Saturday, December 22, 2012

சிரி... சிரி...

சிரி... சிரி...



""கல்யாணத்துக்கு அப்புறமும் இதே மாதிரி என்னிடம் பிரியமா இருப்பீங்களா சுரேஷ்''
""அதில் என்ன சந்தேகம் டார்லிங். கல்யாணமான பெண்கள் என்றால் எனக்கு எப்பவும் பிடிக்கும்''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
""உன் குடையில நீயே ஓட்டை போட்டிருக்கியே ஏன்?'' ""மழை நின்னுடுச்சான்னு பார்க்கத்தான்!''
""ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும். நீங்க எப்ப ஃப்ரீ''
""எப்ப வந்தாலும் ஃப்ரீ  கிடையாது. ஃபீஸ் வாங்குவேன்''
கே.நேசினி, ஜமீன் ஊத்துக்குளி.
தலைவர்: யோவ்! இங்கே வாய்யா! ஒரு பேச்சுக்கு "இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கேட்டேன். ஜன்னல் கம்பிக்கு அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!
தொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே! நேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம். அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!
தலைவர்: ?...?...?
ந.சந்தானகிருஷ்ணன், சேலம்
வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?
டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை ஏன் கெடுக்கப்போகுது!
""31 நாட்கள் கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்பப் பிடிக்குமா? ஏன்டா?''
""மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு என் பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்''

""விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!''
""சே! விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?''
உ.ராஜாஜி, சென்னை

""ஏன்டா, உங்க அம்மா காலைலயிருந்து எதுவுமே பேசாம இருக்கா?''
""அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க, நான் ஃபெவி குயிக் வாங்கிக் கொடுத்தேன் அதான்...''
""நீ என் மகன் இல்லை...நண்பேன்டா!''
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்

""செய்தியாளர் சந்திப்பில தலைவர் சொதப்பிட்டாராமே!''
""ஆமாம்...விரும்பிப் படிக்கும் பத்திரிகை எதுன்னு கேட்டதுக்கு கொஞ்ச நாளா குற்றப் பத்திரிகைன்னு சொல்லிட்டாரு''
வி.ஜி.கேசவன், சென்னை.

No comments:

Post a Comment