Friday, December 7, 2012

வரலாற்றில் இன்று Today in History 8/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 8

  1.     மனநிலைக் குறைபாடுடையோர் நாள்.
  2.     1609 - இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்
  3.     1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
  4.     1877 - நியூசிலத்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார் திருமதி Jenny Shipley.
  5.     1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
  6.     1941 - இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் ஆங்காங், மலேயா ஆகியவற்றைத் தாக்கினர்.
  7.     1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தைச் சப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா சப்பான் மீது போரை அறிவித்தது.
  8.     1941 - சப்பானியர்கள் சிங்கப்பூரைக் குண்டு வீசித் தாக்கத் தொடங்கினர்.
  9.     1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு சப்பான் மீது போரை அறிவித்தது.
  10.     1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின்  உலோட்ச்சு என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
  11.     1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி செருமனியர் அங்கிருந்த 1,400  பேரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
  12.     1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது.
  13.     1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
  14.     1985 - சார்க் அமைப்பு இந்தியா, பாகிசுதான், வங்காளத் தேசம், இலங்கை, நேபாளம், மாலை த் தீவு , பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
  15.     1987 - பெருவின் தலைநகர் (இ)லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
  16.     1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென இரசியா, பெலாரசு, உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.

No comments:

Post a Comment