வரலாற்றில் இன்று
Today in History திசம்பர் 8
Today in History திசம்பர் 8
- மனநிலைக் குறைபாடுடையோர் நாள்.
- 1609 - இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்
- 1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
- 1877 - நியூசிலத்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார் திருமதி Jenny Shipley.
- 1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் ஆங்காங், மலேயா ஆகியவற்றைத் தாக்கினர்.
- 1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தைச் சப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா சப்பான் மீது போரை அறிவித்தது.
- 1941 - சப்பானியர்கள் சிங்கப்பூரைக் குண்டு வீசித் தாக்கத் தொடங்கினர்.
- 1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு சப்பான் மீது போரை அறிவித்தது.
- 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் உலோட்ச்சு என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
- 1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி செருமனியர் அங்கிருந்த 1,400 பேரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
- 1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது.
- 1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
- 1985 - சார்க் அமைப்பு இந்தியா, பாகிசுதான், வங்காளத் தேசம், இலங்கை, நேபாளம், மாலை த் தீவு , பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
- 1987 - பெருவின் தலைநகர் (இ)லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
- 1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென இரசியா, பெலாரசு, உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
No comments:
Post a Comment