மற்றவர்: எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ..?
-எம்.செல்லம்மாள்,
கோவைகுளம்.
பாபு: ஏண்டா, எங்க வீட்டுல மட்டும் கொசு அதிகமா வந்து கடிக்குது..?
கோபு: நீ எதுக்குடா, கொசுவுக்கெல்லாம் உங்க வீட்டு அட்ரசை கொடுக்கிறே..?
-ஏ.எஸ்.இராஜேந்திரன்,
த/பெ. சங்காமுத்து,
41848, கிழக்கு தெரு,
வெள்ளூர் 626 005.
விருதுநகர் மாவட்டம்.
டாக்டர்: தூக்க மாத்திரை குடுத்தேனே, நல்லா வேலை செஞ்சுதா..?
நோயாளி: தெரியலை டாக்டர்... மாத்திரை போட்டதும் நல்லாத் தூங்கிட்டேன்...!
-டி.பச்சமுத்து,
1076, லட்சுமி இல்லம்,
பாரதியார் நகர்,
கிருஷ்ணகிரி 635 001.
ஆசிரியர்: கணக்குப் பாடத்துல, ஏண்டா சைபர் மார்க் எடுத்திருக்கே..?
மாணவன்: கணக்குல சைபருக்குத்தான் மதிப்பு அதிகம்னு நீங்கதானே சார் சொன்னீங்க.. அதனாலதான்...
-ஜி.எஸ்.சபரி,
கோபிசெட்டிபாளையம்.
தந்தை: பள்ளிக்குப் போகும் நேரத்தில் தெருநாயிடம், புத்தகப் பையை வீசி விளையாடாதே... பிடுங்கி வைக்கப் போகுது... ஏற்கெனவே உனக்கு ஏழரை நாட்டுச்சனி வேற...
மகன்: எனக்கு ஏழரை நாட்டு சனி நடப்பது அந்த நாய்க்குத் தெரியுமா, டாடி?
-என்.வி.சீனிவாசன்,
புதுப்பெருங்களத்தூர்.
ராமு: நம்ம பள்ளிக்கூடத்துல எல்லா வாத்தியாரும் சைவமாக இருந்தால் நல்லது என்கிறாயே... ஏன்?
பாலு: பரீட்சையில நமக்கு முட்டை போட மாட்டாங்களே..!
-எம்.ராஜாமணி,
விக்கிரமசிங்கபுரம்.
No comments:
Post a Comment