Saturday, December 22, 2012

கடி

கடி

 ராமு: அந்தப் பாம்பு என் அந்த டீச்சர் முன்னாடி போய் நின்னு படம் காட்டுது?
 சோமு: அவங்கதான் டிராயிங் டீச்சர்!
 -எஸ்.ஆறுமுகம்,
 28, தியாகி சுப்பையா தெரு,
 கழுகுமலை 628 002.

 சுப்பு: டேய் பாபு, உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... அடையாளமே தெரியாம மாறிப்போயிட்டியே?
 கோபு: நான் பாபு இல்லை... கோபு..!
 சுப்பு: அட, பேரையும் மாத்திட்டியா?
 -தேனி முருகேசன், தேனி.

 ""டாக்டர் தருமராஜன்கிட்ட சிகிச்சைக்குப் போக எல்லோரும் பயப்படுறாங்க...''
 ""ஏன்?''
 ""அவரு பேருக்கு முன்னால இருக்குற இனிஷியல்தான் காரணம்...''
 ""என்ன அது?''
 ""எ.ம.''
 -ப.திருமுருகன், திருப்பூர்.

 தொண்டர் 1: நம்ம தலைவர் உலகம் தெரியாத அப்பாவியா இருக்கிறாரே?
 தொண்டர் 2: எதை வைத்து அப்படிச் சொல்றே?
 தொண்டர் 1: பின்னே என்ன? உங்களை எல்லோரும் வசைபாடுறாங்கான்னு சொன்னா, நல்ல ராகமாப் பார்த்துப் பாடச் சொல்லுங்க... நானும் வந்து கேட்கிறேன்னு சொல்றாரே!
 -வீ.பாலசந்தர், த/பெ. வீ.வீரமலை, மோ.கருப்பம்பட்டி கிராமம் (அஞ்சல்)
 முசிறி வட்டம்,
 திருச்சிராப்பள்ளி 621 210.

 ஒருவர்: என்னுடைய ஒரே லட்சியம் பெரிய எழுத்தாளராக ஆகணும்றதுதான்...
 மற்றவர்: சரி, அதுக்காக எழுத்தை இவ்ளோ பெரிசாவா எழுதறது?
 -சுரா.சுரேந்தர்,
 கந்தர்வகோட்டை.

 ஒருவர்: இது ரொம்ப காஸ்ட்லி ஹோட்டல்னு எப்படிச் சொல்றே?
 மற்றவர்: ஒரு தோசை சாப்பிட்டா, 10 கிலோ மாவு அரைச்சுக் கொடுக்கணுமாம்...
 -ஜோ.ஜெயக்குமார்,
 நாட்டரசன்கோட்டை.

No comments:

Post a Comment