Sunday, December 2, 2012

வரலாற்றில் இன்று Today in History திசம்பர் 2

                             வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 2


    உலக அடிமை ஒழிப்பு நாள்
    1804 - பாரிசில் மாவீரன் நெப்போலியனுக்கு பிரான்சின் மன்னராக முடிசூட்டப்பட்டது
    1848 - முதலாம் பிரான்சு சோசப் என்பவன் ஆசுதிரியாவின் பேரரசன் ஆனான்.
    1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவன் சார்லசு லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தான்.
    1852 - மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசன் ஆனான்.
    1908 - பூ யி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
    1942 - சிகாகோ பல்கலைக் கழகத்தில் Dr. Enrico Fermi தலைமையில் செயல்பட்ட விஞ்ஞானிகளின் குழு நீடித்த, கட்டுப்படுத்தப்பட்ட அணு தொடர்வினைச் செயலை (nuclear chain reation) முதன்முதலில் செய்து காட்டினர்
    1946 - பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங்,சின்னா, மற்றும் (இ)லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
    1956 - பிடல் காசுட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவைச் சென்றடைந்தனர்.
    1961 - பிடெல் காசுட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
    1971 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது. அபுதாபி, புசெய்ரா,சார்சா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது
    1975 - பத்தே லாவோ என்பவர் (இ)லாவோசின் ஆட்சியைப் பிடித்து (இ)லாவோ மக்கள்சனநாயகக் குடியரசை அமைத்தார்.
    1976 - பிடெல் காசுட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
    1988 - பாகிசுதான் பிரதமராகப் பொறுப்பேற்றார் Benazir Bhutto. இசுலாமிய நாட்டின் முதல் பெண் பிரதமர்.
    1990 - ஒன்றுபட்ட  செர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் வேந்தர்  எல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது.
    1993 -  அபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
    2002 - இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒசுலோவில் ஆரம்பமாயின.
    2006 - பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன

No comments:

Post a Comment