தமிழால் அடிப்பேன்...
பரிதிமாற் கலைஞர், சிறந்த தமிழ்ப்
பேராசிரியர். ஒருமுறை அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,
குறும்புக்கார மாணவர் ஒருவர் எழுந்து, ""ஆசிரியப் பெரும!
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவற்றைப் பற்றி
விரிவாகவும், விளங்குமாறும் தாங்கள் எடுத்துக் கூறினீர்கள்.
அடிகளையும், தொடைகளையும் பற்றி விரித்த பின்னர் மேலே
விவரிப்பதற்கு யாது உளது?'' என்று கேட்டார்.
÷அதற்குப் பரிதிமாற் கலைஞர், ""அன்பு சால் மாணவ! யாப்பிலக்கணத்தை யாம் விளங்குமாறு எடுத்துரைத்ததாகத் தாம் கூறுவதற்கு யாம் வந்தனம்... தந்தனம்...! தொடை இலக்கணத்திற்குப் பிறகு எவ்விலக்கணம் கூறப்படும் என்று ஐயுற்ற நுமக்கு, யாம் மற்றொரு நாள் "விளக்குமாற்றால்' விளக்குதும்!'' என்றார்.
÷பேராசிரியரின் பதிலைக் கேட்ட மாணவர் வாயடைத்துப்போய் தலைகுனிந்தபடி அமர்ந்தாராம்!
÷அதற்குப் பரிதிமாற் கலைஞர், ""அன்பு சால் மாணவ! யாப்பிலக்கணத்தை யாம் விளங்குமாறு எடுத்துரைத்ததாகத் தாம் கூறுவதற்கு யாம் வந்தனம்... தந்தனம்...! தொடை இலக்கணத்திற்குப் பிறகு எவ்விலக்கணம் கூறப்படும் என்று ஐயுற்ற நுமக்கு, யாம் மற்றொரு நாள் "விளக்குமாற்றால்' விளக்குதும்!'' என்றார்.
÷பேராசிரியரின் பதிலைக் கேட்ட மாணவர் வாயடைத்துப்போய் தலைகுனிந்தபடி அமர்ந்தாராம்!
No comments:
Post a Comment