Friday, October 22, 2010

மம்மி

மம்மி என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் போல சிலர் அம்மாவை மம்மி என்று அழைப்பார்கள் அல்லவா, அந்த மம்மிக்கும் இந்த மம்மிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இங்கு மம்மி என்று சொல்வது உயிரற்ற உடலைத்தான். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் சவம். இந்த மம்மிகள் எகிப்தில் உள்ளன.பிரமிடுகளின் நாடுதான் எகிப்து. அங்குள்ள மிகப் பெரிய பிரமிடுகளைப் பார்த்தால் நாம் வியந்துபோவோம். அவை கட்டப்படுவதற்கு எத்தனைக் காலம் ஆகியிருக்கும்! எத்தனை எத்தனை வேலையாட்கள் இதற்காக உழைத்திருப்பார்கள்! வருடக்கணக்காக பல்லாயிரக்கணக்கான அடிமைகளைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டவைதான் ஒவ்வொரு பிரமிடும். பிரமிடுகள் என்பது வெறும் கல்லறைகள்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.புராதன எகிப்தின் சக்கரவர்த்திகள்தான் பாரோக்கள். இவர்களின் சவங்களையும், மற்ற ராஜாக்களின் சவங்களையும் பிரமிடுகளில் பாதுகாத்து வைத்தார்கள். அந்த சவங்கள்தான் மம்மிகள்.ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பிரமிடுகளில் அடக்கம் செய்யப்பட்ட மம்மிகள் இப்போதும் கெட்டுப்போகாமல் இருக்கின்றன. சவ உடல்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கான முறை புராதன எகிப்தியர்களுக்குத் தெரிந்திருந்தது. அழுகச் செய்கின்ற அணுக்களிலிருந்து அவர்கள் சவ உடலைக் காப்பாற்றினார்கள். அதற்காக அவர்கள் "ஆஸ்பல்ட்', "ப்ளாஸம்', எனும் பாதுகாக்கும் பொருள்களை (டழ்ங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ஸ்ங்) பிரயோகப்படுத்தினார்கள். இவை சில ரசாயனப்பொருட்களாகும்.சவ உடலிலிருந்து குடல் முதலிய உறுப்புகளை நீக்கிய பிறகுதான் பிரஸர்வேட்டிவ்களைப் பிரயோகிப்பார்கள். உடல் பக்குவப்படுவதுவரை இப்படிச் செய்வார்கள். பிறகு, எகிப்தின் காவல் தெய்வமான ஒஸீரஸின் முகமூடியை சவ உடலுக்கு அணிவிப்பார்கள். இப்படி பக்குவப்படுத்தப்பட்ட மம்மியை ஒரு மரப்பெட்டியில் வைப்பார்கள். அந்த மரப்பெட்டியை ஒரு கல்லறையில் பத்திரமாக அடக்கம் செய்வார்கள்.சவ உடலிலிருந்து எடுத்த குடல் முதலிய பொருட்களை ஒரு கற்பாத்திரத்தில் இட்டு இந்தக் கல்லறையிலேயே அடக்கம் செய்வார்கள். விரைவாக அணுச்சேர்க்கை நடக்கிற குடல்களைக் காப்பாற்றுவதற்கு ரசாயனப் பொருட்களால் இயலாது. அதனால்தான், குடலைத் தனியாகப் பிரிக்கிறார்கள். இப்படி மம்மியாக்கப்பட்ட சவ உடல்கள் எந்த மாற்றமும் இன்றி இப்போதும் நிலைத்திருக்கின்றன.சவ உடல்களை ஏன் இப்படிப் பாதுகாக்கிறார்கள்? மனிதன், மரணத்திற்குப் பின்னும் வாழ்வதாக எகிப்தியர்கள் நம்பினார்கள். சவ உடலை சற்றும் சேதமடையாமல் பாதுகாத்தால், அந்த உடலுக்குரியவருக்கு மேல் உலகத்தில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!ஆனால், எல்லா சவ உடல்களையும் இப்படிச் செய்ய மாட்டார்கள். சவ உடலை மம்மியாக மாற்ற நிறையச் செலவு செய்ய வேண்டிவரும். அதனால், ஏழைகளின் சவ உடல்கள் மம்மியாக மாற்றப்படுவதில்லை.சக்கரவர்த்திகளாலும் ராஜாக்களாலும், மேல் உலகில் சேவகர்களும் படைவீரர்களும் இல்லாமல் வாழ முடியுமா? இதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? இறந்த சேவகர்களின், படை வீரர்களின் உருவங்களை, மம்மியைப் பாதுகாத்த கல்லறைக்கருகில் செதுக்கி வைத்தார்கள். அப்படி அவர்களுக்கும் மேல் உலகில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!
அன்றாட வாழ்வில் அறிவியல்: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

மீன்களுக்கு தண்ணீரில் நீந்துவதற்கான திறமை மட்டுமல்ல, தண்ணீரில் அப்படியே அசைவற்று நிற்கக்கூடிய திறமையும் உண்டு. மீன்காட்சி சாலைகளில் உள்ள மீன்களைக் கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்குத் தெரியும். சில சமயங்களில், உடலில் எப்பகுதியையும் அசைக்காமல் மீன், தண்ணீரின் மேற்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ அப்படியே அசைவற்று நிற்பதைப் பார்க்கலாம்.÷மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்தியேகமான வாயுப் பை உதவி செய்கிறது. ஏறத்தாழ, ஒரு பலூனின் வடிவில் உள்ள இந்த வாயுப் பை, மீனின் வயிற்றிற்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில்  ஏறத்தாழ 5-லிருந்து 6 சதவிகிதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்ஸிஜன், கார்பன்}டை}ஆக்ûஸடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும். ÷பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும்.÷ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயுப் பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு.
 
கொடிகள் ஏன் அடையாளச் சின்னங்களுடன் இருக்கின்றன?÷
தோற்றம் கப்பல் மாலுமிகளின் தொழிற் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. கடலில் கப்பல்களும், படகுகளும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்ள இந்தக் கொடிகள் உதவுகின்றன. போரிலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகளுக்கும் கொடியின் பங்கு மிகவும் அதிகம். அரசியல் கட்சிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் கொடிகள் உள்ளதால், ஒரு கொடி எந்த கட்சியைக் குறிக்கிறது அல்லது எந்த அமைப்பைக் குறிக்கிறது என்று நாம் தொலைவிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். ÷விளையாட்டுப் போட்டிகளிலும், பல பிரிவினரும், பல நாடுகளும் ஒன்று சேர்கிற சந்தர்ப்பங்களிலும், கொடிகளில் உள்ள சின்னங்கள் ஒவ்வொரு குழுவையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள உதவுகின்றன
ஜெர்மானியப் பழமொழிகள்

1. கிடைக்கக்கூடிய பூக்களைக் கொண்டு பூங்கொத்து செய்வதுதான் மகிழ்ச்சி தரும் காரியம்.2. கடலைப் புகழ வேண்டும் என்றால் கரையில் நிற்க வேண்டும்.3. நாயுடன் மனிதன் நட்புகொள்வதற்குக் காரணம், அது பேசாமல் வாலை மட்டும் ஆட்டிக் கொண்டிருப்பதுதான்.4. அன்பை அறிந்த இதயத்திற்குத்தான், அது எவ்வளவு உயர்வானது என்று சொல்ல முடியும்.5. பொறுமை எனும் மரத்தின் வேர்கள் கசப்பானவைதான். ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை.6. வரலாற்றை உருவாக்குபவனுக்கு அதை எழுதுவதற்கு நேரமிருக்காது.7. வலிமை எஜமானனாகும்போது, நீதி வேலைக்காரனாகிறது.8. ரசிக்கத் தெரியாத மனிதனின் கண்கள் அழைக் காண்பதில்லை.9. உண்மையற்ற சமாதானம் ஆபத்தானது.10. ஒரு நல்ல நண்பன், நம்மிடம் உள்ள செல்வங்களைவிட மேலானவன்.
பெர்முடா ரகசியம்

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும்    நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன்    தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில்  மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.÷"பிளைட்-19' என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை   அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:÷""விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.''÷இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த          விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது. ÷1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட "மேரி செலஸ்டி' என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி "மேரி செலஸ்டி' என்று     அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில்  மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.÷மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது "யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்' எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.÷"ஆரான் பர்' என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் "தியோடோசியா பர் அல்ஸ்பான்', தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு "பேட்ரியாட்' எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.÷முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் "டக்லஸ் பிசி-3.' மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.÷அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து,          கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.÷இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது "எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்' எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் "காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது' என்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.÷மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். "ரய் ஃபுகு மரு' எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,""கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது...! விரைந்து உதவிக்கு வாருங்கள்...''எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.÷மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை   கிடைக்கவில்லை.÷1962-இல் "பிளைட்-19' தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,""நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை...'' என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் "அர்கோசி' எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,""விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது'' எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.÷இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,"நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' எனும் கட்டுரையும், "கண்ணுக்குத் தெரியாத வெளிகள்' மற்றும் "சாத்தானின் முக்கோணத்தில்' எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், "வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்' என்று எழுதப்பட்டிருந்தன.÷கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.÷இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு' என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.÷சில ஆய்வாளர்கள், ""பெர்முடா முக்கோணப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச் சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றன'' என்று தெரிவிக்கின்றனர். மேலும் சில ஆய்வாளர்கள்,""திடீர் மீத்தேன் வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல் மூழ்கடித்துவிடுகின்றன'' என்ற தகவல்களை வெளியிட்டனர்.÷ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,""உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள்  பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய  "ப்ளேக்ரிட்ஜ்' பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்      நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக்   குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது'' என்று தெரிவித்திருந்தது.÷இதுவரை ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம்  அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது. 

Sunday, October 10, 2010

நாடுகளறிவோம்: கிரேக்கம்

நாடுகளறிவோம்: கிரேக்கம்


கிரேக்க நாடு ஐரோப்பியக் கண்டத்தில் உள்ளது. இது முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. கிழக்கில் துருக்கியும், மேற்கில் யவனக் கடலும், தெற்கில் பால்கன் மூவலத் தீவும், வடக்கில் அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.கிரேக்கம், மேற்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் பிறப்பிடம். இதன் தலை நகரம் ஏதென்ஸ். இந்த நாட்டின் ஆட்சி மொழி கிரேக்க மொழி.  "நாடாளுமன்ற குடியரசு முறை அரசியல் அமைப்பு'தான் இங்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவராக "காரொலோஸ் பப்பூலியாஸ்' என்பவரும், பிரதமராக "ஜார்ஜ் பாபன்டிரியோ' என்பவரும் பதவியில் உள்ளனர்.கிரேக்க நாடு 1,31,990 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பினைக் கொண்டது. இந்த நாட்டில் 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11,306,183 பேர் வாழ்கிறார்கள்.இங்குள்ள "பார்த்தினன்' என்பது மிகப் பழமையான, பேரழகான கட்டடமாகும். இது 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வத்தின் பெயர் "கன்னி ஆதெனா'. இந்தத் தெய்வத்திற்கு நன்றி கூறும் விதமாகவே இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இது, ஏதென்ஸ் நகரின் அக்ரோபோலிஸில் அமைந்துள்ளது. பார்த்தினன் கட்டடம், கிரேக்க நாட்டின் மாபெரும் அரசியல்வாதி பெர்க்கிளிஸின் காலமான கி.மு. 438-இல் கட்டப்பட்டது.கி.பி.1821-ஆம் ஆண்டு, மார்ச் 25-ஆம் தேதி கிரேக்க நாடு, துருக்கிய பல்மத அரசான ஆட்டோமன் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக்கொண்டது.கிரேக்க நாட்டின் தேசிய விலங்கு டால்பின் மீன். பீனிக்ஸ் பறவையின் உருவமானது     கிரேக்க நாட்டில் மிக முக்கியமாக மதிக்கப்படுகிறது. சில கிரேக்க நாணயங்களில் இந்தப்  பறவையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.உலகின் முதல் நவீன கோடைகால ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத் தலைநகர் ஏதென்சில்தான் தொடங்கியது. இப்போட்டி கி.பி. 1896-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15-ஆம் தேதிவரை "பனாதினைக்கோ' மைதானத்தில் நடைபெற்றது.மாபெரும் தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ், அவரது மாணவர் பிளாட்டோ ஆகியோர்    கிரேக்க நாட்டவர்கள். சாக்ரடீஸின் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக பிளாட்டோ எழுதிய "குடியரசு',"அரசியல்' ஆகிய நூல்கள் உலகப் புகழ் பெற்றவை.கோதுமை, ஆலிவ், முள்ளங்கி, பீன்ஸ் ஆகியவை இந்த நாட்டின் முக்கிய           விளைபொருட்கள். முக்கியத் தொழில் மீன்பிடித் தொழில். "மெüசாக்கா' என்பது        கிரேக்கத்தின் பாரம்பரிய உணவு. இது, உருளைக்கிழங்கு, தக்காளிச் சாறு, மாட்டிறைச்சி ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. "செüலகி' என்பதும் புகழ்பெற்ற உணவுதான். இது, மாடு அல்லது கோழி இறைச்சி, மீன், எலுமிச்சைகொண்டு தயாரிக்கப்படுகிறது. பூண்டு சேர்த்த ரொட்டி, பாலாடைக்கட்டி, ஆலிவ் சேர்த்த காய்கறிக்கூட்டு போன்றவையும் விரும்பி உண்ணப்படுகின்றன.கிரேக்கப் பெண்களின் பாரம்பரிய ஆடை "கரகெüனா'. வரிசையாகத் தங்க நாணயங்கள் பொருத்தப்பட்ட இந்த ஆடையினை திருமணப்பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.   ஆண்களின் உடைகள் "பெüச்டநெள்ள', "சோலிஸ்' போன்றவை.புத்தாண்டு, கிறிஸ்துமஸ்,மே தினம், ஜூலை இசைவிழா ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.ய்
கருத்துக்கள்

கிரேக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கிரேக்கர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் உள்ள தொடர்பு தமிழ்நாட்டில் யவனர்கள் காவலர்களாக இருந்த நிலைமை, கிரேக்க மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு முதலானவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை முழுமையடையும். பிற நாடுகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் தமிழ்நாட்டிற்குள்ள தொடர்பையும் குறிப்பிட வேண்டும் எனபதை நினைவில் கொள்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2010 3:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Tuesday, August 17, 2010

சுதந்திரம்: ஆகஸ்ட்டில் சுதந்திரம் பெற்ற நாடுகள்!


ந்தியாவின் சுதந்திர நாளும் பாகிஸ்தானின் சுதந்திர நாளும் நிறையப் பேருக்குத் தெரியும். உலகத்தில் பல நாடுகளுக்கும் சுதந்திரம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் கிடைத்திருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். இங்கே சில நாடுகளின் சுதந்திரநாளை வருடத்துடன் தந்திருக்கிறோம். மாதங்களில் ஆகஸ்ட்டை புரட்சி மாதம் என்றே சொல்லலாம்!
இந்தியா - 15-8-1947தென் கொரியா - 15-8-1945உருகுவே - 25-8-1825உக்ரைன் - 24-8-1991எஸ்டோனியா - 20-8-1991பாகிஸ்தான் - 14-8-1947சிங்கப்பூர் - 9-8-1965பொலிவியா - 6-8-1825சுவிட்சர்லாந்து - 1-8-1291மலேசியா - 31-8-1957மால்டோவா - 27-8-1991நைஜர் - 3-8-1960இந்தோனேஷியா - 17-8-1945ஜமைக்கா - 6-8-1962சாட் - 11-8-1960பெனின் - 1-8-1960ஆப்கானிஸ்தான் - 19-8-1919

Saturday, July 3, 2010


இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்

ஜூலை 2, 2010
கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிவது எல்லாம் ஒரு காலம்
ஆனால் இப்போது மொபைல் மூலம் எளிதாக மருத்துவமனைக்கே
செல்லாமல் நம் கண்னை பரிசோதிக்கலாம் எப்படி என்பதைப்பற்றி
தான் இந்த பதிவு.

கண்களை பரிசோதிக்க எத்தனையோ பல புதிய வழிமுறைகள்
இருந்தாலும் அத்தனையும் தாண்டி இப்போது புதிதாக ஒரு
மொபைல் போன் மற்றும் சிறிய கருவி துனை கொண்டு நம்
கண்ணை பரிசோதித்துக்கொள்ளலாம் எந்த மருத்துவரும்
தேவையில்லை எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டாம்
காலத்தின் வேகமான வளர்ச்சியால் விஞ்ஞானிகள் இந்த
புதுவித கருவியை உருவாக்கியுள்ளனர்.இந்த கருவியை நம்
மொபைல் போனில் பொருத்திவிட வேண்டும் இதற்க்கான
அப்ளிகேசனும் இலவசமாக கிடைக்கிறது. இதை நிறுவிக்கொண்டு
நம் கண்னை எளிதாக சோதிக்கலாம். எந்த கண்ணாடி லென்ஸ்
அளவு என்ன என அனைத்தையும் நமக்கு காட்டிவிடும் இந்த
கருவியின் ஹார்டுவேர் சிக்கிராப் 2010 கொண்டும் இதற்க்கான
பெயர் நெட்ரா என்றும் வைத்துள்ளனர். அனைத்து ஸ்மார்ட்போன்
மற்றும் சேம்சங்,கூகுள் நெக்சஸ் போனிலும் இது சோதிக்கப்பட்டு
சோதனை ஓட்டத்திலே அனைவரின் கவனத்தை மட்டுமல்ல
நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த
கருவி விலைக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய சிறப்பு
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
கடவுள் சில நேரங்களில் சிறிய பிரச்சினைக்கு கூட நம்மை
முழவதுமாக சோதிப்பான் ஆனால் இறுதியில் வெற்றியை
நம் பக்கம் தருவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆயுள் முழுவதும் மாறாதது எது ?
2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன ?
3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது ?
4.குதுப்மினார் கோவிலின் நிழல் விழாத நாள் எது ?
5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது ?
6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது ?  
7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது ?
8.சணலின் சிறப்புப் பெயர் என்ன ?
9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும்
  மாநிலம் எது ?
10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள் ?
பதில்கள்:
1.ரத்தவகை, 2.சபீனா,3.தெலுங்கு மொழி,4.ஜீலை 20,
5.அஸ்ஸாம் மாநிலத்தில், 6.கங்கை டெல்டா பகுதி,
7.சில்கா ஏரி, 8.தங்க இழை,9.உத்திரப்பிரதேசம்,
10.மூன்று.
இன்று ஜூலை 1 
பெயர் : கல்பனா சாவ்லா,
பிறந்ததேதி : ஜூலை 1, 1961
இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த
முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா
விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும்
பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில்
உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக
நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் வைத்துள்ளனர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 Comments Add your own


  • 1. s.n.ganapathi  |  ஜூலை 3, 2010 at 5:01 மு.பகல்
    அன்புடன் நண்பருக்கு வணக்கம் என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.அதை விட இந்த விஷயத்தை உடனடியாக எல்லோரும் பயன்பட வேண்டும் என கொண்டு வந்து தருவது ..அதுக்குதான் பாராட்டு ..விண்மணி சிந்தனை ஒண்ணு எழுதி இருக்கீங்க பாருங்க… இந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை!!! மிக மிக அருமை. இதுபோன்ற தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை பார்த்தாலே இறைவனை கண்ட மாதிரி.. (உங்க எழுத்தை பார்த்தாலே உங்களை பார்த்த மாதிரி.)வாழ்த்துக்கள்
    பதில்

    • 2. winmani  |  ஜூலை 3, 2010 at 9:27 மு.பகல்
      @ s.n.ganapathi
      நன்றி
      பதில்

  • 3. Ilakkuvanar Thiruvalluvan  |  ஜூலை 4, 2010 at 12:00 மு.பகல்
    Your comment is awaiting moderation.
    மொபைல் / மொபைல் போன் -அலைபேசி
    கண்னை பரிசோதிக்கலாம் – கண்ணை ப் பரிசோதிக்கலாம் (கண்களை ஆய்வு செய்யலாம்)
    என்பதைப்பற்றிதான் – என்பதைப்பற்றித்தான்
    கண்களை பரிசோதிக்க – கண்களைப் பரிசோதிக்க
    துனை – துணை
    புதுவித கருவியை – புதுவிதக் கருவியை
    இதற்க்கான – இதற்கான
    அப்ளிகேசனும் – விண்ணப்பமும்
    எளிதாக சோதிக்கலாம் – எளிதாகச் சோதிக்கலாம்
    எந்த கண்ணாடி லென்ஸ் – எந்தக் கண்ணாடி வில்லை
    ஹார்டுவேர்- கருவியம்
    - இவ்வாறு அறிவூட்டும் விண்மணியின் ஒரு பத்தியில் இத்தனைப் பிழைகள் மலிந்து இருக்கலாமா? திருத்துக. பதியுநர் அல்லது எழுதுநர் விழைந்தால் பிழையின்றி எழுதுவதற்குப் பயிற்சி அளிக்கின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் விநோதமான பேட்டரி ஜார்சர்

ஜூலை 3, 2010
பேட்டரி-ஐ ஜார்ச் செய்வதற்க்கு ஜார்ச்சரில் இப்படி தான் மாட்ட
வேண்டும் என்ற நிலையை மாற்றி எப்படி வேண்டுமானாலும்
பேட்டரியை மாட்டலாம் ஜார்ச் ஆகும் என்ற புதுவகை ஜார்ச்சரை
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.


ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் இன்றுவரை முதல் இடத்தில் இருக்கும்
மைக்ரோசாப்ட்-ன் புரட்சியாக எந்த துறையில் வேண்டுமானாலும்
புதுமையை படைக்க தயார் என்று அடுத்தக்கட்ட புதிய வகை
பேட்டரி ஜார்ச்சரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் சிறப்பம்சம்
என்னவென்றால் நாம் இந்த ஜார்சரில் பேட்டரியை எந்த
கோணத்தில் போட்டாலும் ஜார்ச் ஆகும் வண்ணம் வடிவமைக்கப்
பட்டுள்ளது. பேட்டரி ஜார்ச் போடவேண்டும் என்றால் + பார்த்து
போடு என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது.
இதில் இருக்கும் இரண்டு பக்கத்திலும் பாஸிட்டிவ் நெகட்டிவ்
இருக்கும் இதனால் எப்படி பேட்டரியை மாற்றி போட்டாலும்
ஜார்ச் ஆகும்.
வின்மணி சிந்தனை
சோதனை என்பது மனதை பக்குவப்படுத்த மட்டுமல்ல
மனிதன் செய்த பாவத்தை நீக்கவும் தான் என்பதை
உணர வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குங்குமப்பூவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது ?
2.ஹோமியோபதி வைத்தியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
3.ஜப்பானில் கடல்கள் எவ்வளவு ஆழம் உள்ளது ?
4.எரிமலைக் குழம்புகளால் உருவாக்கப்பட்ட தீவு எது ?
5.விண்வெளியில் மிதந்த முதல் வீரர் யார் ?
6.சூரியனை பெண் தெய்வமாக வணங்கும் நாடு எது ?
7.பொருளாதாரத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார் ?
8.பசுமை மாறாக்காடுகள் எப்பகுதியில்அதிகம் காணப்படுகின்றன?
9.டீசல் ரயில் என்ஜின்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன ?
10.பெட்ரோலியம் எந்த மொழிச்சொல் ? அதன் பொருள் என்ன?
பதில்கள்:
1.ஸ்பெயின், 2.சாமுவேல் ஹானிமேன்,3.1667 மீட்டர் ,
4.ஹாவாய்த் தீவு,5.ஏ.லியனெவ், 6.ஜப்பான்,
7.ஆடம் ஸ்மித், 8.பூமத்திய ரேகைப் பகுதியில்,9.வாரணாசி,
10.லத்தீன் மொழிச் சொல் - பாறை எண்ணெய்.
இன்று ஜூலை 2
பெயர் : ஹேர்மன் ஹெசே,
பிறந்ததேதி : ஜூலை 2, 1962
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற
கவிஞர், நாவலாசிரியர், ஓவியர்.1946 இல்
நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள்,
கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf,
Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள்
முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Leave a Comment Add your own

1. Ilakkuvanar Thiruvalluvan  |  ஜூலை 3, 2010 at 11:40 பிற்பகல்
Your comment is awaiting moderation.
charger என்பதைக் கிரந்த எழுத்தில் தவறுதலாகக் குறிப்பதை விடத் தமிழில் மின்னேற்றி எனக் குறிக்கலாம். அடிக்கடிப் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்பட்டியலை எனக்கு அனுப்பி வைத்தால் தமிழ்க் கலைச் சொற்களைக் குறிப்பிட்டு அனுப்புகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, May 19, 2010

Health Benefits of Banana 40,912 views

Banana is an effective fruit for health benefits. The mixture of carbohydrates and vitamins present in banana helps an energy increase. The natural fiber in banana also gives to the many health benefits. Here are some important benefits of banana.

Vitamins and Minerals: Banana high in Vitamins, as Vitamin A is important for development of tissue in eyes and growth of the skin. Vitamin B is also present which help in calming the nervous system. Banana

Blood Pressure: Banana is a natural source of potassium. Potassium is important for the human body as it helps in body’s fluid level, body cells and controlling in blood pressure.

Ulcers: Bananas contain protease inhibitors that help eliminate bacteria in the stomach and reduce acidity. Thus problem of ulcer reduces.

Anemia: Banana rich in iron, which improve the body’s hemoglobin function. Thus banana is ideal fruit for people who are suffering from Anemia.

Depression: Banana contains amino acid (tryptophan) which converted by the body into serotonin that relaxes a person.

Constipation: Banana is high in fiber, it is perfect remedy for constipation.

Smoking: Bananas can also help people trying to give up smoking, as it contains Vitamin C, A1, B6, B12 and potassium, which help the body recover from the effects of nicotine withdrawal.

According to Research of “New England Journal of Medicine states” – A regular intake of banana in your diet can help reduce the possibility of stroke by up to 40 percent.

SocialTwist Tell-a-Friend

Related Posts:

  1. Benefits of Almond Almond is a one of the healthiest and most nutritious...
  2. Health Benefits of Juices Juices are very healthy and source of vitamin and energy....
  3. Benefits of Lemon Lemon is one of the easily available fruit. It is...
  4. 10 Health Benefits of Eggs Eggs are considered as the best nutritious breakfast item. Eggs...
  5. Benefits of Milk Drinking milk is always good for health not only for...
Tags: , , , , , , , , ,

Related posts

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (21 votes, average: 4.52 out of 5)
Loading ... Loading ...

Note:
If you are suffering from any kind of diseases like blood pressure, diabetes, heart problems, skin allergies or some other health infections then consult your doctor or medical expert before using any of the above health tips.

Wednesday, May 5, 2010

வின்மணி சிந்தனை
நான் கஷ்டப்படும் போதெல்லாம் என் அருகில் நின்ற
தாயை நான் பணம் சம்பாதித்தபின், அன்பாக ஒரு வார்த்தை
பேசக்கூட நேரம் இல்லை என்று கூறினால் சத்தியமாக நான்
மனிதனே இல்லை. அவள் என்னிடம் எதிர்பார்ப்பது பணம்
அல்ல பாசம் தான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.திட்டக் கமிஷனின் தலைவர் யார் ?
2.நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பெயர் ?
3.மிகச்சிறிய விலங்கின் பெயர் என்ன ?
4.உப்பை பிரித்தால் கிடைப்பது என்ன ?
5.பண்டைய இந்தியாவில் கப்பற்ப்படை வைத்திருந்த
தென்னிந்திய மன்னர்கள் ?
6.மின்கட்டணம் எந்த அலகில் வசூலிக்கப்படுகிறது ?
7.நத்தையின் கூடு எந்தப்பொருளால் ஆனது ?
8.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் ?
9.இந்தியாவின் முதல் பெண் ஓட்டுனர் யார் ?
10.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

பதில்கள்:
1.பிரதமர்,2.திரிபலா, 3.அமீபா,4.சோடியம் குளோரின்
5.சேரர்கள் , சோழர்கள்,6.கிலோவாட்ஸ்,
7.கைட்டின் என்ற சுண்ணாம்பு, 8. புகைப்பிடிப்பது
9.வசந்த குமாரி,10.1986

இன்று மே 5 
பெயர் : முதலாம் நெப்போலியன்,
மறைந்த தேதி : மே 5, 1821
பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும்,
அரசியல் தலைவனாகவும் இருந்தவர். தற்கால
ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம்
குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில்
ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர்,
பிரெஞ்சுப் பேரரசர், இத்தாலியின் மன்னர், சுவிஸ்
கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின்
காப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Monday, May 3, 2010

வின்மணி சிந்தனை
நல்லதையே மட்டும் செய்ய நினையுங்கள் அதையே சொல்லுங்கள்
யார் நமக்கு தொந்தரவு கொடுத்தாலும் கவலைப்படாதீர்கள் காலம்
கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்லும் நாம் யார் என்று காட்டும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2.இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப்படம் எது ?
3.இந்தியாவில் வருமான வரி புழக்கத்திற்க்கு வந்த ஆண்டு எது ?
4.ஓமன் தலைநகரம் எது ?
5.சிற்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
6.கங்கை உற்பத்தியாகும் இடம் எது ?
7.புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
8.காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன ?
9.பொற்கோவில் நகரம் எது ?
10.அமிலங்களின் சுவை என்ன ?

பதில்கள்:
1.கெப்ளர்,2.நூர்ஜஹான், 3.1860-ல்,4. மஸ்கட்
5.15 ஆண்டுகள்,6.கோமுகம் ,7.தாய்லாந்து, 8. ராம்
9.அமிர்தசரஸ்,10.புளிப்பு

இன்று மே 3 
பெயர் : சுஜாதா ,
பிறந்த தேதி : மே 3, 1935
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில்
ஒருவராவார்.இயற்பெயர் ரங்கராஜன்.தனது
தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர்
பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள்,
நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள்,
கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி
நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


வின்மணி சிந்தனை
அடுத்தவர் நலனில் அக்கறை எடுக்கும் யாரும் தன்
நலனை பற்றி கவலைப்பட தேவையில்லை எனென்றால்
அதை கடவுள் பார்த்துக்கொள்வார்.

TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.குளிர்காலத்தில் அதிக மழை பெறும் மாநிலம் எது ?
2.இந்தியாவில் முதல் அனுமின் நிலையம் எங்குள்ளது ?
3.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
4.தமிழ்நாட்டின் முதல் பெண்மேயர் யார் ?
5.கடல் மட்டத்திற்க்கு கீழே உள்ள நாடு எது ?
6.பெண்குதிரைக்கு எத்தனை பற்கள் ?
7.பைபிள் எந்த மொழியில் எழுதப்பட்டது ?
8.சர்வதேச உணவுப்பொருள் எது ?
9.நமது உடலில் வியர்க்காத பகுதி எது ?
10.முதல் கிரிக்கெட் நேர்முக வர்ணனை எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?

பதில்கள்:
1.தமிழ்நாடு,2.தாராப்பூர், 3.வன்மீகம்,4. தாரா செரியன்
5.டென்மார்க்,6.40 ,7.ஹீப்ரு, 8.முட்டைகோஸ்,9.உதடு,
10.1930-ல்

இன்று மே 2 
பெயர் : லியொனார்டோ டாவின்சி
மறைந்த தேதி : மே 2, 1519

ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக்
கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும்,
பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும்
ஆவார். ஒரு பல்துறை மேதையாகக்
கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான
ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி
விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa)
போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

வின்மணி சிந்தனை
நாம் வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது சிலர் நம்மை
முந்தி அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள் ஆனால்
உண்மையிலே அவர்களுக்கு அது பலன் தராது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.முதன் முதலில் மின்சார இரயில் ஓடிய நாடு எது ?
2.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு ?
3.மனிதனின் தலைமுடி வருடத்திற்க்கு எவ்வளவு வளர்கிறது ?
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எந்த நாடு ?
5.சீனாவின் புனித விலங்கு ?
6.உலகிலேயே மிகவும் பழமையான தேசியக்கொடி எது ?
7.தங்கப்போர்வை நிலம் எது ?
8.தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
9.உலகிலேயே மிகப்பெரிய பாம்பு எது ?
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.ஜெர்மனி 1881,2.நியூசிலாந்து, 3.6 அங்குலம்,
4. இந்தியா,5.பன்றி,6.டானிஷ் நாட்டு கொடி,7.ஆஸ்திரேலியா,
8.ஒரு முறை,9.அனகோண்டா, 10.பிட்மேன்
இன்று மே 1 
உலகத் தொழிலாளர் தினம்
தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான
போராட்டமும், சிகாகோ தியாகிகளின்
தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக
உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
இந்நாளில் அனைத்து உழைப்பாளர்களுக்கும்
இதயம் கனிந்த அன்பான வாழ்த்துக்கள்

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


வின்மணி சிந்தனை
ஆபத்து காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்
உதவி செய்யும் நபருக்கு பெயர் தான் “ நண்பன் “
நாம் சென்ற பின் நம்மை பற்றி புறங்ககூறுபவன் உண்மையான
நண்பன் இல்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் ?
2.நதிகள் இல்லாத நாடு எது ?
3.சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு என்ன ?
4.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
5.காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ?
6.ஈரானின் பழைய பெயர் என்ன ?
7.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ?
8.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ?
9.இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில்
உள்ளது ?
10.லில்லி பூக்களை உடைய நாடு எது ?

பதில்கள்:
1.செவ்வாய் கிரகம்,2.சவூதி அரேபியா, 3.மீத்தேன்,
4.முகாரி ,5.நுரையீரல்,6.பாரசீகம்,7. 200 லிட்டர்,
8.55 மொழிகளில்,9.அருணாசலப்பிரதேசம், 10.கனடா
இன்று ஏப்ரல் 30 
பெயர் : தாதாசாஹெப் பால்கே,
பிறந்த தேதி : ஏப்ரல் 30, 1870
தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind
Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக
கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில்
பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை
உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே
இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப்
பால்கே விருது நிறுவப்பட்டது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

வின்மணி சிந்தனை
நல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும் தீங்கு செய்ய
மனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு
கெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ?
3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன ?
5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?
6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ?
7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ?
8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
9.அம்ரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?

பதில்கள்:
1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,
5.88.9%,6.குடியரசுத்தலைவர்,7.அமெரிக்கா,8.6 கி.மீ,
9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ
இன்று ஏப்ரல் 29 
பெயர் : ரவி வர்மா,
பிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848

நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில்
வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி
ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.உலகப்புகழ்
பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
உங்களால் பாரததேசத்திற்க்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

வின்மணி சிந்தனை
அண்ணதானம் சாப்பிட வந்துவிட்டு சாப்பாட்டில் அது சரியில்லை
இது சரியில்லை என்று கூறும் நபர்களின் குடும்பம் ஒற்றுமை
இல்லாமல் சென்றுவிடும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த் ஆண்டு எது ?
2.பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும்
நாடு எது ?
3.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
4.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
5.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
7.விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்க்கும் மாநிலம் எது ?
8.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9.சூரியனின் வயது ?
10.பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?

பதில்கள்:
1.1964,2. தாய்லாந்து, 3.ஈசல், 4. குதிரை,
5.அரிசி,6.ஆறுகள்,7. பஞ்சாப்,8.9 பிரிவுகள்,
9. 500 கோடி ஆண்டுகள், 10.எகிப்து
இன்று ஏப்ரல் 28
பெயர் : உ.வே.சாமிநாதையர்,
பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்
தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்
உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Tuesday, April 20, 2010


இணைய உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்

April 20, 2010

இணையத்தில் ஆங்கில மொழி அறிவை வளர்க்கும் வீடியோவில்
இருந்து பல தரப்பட்ட பயன்தரும் வீடியோக்கள் இணையதளத்தில்
கிடைக்கின்றன அவ்வாறு இணையதளங்களில் கிடைக்கும்
வீடியோவை எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.

படம் 1

முக்கியமான வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோவை
எந்த மென்பொருளும் இல்லாமல் உடனடியாக தரவிக்கி நம்
கணினியில் சேமிக்கலாம் இன்று பிரபலமாக இருக்கும் யூடியுப்,
மெட்டாகேபே,டெய்லிமோஸன்,வேகொ,பிளிக்கர் மற்றும் கூகுள்
வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோ பக்கத்தின் யூஆரெல்
முகவரியை மட்டும் கொடுத்து நாம் நம் கணினியில் சேமித்து
வைத்துக்கொள்ள புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது.

இணையதள முகவரி : http://savevideo.me

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் தரவிரக்க விரும்பும்
இணையதளத்தின் முகவரியை கொடுத்து Download என்ற
பொத்தானை அழுத்தி வீடியோவை நம் கணினியில் தரவிரக்கிக்
கொள்ளலாம். ( படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது) உதாரணமாக நாம்
யூடியுப்-ன் யூரெல் முகவரியை கொடுத்துள்ளோம். நாம் தரவிரக்க
கொடுத்திருக்கும் யூடியுப்-ன் வீடியோவின் திரையையும் (screenshot)
நமக்கு காட்டும். கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
பசிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்றால்,
நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்து என்ன செய்ய ?

வினாக்கள் மற்றும் பதில்கள்

1.அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்சொல் எது ?
2.இந்தியாவின் மிக உயரிய வீர விருது எது ?
3.காப்பர் நாடு எது ?
4.பாலைவனங்களில் காணப்படும் செடி வகை யாது ?
5.ஆபரணங்களில் தங்கத்தை விட விலை உயர்ந்தது எது ?
6.உலகிலேயே சில்க் அதிகமாக ஏற்றுமதி ஆகும் நாடு எது ?
7.இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் எது?
8.ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ?
9.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன ?
10.பாலைத் தயிராக்கும் பாக்டீரியா எது ?

பதில்கள் :
1. தி ( The),2.பரம்வீர் சக்ரா, 3.ஷாம்பியா,
4.காக்டஸ்,5.பிளாட்டினம்,6.சீனா,7.பெங்களுர்
8.ஸக்கர் மீன்கள், 9. 2.5 செ.மீ, 10.லாக்டோ பாஸிலஸ்
இன்று ஏப்ரல் 20 
பெயர் : சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
பிறந்த தேதி : ஏப்ரல் 20, 1910

மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட
விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய
வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும்
முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி
புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப்
பேராசிரியர்.ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை
நூலை வெளியிட்டவர்

Tuesday, April 13, 2010



வினாக்கள் மற்றும் பதில்கள்
1. குதிக்கத் தெரியாத மிருகம் எது ?
2. இந்திய நாட்டின் முதல் கற்கோவில் எது ?
3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4. வெள்ளை யானை எந்த நாட்டில் காணப்படுகிறது ?
5. இசைத்தட்டை கண்டுபிடித்தவர் யார் ?
6. எளிமையான அமினோ அமிலம் எது ?
7.சனியின் பெரிய கோள் எது ?
8. உலகிலேயே மிகப்பெரிய கடிகாரம் எது ?
9. ரஞ்சி கோப்பைக்கான போட்டி தொடங்கிய ஆண்டு ?
10. இரண்டு இடைவேளைகளை கொண்ட படம் எது ?

பதில்கள்:
1.யானை,2.காஞ்சி கைலாசநாதர் கோவில்,3. இந்தியா,
4.தாய்லாந்து,5.பீட்டர் கோல்ட்மார்க்,6.கிளைசின்
7.டைட்டான்,8.பிக்பென் - இங்கிலாந்து,9.1934,
10.சங்கம்
இன்று ஏப்ரல் 12
பெயர் :பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
மறைந்த தேதி : ஏப்ரல் 12, 1945

32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.
அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை
நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு
தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத்
தெரிவுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார
நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றில்
நேரடிப் பங்கு வகித்தவர். ஐக்கியஅமெரிக்காவின் மூன்று
முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.


-------------------------------------------------------------------------..

  • 12. Ilakkuvanar Thiruvalluvan | April 13, 2010 at 11:00 பிற்பகல்

    Your comment is awaiting moderation.

    தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனும் அறிஞர்களின் வே்ண்டுகோளை ஏற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்திய பின்பும் சி்த்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக அறிவிப்பது ஏன்?

    கிறித்துவ ஆண்டின் தொடக்கம் சனவரி முதல் நாளுக்கு மாறிய பின்பும் ஏப்பிரல் முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடியவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்றனர். அது போல் சித்திரை முட்டாள்களை உருவாக்க எண்ணுகிறீர்களா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    பதில்