 - பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
- 2006 - கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம்இரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.
No comments:
Post a Comment