சோமு: அவங்கதான் டிராயிங் டீச்சர்!
-எஸ்.ஆறுமுகம்,
28, தியாகி சுப்பையா தெரு,
கழுகுமலை 628 002.
சுப்பு: டேய் பாபு, உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... அடையாளமே தெரியாம மாறிப்போயிட்டியே?
கோபு: நான் பாபு இல்லை... கோபு..!
சுப்பு: அட, பேரையும் மாத்திட்டியா?
-தேனி முருகேசன், தேனி.
""டாக்டர் தருமராஜன்கிட்ட சிகிச்சைக்குப் போக எல்லோரும் பயப்படுறாங்க...''
""ஏன்?''
""அவரு பேருக்கு முன்னால இருக்குற இனிஷியல்தான் காரணம்...''
""என்ன அது?''
""எ.ம.''
-ப.திருமுருகன், திருப்பூர்.
தொண்டர் 1: நம்ம தலைவர் உலகம் தெரியாத அப்பாவியா இருக்கிறாரே?
தொண்டர் 2: எதை வைத்து அப்படிச் சொல்றே?
தொண்டர் 1: பின்னே என்ன? உங்களை எல்லோரும் வசைபாடுறாங்கான்னு சொன்னா, நல்ல ராகமாப் பார்த்துப் பாடச் சொல்லுங்க... நானும் வந்து கேட்கிறேன்னு சொல்றாரே!
-வீ.பாலசந்தர், த/பெ. வீ.வீரமலை, மோ.கருப்பம்பட்டி கிராமம் (அஞ்சல்)
முசிறி வட்டம்,
திருச்சிராப்பள்ளி 621 210.
ஒருவர்: என்னுடைய ஒரே லட்சியம் பெரிய எழுத்தாளராக ஆகணும்றதுதான்...
மற்றவர்: சரி, அதுக்காக எழுத்தை இவ்ளோ பெரிசாவா எழுதறது?
-சுரா.சுரேந்தர்,
கந்தர்வகோட்டை.
ஒருவர்: இது ரொம்ப காஸ்ட்லி ஹோட்டல்னு எப்படிச் சொல்றே?
மற்றவர்: ஒரு தோசை சாப்பிட்டா, 10 கிலோ மாவு அரைச்சுக் கொடுக்கணுமாம்...
-ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.
No comments:
Post a Comment