வரலாற்றில் இன்று
Today in History திசம்பர் 9
Today in History திசம்பர் 9
- ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள்
- 1582 (சூலியன், ஞாயிற்றுக்கிழமை) - பிரான்சு அடுத்த நாளை திங்கட்கிழமை,திசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
- 1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
- 1856 - ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
- 1868 - வில்லியம் கிளாட்சுடோன் (William Gladstone) பிரிட்டனின் பிரதமராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நான்கு முறை பிரிட்டிசு பிரதமராக இருந்தார்.
- 1905 - பிரான்சில் அரசையும் கிறித்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
- 1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் செருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
- 1922 - போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார்.
- 1937 - சப்பானியப் படைகள் சீன நகரான நான்சிங்கைத் தாக்கின.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
- 1946 - இந்தியச் சட்டசபை இராசேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
- 1953 - செனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிசுட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
- 1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
- 1963 - சிசிசி/CCC எனப்படும் குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள் முதன் முதலில் சிங்கப்பூரில் அறிமுகம் கண்டன
- 1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
- 1984 - தமிழக மக்கள் விடுதலை இயக்கம் துவக்கம்
- 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காகத் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
- 1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
- 1992 - வேல்சு இளவரசர் சார்ள்சு, இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment