வரலாற்றில் இன்று
|
Today in History
|
திசம்பர் 29
- பன்னாட்டுப் பல்லுயிர் பெருக்க நாள்
- 1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.
- 1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
- 1845 - டெக்சாசு ஐக்கிய அமெரிக்காவின் 28 ஆவது மாநிலமாக இணைந்தது.
- 1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு YMCA பொசுடனில் அமைக்கப்பட்டது.
- 1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளைப் படுகொலை செய்தனர்.
- 1891 - தோமசு அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.
- 1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முசுலிம்களுக்கெனத் தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
- 1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
- 1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
- 1989 - ஆங்காங் வியட்நாமிய ஏதிலி(அகதி)களைப் பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்குக் கலவரம் மூண்டது.
- 1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment