Monday, August 26, 2013

கண்ணைச் சுற்றிக் கருவளையம் - போக என்ன செய்வது ?

உடல் மற்றும் மன நிலையை எடுத்துக் காட்டும் கருவளையம்

பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான அதிக கவனம் செலுத்த வேண்டிய சருமமாக உள்ளது. இதனை காக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
உறக்கமின்மை, மனக்கவலை, மகிழ்ச்சி, உடல் நலக் குறைவு, சோர்வு, மன அழுத்தம் என பல விஷயங்களை இந்த கருவளையம் காட்டிக் கொடுத்துவிடும்.
இது மட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாகவும், சத்துக் குறைவாலும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு கருவளையம் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து அதன் மூலமாகத்தான் கருவளையத்தைப் போக்க வேண்டுமே ஒழிய, வெறும் கருவளையத்தைப் போக்க சிகிச்சை பெறுவது எந்த வகையிலும் பலன் தராது.
சிலருக்கு பரம்பரை ரீதியாகவே கருவளையம் ஏற்படலாம். அவ்வாறானவர்கள், சில முயற்சிகள் செய்வதால் ஓரளவுக்கு அதனை கட்டுப்படுத்தலாம். முழுவதுமாக போனாலும், அது மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உறக்கமின்மை காரணமாக சிலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது அவ்வப்போது வந்து, பின்பு மறைந்துவிடும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நன்கு உறங்கினாலே போதுமானது. உறக்கம் குறையும் போது உருவாகும் கருவளையமானது, உங்களது உடல்நிலை எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகிறது.
சிலருக்கு சத்துக் குறைவால், கண்களுக்கு அருகே உள்ள சருமம் சுருங்கி அதனால் கருவளையம் தோன்றுகிறது. இதனை போக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். புரதமம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் தானாகவே இந்த கருவளையும் மறைந்து விடும்.
சிலருக்கு அதிகப்படியான பணி பளுவால் கருவளையம் ஏற்படுகிறது. அதிக நேரம் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள், தொடர்ந்து டிவி பார்ப்பவர்களுக்கும் இந்த கருவளையம் ஏற்படுகிறது.
எனவே, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்லாமல், அதிக உடல் உழைப்பும், டென்ஷனும் கூட கருவளையத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல், வேலைகளை பகிர்ந்து கொள்வதால், வேலை பளு குறையும், எனவே எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று எண்ணாமல் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்து அளியுங்கள்.
சிலருக்கு ரத்த சோகை காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுகளையும், ரத்தத்தை அதிகரிக்க உதவும் காய்கறிகளையும் அதிகம் சாப்பிட்டு ரத்த சோகையை சரி செய்தால், இநத் கருவளையமும் தானாகவே மறைந்துவிடும். கீரை, நெல்லிக்காய், பீட்ரூட், நாவல்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது.
எனவே, கருவளையம் வந்து விட்டதே என்று எண்ணி அதற்காக பல க்ரீம்களை போட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாமல், முதலில் எதனால் கருவளையம் வந்தது என்று கண்டறிந்து அதனை குணப்படுத்த முயலுங்கள். கருவளையம் தானாகவே சரியாகிவிடும்.


ஈகரை கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ?

Posthttp://www.eegarai.net/t93597-topic  by Muthumohamed on Thu Dec 27, 2012 1:22 am
கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.

*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.

கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.

வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.

படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.

2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.

3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.

4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.

6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.

7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.

8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.


நன்றி
பரமக்குடி சுமதி(இன்று ஒரு தகவல்)

 


Sunday, August 25, 2013

மூன்றாவது தாருங்கள்...

மூன்றாவது தாருங்கள்...






மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நகைச்சுவை உணர்வை விளக்கும் ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை நண்பர் ஆறுமுகம் என்பவர் தம்முடைய குடும்பத் தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதில் சாட்சி கையெழுத்திட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெரு என்பது. அதை நீற்றுக்காரத் தெரு என்றும் கூறுவர். ""இந்த இரண்டில் எதைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம்'' என்று அவர் கேட்டபொழுது, மீனாட்சிசுந்தரம்,
""இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு என்று போட்டுவிடும்'' என்று கூறினாராம். அவர் கூறியதில் உள்ள நகைச்சுவை உணர்வை அறிந்து அனைவரும் மகிழ்ந்தனராம்.
மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு) ஒரு சொல். இரவில் சுண்ணாம்பை அவசியம் ஏற்பட்டாலொழிய இரவல் வாங்கக்கூடாது என்பார்கள். அப்படித் தேவைப்பட்டால் "மூன்றாவது தாருங்கள்' என்றுதான் கேட்ட வேண்டும். கிராமத்தில் இன்றும் இது வழக்கத்தில் உள்ளது.

Tuesday, August 20, 2013

அணுகுண்டுகளையும் எதிர்கொள்ளும் கரப்பான் பூச்சி




அணுகுண்டுகளையும் எதிர்கொள்ளும் கரப்பான் பூச்சி

ரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் குருதி வெள்ளை நிறத்தில் காணப்படும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுத் திரள்கள் உள்ளன. எனவே, இதன் தலையை வெட்டி விட்டால் கூட, கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர் வாழும். அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான் பூச்சிகள் வாழும் எனவும் நம்பப்படுகிறது. 

ஆவாரம் பூ

ஆவாரம் பூ

ங்க க் காலத்தின் ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம் பூ என அழைக்கப்படுகிறது. தொல்காப்பியர் இந்த மரவினத்தை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். “ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும் போது ஆவிரங்கோடு, ஆவிரஞ் செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம் பூ என வரும்” என்கிறார். சங்க காலத்தில் பனை மட்டைகளால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ, தற்போது தைப் பொங்கல் விழாவில் பயன்படுத்தும் பூவாக மாறியுள்ளது. தைப் பொங்கல் கொண்டாட்டத்தின் போது, காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்கு தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம் பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த ஆவாரம் பூ பல நோய்களுக்கு மருந்தாகவும் திகழ்கிறது. நீரிழிவு, மேக நோய்கள், நீர் கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீரக எரிச்சல், வெள்ளைப் படுதல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக ஆவாரம் பூ பயன்படுத்தப்படுகிறது. ஆவாரை இலையை பாசி பருப்பு, பூலாங் கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்து வர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும்.
 

Saturday, August 10, 2013

இழுப்பை விரட்டும் மிளகு


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / இழுப்பை விரட்டும்
இழுப்பை விரட்டும்

இழுப்பை விரட்டும் மிளகு

மிளகு, மலை நாடுகளில் பயிராகும் ஒருவகை கொடி. இது மரங்களைச் சுற்றி ஏறி அடர்த்தியாய் வளரும். இதன் பழத்துக்கு மிளகு என்று பெயர். இந்த பழத்தின் பழுத்த தோல் உதிர்ந்தால் அதை வெள்ளை மிளகு என்பர். எந்திரத்தின் மூலம் மிளகுத் தோலை உரித்து அதை வெள்ளை மிளகு என்போரும் உண்டு.பச்சை மிளகு குன்மம், வாயு, சுவையின்மை, பக்கவாதம், ரத்த குன்மம், செரியாமை, காமாலை முதலியவற்றை நீக்கும். காய்ந்த மிளகை குளிர் ஜிரம், வாயு நீக்கம், வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற உபாதைகளுக்கும் வைத்தியர்கள் பயன்படுத்துவார்கள்.இதன் இலையும் மருத்துவ குணமுடையதே! மிளகுத் தூளை கஷாயமிட்டு அருந்த தொண்டை கம்மல், தொண்டை செருமல் நீங்கும்.
மிளகு தைலத்தினால் நாட்பட்ட வலி, நோய்கள், தலைக்கனம், செவிடு போகும், தெளிவு உண்டாகும். மேலும் இத் தைலத்தைக் கொண்டு தலைமுழுகி வர சோபை, பாண்டு, இருமல், நீர்க்கோவை தலைவலி, பலவகை தினவு சுரம் முதலியவை நீங்கும்.சில வைத்தியர்கள் வாந்தி பேதி நிற்க மிளகுடன் பெருங்காயம், அபின் கலந்து கொடுப்பார்கள். இதற்கு கபாடமாத்திரை என்று பெயர். இது ‘இம்காப்ஸில்’ கிடைக்கிறது. இம்மாத்திரையை ஒரு மணிக்கு ஒருதரம் எச்.ஐ.வியில் பாதிக்கப்பட்டு பேதியாகும் வியாதியஸ்தர்களுக்கு கொடுக்கலாம். உடனே பேதியாவதும், வாந்தியும் நிற்கும்.மிளகுத்தூள், எருக்கம் வேர், பனைவெல்லம் தகுந்த அளவு சேர்த்தரைத்து தினை அளவு மாத்திரை செய்து தினம் ஒருவேளை சாப்பிட்டுவர இழுப்பு நோய் வராது.
அதைப்போலவே மிளகுத்தூள், வெங்காயம், உப்பு இவைகளை சேர்த்தரைத்து தலையில் காணும் புழுவெட்டிற்கு பூச முடி முளைக்கும்.சகாயமான விலையில் மிளகு கிடைக்கும் போது அதனை லேசாக இடித்து, அதனுடன் சம அளவு உணவு பொருளுக்கான ஆல்கஹாலை கலந்து சிறிது நேரம் ஊறவைத்து டிஸ்டிலேஷன் செய்தால் ஆல்கஹாலும், சுத்தமான மிளகு எண்ணெயும் பிரிந்துவிடும். மிளகு எண்ணெய்க்கு வெளிநாடுகளில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. தொழில் முனைவேர் முயற்சிக்கலாம்.
மிளகு எண்ணெயின் மருத்துவ பயன் மிகப் பெரியது. அதனைக் கொண்டு மிட்டாய் தயாரிப்பு முதல் இருமல் மருந்து தயாரிப்பு வரை செய்யலாம்.நமது நாட்டை பொறுத்தவரை கேரளம் மிளகு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது. அவர்கள் நேரடியாக மிளகை ஏற்றுமதி செய்கிறார்கள். உலக நாட்டில் இலங்கை மிளகு உற்பத்தியில் முதலிடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த மிளகில் எண்ணெயின் அளவு அதிகம்.தொன்மையான சம்பார பொருளான மிளகை இன்னும் ஆய்வுகள் செய்தால் பல பொருட்கள் அதிலிருந்து கிடைக்கும்.

Thursday, August 8, 2013

பருக்களின் பகைவன் வெட்டி வேர்


Home / அபூர்வ த் தகவல்கள் / வெட்டிவேரு வாசம்… வெடலப்புள்ள நேசம்…
வெட்டிவேரு வாசம்… வெடலப்புள்ள நேசம்…

வெட்டிவேர் வாசம்…

 

 விடலைப்பிள்ளை நேசம்…

வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர். முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது. சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கிய கடுக்காய் – 1, இந்த இரண்டையும் முந்தினநாள் இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும்.ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.
இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவிபிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி, பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், பழைய பருக்களால் உண்டான தழும்புகள் மறைந்துவிடும். சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப்பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ‘பேக்’ இது… வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை… இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் .
இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்குப் புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும்,செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது. சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சிலஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டிவேரில் இருக்கிறது. பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் – 50கிராம்… இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள். தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

உலங்கூர்திப்பூனை!


Home / அபூர்வ தகவல்கள் / உலங்கூர்திப்பூனை - புதியபரிதி
ஹெலிகாப்டர் பூனை புதியபரிதி

 எலிகாப்டர் பூனை -புதியபரிதி

அன்பு அதிகபட்சம் என்ன செய்யும்? ஒருவரை காக்கும், ஒருவரை வளர்க்கும், உயிருடன் இருக்கும் வரை தாங்கி நிற்கும். இறந்து விட்டால்? வேண்டியவர்களாக இருந்தால் மனப்பிறழ்வுக்கு கூட இட்டுச் செல்லும். அதுவே வளர்ப்பு பூனையாக இருந்தால்… டச்சு நாட்டைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் ஒரு இசைக்கலைஞர். இவர் ஆசையாக வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். வீட்டில் ஏதோ ஒரு வேலையில் ஜேம்ஸ் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஆர்வில் என்ற அந்தப் பூனை வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டது.
அந்த நேரம் சாலையில் வந்து கொண்டிருந்த கார் பூனையின் மேல் ஏறிவிட சம்பவ இடத்திலேயே பூனை இறந்துவிட்டது.பூனை இறந்துகிடந்ததைப் பார்த்ததும், ஜேம்ஸ் கதறி, அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். பூனை இறந்த ஏக்கம் ஜேம்ஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், பூனையை அடக்கம் செய்யவும் இல்லை. ராத்திரி முழுவதும் கண் விழித்து ஒரு பைத்தியக்காரனைப் போல் ஜேம்ஸ், பூனையையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் திடீரென்று பொறி தட்டியது.
உடனடியாக பூனையின் குடல் பாகங்களை எல்லாம் எடுத்துவிட்டு, அதை சுத்தம் செய்து, அதில் பஞ்சுகளை வைத்து அடைத்து அதன் உடலை கட்டுமஸ்தாக்கி, அதில் ஹெலிகாப்டர் என்ஜின்களைப் பொருத்தி, கால்களில் இறக்கைகளை இணைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் ஹெலிகாப்டராக மாற்றிவிட்டார். இப்போது வீடு முழுக்க ஆர்வில் என்கிற பூனை பறந்துகொண்டு இருக்கிறது. இதைப் பார்த்து பலரும் தங்களது இறந்த பூனைகளை ஜேம்சிடம் கொண்டுவந்து அதே போல் செய்து தரக் கேட்கிறார்கள். என்ன கொடுமை சார் இது.

Wednesday, August 7, 2013

நோய் நீக்கும் பரங்கிக்காய் கொதி சாறு


தின இதழ் Home / அபூர்வ தகவல்கள் / பரங்கிக்காய் சூப்
பரங்கிக்காய் சூப்

பரங்கிக்காய் சூப்பு

மருத்துவ குணங்கள்:பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
தேவையான பொருள்கள்:
பரங்கிக்காய் = 1
துண்டுதக்காளி = 1
வெங்காயம் = 1
பூண்டு = 3
பல்மிளகுத்தூள் = 1
ஸ்பூன்பால் = அரை
கப்எண்ணெய் = 3
ஸ்பூன்உப்பு = தேவையான
அளவுகொத்தமல்லி = சிறிதளவு
செய்முறை:
பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள?வும்.பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.சூடான ஆரோக்கியமான ‘பரங்கிக்காய் சூப்’ தயார்.

Monday, August 5, 2013

நோய்களுக்கு ஏற்ற உணவுகளை உண்ணலாம்

ஊட்டச்சத்து குறைபாடு 

நோய்களுக்கு ஏற்ற உணவுகளை 

எடுக்கலாம்  உண்ணலாம்!

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், ஊட்டச்சத்துள்ள அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடை  சரிசெய்யலாம்.
இரத்த சோகை உள்ளவர்கள், கீரை வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
சரும நோய்களுக்கு தக்காளி, கத்தரிக்காய், நல்லெண்னை, ஆரஞ்சு, எலுமிச்சை, மீன், நண்டு போன்ற உணவு வகைகளை தவிர்க்கலாம்.
குடற்புண் உள்ளவர்களுக்கு அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு காரம், புளிப்பு, எண்னை போன்றவை தவிர்க்கலாம்.
மனஅழுத்தம் மற்றும் பதட்டம் அதிகம் ஏற்படுபவர்கள் டீ, காபி, சர்க்கரை ஆகியவை குறைத்து கொள்ள நல்ல பலனை தரும்.

வாரம் ஒரு முறை கோசுப்பூ சாப்பிடுங்கள்

வாரம் ஒரு முறை காலி பிளவர் சாப்பிடுங்கள்

காலி பிளவரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறையாவது உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம்.
இது நரம்பை பலமாக்குவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை வாரம் இருமுறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
உடலின் எடையை கட்டுப்படுத்தும் திறன் காலி பிளவருக்கு உண்டு. சேலட், கோபி மஞ்சூரியன் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை அதிகம் ஏற்படாது. வாரத்திற்கு ஒரு முறையாவது தவறாமல் காலி பிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.