Saturday, December 1, 2012

கடி

கடி

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
 அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
 சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...
 -சீர்காழி வி.ரேவதி,
 தஞ்சாவூர்.

டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
 நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!
 -டி.பச்சமுத்து,
 கிருஷ்ணகிரி.

""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
 ""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''
 -ஏ.எஸ்.இராஜேந்திரன்,
 வெள்ளூர்.

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க விட்டுல?
 சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
 -த.கிருஷ்ணஜோதி,
 திருவொற்றியூர்.
 ஏ இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
 அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!
 -சீர்காழி சாமா,
 16/29, படேல் தெரு,
 தென்பாதி, சீர்காழி 609 111.

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
 புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...
 -கோ.பெ.இளந்திரையன், கேலக்ஸி இன்ஸ்டிடியூட்,
 வெள்ளாரை அஞ்சல்,
 (வழி) தாம்பரம்,
 ஸ்ரீபெரும்புதூர் 602 105.

No comments:

Post a Comment