Wednesday, December 12, 2012

வரலாற்றில் இன்று Today in History 12/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 12

    தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி துவக்கம்
    627 - பைசண்டைன் பேரரசு இராணுவம்ஃகெராகிளியசு தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.
    1098 - சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை பாப்பரசர் இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
    1787 - பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது
    1800 - அமெரிக்காவின் தலைநகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது Washington.
    1812 -இரசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.
    1817 - நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் இலக்குலான் மக்குவாரி ஆசுதிரேலியா என்ற பெயரை  க்குடியேற்ற அரசுக்குப் பரிந்துரைத்தார்.
    1862 - யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் யூ.எசு.எசு.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
    1871 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
    1896 - வானொலியின் செயல்முறையை விளக்கிக் காட்டினார் வானொலியின் தந்தை என்று போற்றப்படும் மார்க்கோனி.
    1901 - அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.
    1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
    1923 - இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
    1939 - குளிர்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வசார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
    1941 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், அங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, சப்பான் மீதும் போரை அறிவித்தன.
    1941 - அமெரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு சப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.
    1941 - யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் இட்லர் அறிவித்தார்.
    1948 - மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
    1963 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.
    1979 - ரொடீசியாவின் பெயர் சிம்பாப்வேயாக மாற்றப்பட்டது.
    1984 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஃகைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமது டாயா புதிய அதிபரானார்.
    1991 -  இரசியா சோவியத்து ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
    1997 - களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment