Tuesday, December 22, 2009

கிறித்துமசு துணுக்குகள்!



  • கிரீஸ் நாட்டில் எல்லா நாட்டைப் போலவும் தபால்காரரின் பை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளால் நிரம்பி வழியும். ஆனால் கிரீஸ் நாட்டுக் குழந்தைகளுக்கு பண்டிகைக்கால பரிசுப் பொருட்கள் கிறிஸ்துமஸின் போது கிடைக்காது. புத்தாண்டின் போதுதான் கிடைக்கும். சிவப்பு ஆடை அணிந்து செயின்ட் வாஸல் என்பவர் ​(சாண்டா கிளாஸ்)​ போல பரிசுப் பொருள்களை வழங்குவார்.
  • கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து ப்ளஸ் மாஸ். "மாஸ்' என்றால் ஆலய பூஜை என்பது அர்த்தம். ஆக கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்துவின் பூஜை என்று அர்த்தம். கிறிஸ்துவின் பிறந்த நாளைக் குறிக்கும் இந்த சொல் கி.பி.1131-ஆம் ஆண்டிலிருந்துதான் வழக்கத்திற்கு வந்தது.
  • கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை முதலில் வடிவமைத்தவர் ஹென்றி கோலே.

Friday, September 4, 2009

உங்கள் பக்கம்



கிளி செய்திகள்!

* கிளிகளில் 500 வகையான இனங்கள் உண்டு.
* இவை சராசரியாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
* அமெரிக்காவில் உள்ள கிளிகள் மூன்றடி வரை நீளம் இருக்கும்.
* ஆஸ்திரேலியாவில் வெள்ளைக் கிளிகள் உண்டு.
* நீல வண்ணக் கிளியும் அமெரிக்காவில் உள்ளது.
* முட்டைகளை ஆண், பெண் கிளிகள் மாறி மாறி அடைக்காக்கும்.

நெ.இராமன், சென்னை-74.


நாடுகளின் தேசியப் பறவைகள்!

* தென்னாப்பிரிக்கா நாட்டு தேசியப் பறவை நீலக் கொக்கு ஆகும்.
* ஜெர்மனி நாட்டு தேசியப் பறவை வெள்ளை நாரை.
* ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை ஈமு.
* பொலிவியா நாட்டின் தேசியப் பறவை ஆன்டியன் கான்டர்.
* ஹங்கேரி நாட்டின் தேசியப் பறவை கிரேட் பஸ்டர்டு. இது விரைவாக பறக்கும் தன்மை கொண்டது.

த.ஜெயபிரகாஷ், கலவை.


வேலூர் கோட்டை!

* இந்தியாவில் அணுசக்தி கமிஷன் 1948 ஆகஸ்ட் 10-ம் தேதி நிறுவப்பட்டது.
* வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
* "மில்லினியம் மகாத்மா விருது' கேரளா முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு வழங்கப்பட்டது.
* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் உள்ளது.
* இந்திய திரைப்படத் தந்தை என்று போற்றப்படுபவர் தாதா சாகிப் பால்கே. சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.

செயின்ட் தாமஸ் மனோகரன், நெல்லித்தோப்பு.


பிரபல தலைவர்களின் சமாதிகள்!

* காந்தியடிகளின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.
* நேருவின் சமாதி சாந்திபவனில் உள்ளது.
* இந்திராவின் சமாதி சக்திஸ்தல்லில் உள்ளது.
* ராஜீவ்காந்தியின் சமாதி வீர்பூமியில் உள்ளது.
* லால்பகதூர் சாஸ்திரியின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.
* ஜகஜீவன் ராம் சமாதி சமதா ஸ்தல்லில் உள்ளது.
கே.என்.பாலகிருஷ்ணன், மடிப்பாக்கம்.


சீனாவின் தேசிய விளையாட்டு!

* வயிறும், ஜீரண உறுப்பும் இல்லாத உயிரினம் ஈசல்.
* பெரிய பலூன்களில் நிரப்பப்படும் வாயு ஹீலியம்.
* டூத் பிரஷ் 1948-ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
* நெப்போலியன் தோற்றுப் போன வாட்டர்லூ போர் 1815-ம் ஆண்டு நடைபெற்றது.
* சீனாவின் தேசிய விளையாட்டு பிங் பாங்.

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.


கல்லீரலின் எடை!

* ஒரு மணி நேரத்தில் 100 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. ஓர் ஆண்டில் 8,67,000 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.
* மனித உடலின் எடையில் ஆக்ஸிஜன் 65 சதவீதம் உள்ளது.
* இரைப் பையின் எடை 4 அவுன்ஸ்.
* நமது கல்லீரலின் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது.
* மனித உடம்பின் எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட்தான் அதிகம் உள்ளது.
* மனித உடலில் நீரைச் சமநிலைப் படுத்தும் உறுப்பு சிறுநீரகங்கள்தான்.

இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.


தீப்பெட்டி சரித்திரம்!

தீப்பெட்டியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஜான்வாக்கர் என்ற ஆங்கிலேயர். இவர் துப்பாக்கியில் வேகமாக தீப்பற்ற வைக்க பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரு குச்சியில் வைக்க முயன்றார். அப்படி முயன்றதே தீக்குச்சி கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது. ஆனால், இவர் கண்டுபிடித்த தீக்குச்சி எதில் உரசினாலும் தீப்பிடித்தது. அந்தத் தன்மையை மாற்றி தீப்பெட்டியின் ஓரங்களில் பூசப்பட்டு இருக்கும் பாஸ்பரஸில் உரசினால் மட்டுமே தீப்பிடிக்கும் பாதுகாப்பான முறையைக் கண்டுபிடித்த பெருமை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான் என்பவரையும், காரல் லன்டஸ்ட்ராம் என்பவரையுமே சாரும். இவர்கள்தான் இன்றைய "சேப்டி மேட்ச்' எனப்படும் தீப்பெட்டியை உருவாக்கியவர்கள். இவர்கள் இதை 1852-ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

என்.ஜரினாபானு, திருப்பட்டினம்.


இந்தியாவின் ஸ்காட்லாந்து!

* இந்தியாவில் மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
* தாய்லாந்து மொழிக்கு எழுத்துகள் இல்லை.
* ஒரே ஒரு ரயில் நிலையம், ஒரே ஒரு விமான நிலையம் உள்ள இந்திய மாநிலம் நாகாலாந்து.
* ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் முதன்முதலில் 1903 டிசம்பர் 17-ம் தேதி வானில் பறந்தது.
* இந்தியாவின் ஸ்காட்லாந்து என குடகு மலை அழைக்கப்படுகிறது.

இரா.சு.பிரகாசம், சோமரசம்பேட்டை.

விடுகதைகள்



1. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன?
2. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன?
3. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?
4. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார்?
5. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்?
6. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்?
7. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன?
8. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
9. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
10. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
11. தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும். அது என்ன?
12. கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான். அவன் யார்?
13. மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும். அவன் யார்?
14. குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான். அவன் யார்?
15. விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை. அது என்ன?

விடைகள்:

1.தேன்
2.ஊசி
3.மத்து
4.வானொலிப் பெட்டி
5.தலையணை
6.மெட்டி
7.தேனீ
8.மெழுகுவர்த்தி
9.வாழை
10.இடியாப்பம்
11.கிளிப்
12.நாய்
13.அடுப்புக்கரி
14.தக்காளி
15.கையுறை

கடி



""சின்ன வயசுலயே என் பையன் ரொம்ப ரோஷக்காரனா இருக்கான்.''
""எப்படி?''
""மார்க் குறைவா வாங்கியிருந்தான்னு இனிமே என் முகத்துல முழிக்காதேன்னு திட்டினேன். அதுலேர்ந்து காலையில அவனை எழுப்பினா, "நீ தூரமா போ, நான் எழுந்துக்கிறேன்'னு கறாரா சொல்றானே!''


வி.ரேவதி, தஞ்சாவூர்.

-------------------------------------------------------------------

""நீங்க எழுதுற ஜோக் ஒவ்வொண்ணும் சிந்திக்கிற மாதிரி இருக்கும்.''
""எப்படி?''
""இதுக்கு முன்னாடி இந்த ஜோக்கை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்குன்னு!''

பி.பாலாஜி கணேஷ், 240, வேளாளர் தெரு, கோவிலாம்பூண்டி, சிதம்பரம் தாலூகா-608 002.

-------------------------------------------------------------------

""எதுக்காக உனக்கு இருநூறு ரூபா கொடுத்தாங்க?''
""நான் பாட்டுப் பாடுனதுக்கு.''
""அப்புறம் எதுக்கு இந்த ஐநூறு ரூபா கொடுத்தாங்க?''
""பாட்டை நிறுத்துனதுக்கு.''

அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.


-------------------------------------------------------------------

""மாத்திரையை எடுத்துக்கிட்டு சுடுகாட்டுப் பக்கம் ஏன்டா போறே?''
""ஆவி பிடிக்கிற மாத்திரைன்னு சொன்னாங்க, அதான்!''

பி.தர்சினி, 76, ஜெ.வி. கீழத் தெரு, குடந்தை-1.

-------------------------------------------------------------------

""தத்ரூபமா படம் வரைஞ்சும் மன்னரு பரிசு தரலையா ஏன்?''
""அதுவா... போர்க் களத்துல இருந்து மன்னர் ஓடற மாதிரியல்ல படம் வரைஞ்சிருந்தேன்.''

ஜி.அப்துல்பாரி, பழனி.

-------------------------------------------------------------------

""டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை சாத்துற?''
""டாக்டர்தான் அரை மூடி டானிக் சாப்பிடச் சொன்னாரு!''

சி.விஜயா, கிருஷ்ணகிரி.

Tuesday, August 18, 2009

இறக்குமதிச் செ ய் தி (இம்போர்டட் சரக்கு)



அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இரு நாடுகளுக்குமே தோன்றியது.


"இருதரப்பிலும் ஆளுக்கொரு நாய் வளர்ப்போம். அந்த இரண்டு நாய்க்கும் சண்டை வைப்போம். எந்த நாட்டு நாய் ஜெயிக்கிறதோ அந்த நாடு ஜெயித்ததாக அர்த்தம்' என முடிவெடுத்தனர்.


அதற்கு ஐந்தாண்டு அவகாசம் வழங்கப்பட்டது.


ரஷ்யர்கள் டாபர் மேன் நாயையும் ஓநாயையும் இணைத்து புதிய வகை நாய் ஒன்றை உருவாக்கினர். அதன் ஒரு ஆண் நாயை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாய்க் குட்டிகளைக் கொன்றனர். அந்த ஒரு நாய் மட்டும் மொத்த பாலையும் குடித்துவிட்டு பிரம்மாண்டமாக வளர்ந்தது. கனத்த இரும்பு கிராதிகள் போட்ட கூண்டில் அதைக் கொண்டு வந்து நிறுத்தினர்.


அமெரிக்கர்களோ ஒன்பதடி நீளமுள்ள, நீண்ட கழுத்து கொண்ட புதுவகையான டாஷ்வுண்ட் நாயைக் கொண்டு வந்தனர்.


இரண்டும் மோதின. அமெரிக்க நாய் ஒரே நிமிடத்தில் ரஷ்ய நாயை கடித்துக் குதறி சாப்பிட்டுத் தீர்த்தது.


ரஷ்யர்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "எப்படி?' என்றனர்.


""நாங்கள் எந்த நாயையும் இனப் பெருக்கம் செய்யவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம். டாஷ்வுண்ட் போலவே ஒரு முதலையை செய்தோம். ''

Tuesday, August 11, 2009

உங்கள் பக்கம்



"தாமிர நாடு'!

* பூமியின் நிலப்பரப்பு 14,89,50,800 சதுர கிலோ மீட்டர்.
* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.
* தாமிர உலோகம் அதிகம் உள்ளதால் ஆங்கிலத்தில் "கன்ட்ரி ஆஃப் காப்பர்' என்று அழைக்கப்படும் நாடு ஜாம்பியா.
* காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு பிரேசில்.
* உலகில் உள்ள மொத்த தேக்கு மரத்தில் மூன்றில் ஒரு பங்கு மியான்மர் நாட்டில் உள்ளது.
* பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் தூரந்த் கோடு.

- கலை.ராதிகா, உத்திரக்குடி.

கிஸô பிரமிடு!

எகிப்தின் கிஸôவில் உள்ள பிரமிடு பழமையானது. இது 137 மீட்டர் உயரமும், 225 மீட்டர் நீளமும் கொண்ட பிரம்மாண்டமான முக்கோண வடிவில் கட்டப்பட்டு உள்ளது பிரமிடு. இது 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் இரண்டரை டன் எடை கொண்டவை. மொத்தக் கற்களின் எடை 7 மில்லியன் டன்கள் ஆகும். ஒரு லட்சம் வேலை ஆட்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதைக் கட்டி முடிக்க 20 வருடங்கள் ஆனது.

- எஸ்.வெங்கடேஷ், திருக்கோயிலூர்.

தேசியப் பழம்!

* வாசனைத் துறைமுகம் என்று அழைக்கப்படுவது ஹாங்காங் துறைமுகம்.
* இலங்கை தேசியக் கொடியில் உள்ள இலைகள் ஆலமர இலைகள்.
* சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
* தமிழ்ப் புதுக் கவிதையின் முன்னோடி ந.பிச்சமூர்த்தி.
* நம் நாட்டின் தேசியப் பழம், மாம்பழம்.
* அமெரிக்காவின் முதல் அதிபர் ஆப்ரகாம் லிங்கன்.

- சி.இராதாகிருஷ்ணன், கலவை.

இந்திய தேசியப் படை!

* 1857-ம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போர் துவங்கியது.
* 1885-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கம்.
* 1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது.
* 1930-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போர் துவங்கியது.
* 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தது.

- த.தமிழ்சூர்யா, கன்னந்தேரி.

ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர்!

* பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைக் கண்டறிந்த முதல் விஞ்ஞானி ஆர்யபட்டா.
* தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞான உலகிற்கு அறிவித்தவர் ஜகதீஷ் சந்திரபோஸ்.
* மாங்கனீஸ் தாதுப் பொருளை அதிகளவில் உற்பத்தி செய்யும் உலகின் முதல் இரண்டு நாடுகள் சீனா, தென்னாப்ரிக்கா.
* ஈஃபிள் கோபுரத்தைக் கட்டியவர் அலெக்ஸôண்டர் ஈஃபிள்.
* ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் குக்.

- எஸ்.சாய் ஸ்ரீஹரிஷ், சென்னை-39.

சம்பா நடனம்!

* நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தவர் லூயிஸ் ஹென்பின்.
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா.
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் லில்லி.
* "சார்க்' அமைப்பின் தலைமையகம் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.
* இங்கிலாந்தில் முதல் முறையாக தொழில் புரட்சி நடைபெற்றது.
* சம்பா நடனத்துக்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.

- கே.காயத்ரி, அருப்புக்கோட்டை.

உலகின் மிக அழகான துறைமுகம்!

* உலகில் மிக அழகான துறைமுகம் எனப் பெயர் பெற்றது சிட்னி துறைமுகம்.
* பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதனின் பெயர் தாமஸ் ஸ்காட் பால்டுவின். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.
* ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகையின் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ள மணிதான் உலகிலேயே மிகப் பெரிய மணியாகும்.
* கூர்க்கா இன மக்களின் பூர்வீகம் நேபாளம் ஆகும்.
* அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் பழைய பெயர் நியூ ஆம்ஸ்டர்டாம் என்பதாகும்.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜாப் பூ.

- ப.சிவகாமி, என்.வளையனேந்தல்.

கருத்துக்கள்

அமெரிக்காவின் முதல் அதிபர் ஆப்ரகாம் லிங்கன். - சி.இராதாகிருஷ்ணன், கலவை. The above statement by Radhakrishnan is wrong. The First President of United States of America was George Washington. Kindly publish the correct facts.

By Prof. Antony Selvaraj
8/11/2009 8:22:00 PM
விடுகதைகள்



1. அனலில் பிறக்கும்; ஆகாயத்தில் பறக்கும். அது என்ன?
2. உமி போலப் பூ; சிமிழ் போல காய். அது என்ன?
3. ஊசி நுழையாத கிண்ணத்தில் ஒரு படி நீர். அது என்ன?
4. ஒரு புட்டிக்குள் இரண்டு தைலம். அது என்ன?
5. வாயிலே தோன்றி வாயாலே மறையும் பூ. அது என்ன?
6. சிவப்பு உறைக்குள் சில்லறை காசுகள். அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
8. திரியில்லாத விளக்கு தினமும் எரியுது. அது என்ன?
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அது என்ன?
10. சூடுபட்டுச் சிவந்தவன் வீடு கட்ட உதவுவான். அது என்ன?
11. ஆற்றையும் கடக்கும், அக்கரைக்கும் போகும்; தண்ணீரையும் கலக்காது, தானும் நனையாது. அது என்ன?
12. வெள்ளை நிலத்தில் கருப்பு விதை போட்டேன். வாயால் எடுக்கலாம், கையால் எடுக்க முடியாது. அது என்ன?
13. ஆட்டத்தில் அசர வைப்பான்; பாம்பை மட்டும் அலற வைப்பான். அவன் யார்?
14. பார்த்தால் பச்சைக்கிளி; கையில் அமர்ந்தால் சிவந்த கிளி. அது என்ன?
15. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. அது என்ன?

விடைகள் :

1.புகை
2.நெல்லிக்காய்
3.தேங்காய்
4.முட்டை
5.சிரிப்பு
6.மிளகாய் வற்றல்
7.கண்ணீர்
8.சூரியன்
9.சாக்பீஸ்
10.செங்கல்
11.குரல்
12.எழுத்து
13.மயில்
14.மருதாணி
15.பூண்டு

கடி



""ஸ்கூல்ல வாத்தியாரா இருந்தவரை மேனேஜர் ஆக்கினது தப்பாப் போச்சு!''
""என்னாச்சு?''
""ஆபீஸ்க்கு லேட்டா வர்றவங்களை எல்லாம் பெஞ்ச் மீது நிற்க வெச்சிடுகிறார்!''

- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

************

""நாய் எப்பவும் வாள்வாள்னு தானே கத்தும்? இது ஏன் வீல்வீல்னு கத்துது?''
""சைக்கிள் வீல் ஏறிடுச்சாம்!''

- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

************

""அப்பா... உங்களால இருட்டுல எழுத முடியுமா?''
""முடியுமே!''
""அப்போ லைட் ஆஃப் பண்றேன். பிராக்ரஸ் ரிப்போர்ட்ல கையெழுத்து போடுங்க பார்ப்போம்!''

- டி.பி.சரவணன், 5/1076, பாரதியார் நகர், சந்தைப்பேட்டை, கிருஷ்ணகிரி-635 001.

************

""எந்த சோப்ப நீங்க குளிக்கப் பயன்படுத்துறீங்க?''
""கோபால் சோப் டாக்டர்!''
""அது என்ன புது கம்பெனி சோப்பா?''
""இல்ல டாக்டர். அது என் ரூம்ல தங்கியிருக்கும் கோபாலோட சோப்!''

- த.ஞானசெல்வன், 1, அவுலியன் சாகிப் 6-வது தெரு, ல்லீஸ் சாலை, சென்னை-2.

************
""மேனேஜர் வரும் போது நான் மரம் மாதிரி நின்னுக்கிட்டிருந்தது தப்பாப் போச்சு!''
""ஏன்... என்ன பண்ணாரு?''
""அறுத்து தள்ளிட்டாரு!''

- ஜி.மஞ்சரி, புதுப்பேட்டை.

Friday, August 7, 2009

உங்கள் பக்கம்



சகாரா பாலைவனம்!

* உலகில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
* காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்ட நாடு போலந்து.
* இத்தாலிதான் முதன்முதலில் போருக்கு விமானத்தை பயன்படுத்தியது.
* சகாரா பாலைவனம் 9 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
- டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

சிலந்தி!

* திராட்சைக் கொடி காய்க்கத் தொடங்கினால் சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பயன்தரும்.
* பறவைகளிலேயே அதிக நாட்கள் அதாவது, 56 நாட்கள் அடைகாக்கும் பறவை பல்மர்.
* ஆப்ரிக்காவில் உள்ள சிட்டுங்கா என்ற மான் இனங்கள் நீரில் மிதந்து கொண்டே உறங்கும்.
* ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 250 அடி நீளத்துக்கு வலை பின்னும்.
* காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவீத மலர்களுக்கு மணம் கிடையாது.
- வீதி.கலாநிதி, சீனிவாசபுரம்.

கடுக்காய்!

* மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம் முதலியவை பௌத்த நூல்களாகும்.
* தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலை பராக்கிரம பாண்டியன் 15-ம் நூற்றாண்டில் கட்டினார்.
* கடுக்காயில் ஆறு சுவைகளில் ஐந்து சுவைகள் உள்ளன.
* சோமநாதர் கோயில் குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* கடற்கரைக் கோயில்கள் மகாபலிபுரத்தில் உள்ளன.
* பிரபல பத்மநாபர் கோயில் திருவனந்தபுரத்தில் உள்ளது.
- தமிழ்மதி, தாதம்பட்டி.

பிரபஞ்சம்!

* பூமியை விட சூரியன் 16 மடங்கு பெரியது.
* சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் புளூட்டோ.
* சூரியனின் மையப் பகுதியில் உள்ள அதிகபட்ச வெப்பம் 1,50,00,000 டிகிரி செல்ஷியஸ்.
* சூரிய ஒளியில் இருந்து வைட்டமின்-டி கிடைக்கிறது.
- ஜி.சாயிலட்சுமி, கிருஷ்ணாபுரம்.

நல்ல தண்ணீரில் வாழும் மீன்!

* தென்னாப்ரிக்காவில் ஆரிபிஸ் என்ற ஒருவகை மான் உள்ளது. இதற்குக் குறும்புக்கார மான் என்ற பெயருண்டு.
* எலி இனத்தில் நிலா எலி என்ற இனம் ஒன்று உள்ளது. இதன் உடல் மோசமான துர்நாற்றம் உடையது.
* பைக் என்ற ஒருவகை மீன் நல்ல தண்ணீரில் மட்டுமே வாழும்.
* பழங்களை ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி என்ற இடத்தில் உள்ளது.
* பிகார் மாநிலம் போகாரோவில் இரும்பு உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.
- சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

சண்டிகர் நகரை வடிவமைத்தவர்!

* நண்டுக்கு பற்கள் அதன் வயிற்றில் உள்ளன.
* ஈக்கள் ஒரே தடவையில் 37 லட்சம் பாக்டீரியாக்களைச் சுமந்து செல்கின்றன.
* பத்து நாட்களில் நகம் ஒரு மில்லி மீட்டர் வரை வளருகிறது.
* மனிதனைக் கடிப்பது பெண் கொசு மட்டுமே.
* பெண் நீர் யானைகளை விட ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.
* சண்டிகர் நகரை வடிவமைத்தவர் கர்பூசியர்.
- செ.கருணாநிதி, வீரவநல்லூர்.

பென்டகன்!

* காற்றில் ஒலியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 380 மீட்டர்களாகும்.
* வெள்ளை அணுக்கள் 12 மணி நேரம் வரையிலும், சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் வரையிலும் உயிர் வாழ்கின்றன.
* பறக்கும் திறன் இழந்த பறவைகள் கிரி, ரியா, நெருப்புக்கோழி.
* கம்போடியா நாட்டின் தலைநகர் நாம்பென்.
* திபெத்தில் போடாலா என்ற இடத்தில் தலாய்லாமாவின் அரண்மனை அமைந்துள்ளது.
* அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் பென்டகனில் அமைந்துள்ளது.
- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

வால் ஸ்ட்ரீட்!

* இழந்த சொர்க்கம் உள்ளிட்ட புகழ்பெற்ற காவியங்களை படைத்த இலக்கிய மேதை மில்டன் பிறவியிலேயே பார்வையற்றவர்.
* தைரியத்திற்கு பெயர் போன மாவீரன் தைமூருக்கு ஒரு கால் கிடையாது.
* வாட்டர்லூ போரில் நெப்போலியனை எதிர்த்து வென்ற நெல்சனுக்கு ஒரு கண்ணும், ஒரு கையும் கிடையாது.
* அமெரிக்காவில் பங்குசந்தை வால் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
- ஜி.சிந்தியா, ராஜபாளையம்.

கடி



*** ""சார்! உங்க உடம்பு குணமாகணும்னா மீன், ஆடு, கோழி சாப்பிடறதை நீங்க உடனடியா நிறுத்தணும்!''
""அது முடியாது. எப்படிங்க அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்!''
ச.கார்த்திக் ராஜா, த/பெ.ப.சரவணன், 5/1076, பாரதியார் நகர், புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி-635 001.

*** ""எனக்கு அல்சர். அதனால காரம் சேர்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்.''
""அதுக்காக நமஸ்"காரம்' கூட சொல்லலைன்னா எப்படி?''
- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

*** ""என்னடா... டாக்டர் "சிம்மம்' ராஜான்னு போர்டு போட்டு இருக்கு!''
""யாரும் ராசியில்லாத டாக்டர்ன்னு சொல்லிடக் கூடாது பாருங்க!''
- பி.பாலாஜிகணேஷ், 240, வேளாளர் தெரு, கோவிலாம்பூண்டி, சிதம்பரம் தாலுகா-608 002.

*** ""இந்த ஊர்ல இருக்குறவங்கள்ல பாதி பேர் வீட்டுல அடுப்பு எரியுதுனா அதுக்கு இவர்தான் காரணம்னு சொல்றியே எப்படி?''
""இவர் இந்த ஊர் சமையல் கேஸ் ஏஜென்ட் ஆச்சே!''
- பரதன், எழில்நகர்.

*** ""என்னது... நீ சின்ன வயசிலே இருந்து மூட்டைத் தூக்கி படிச்சியா?''
""ஆமாங்க. புத்தக மூட்டையைத் தூக்கி படிச்சேன்!''
- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.

*** ""கண்ணன் மீது கார் மோதியது. இது என்ன காலம்?''
""கண்ணனோட போதாத காலம் சார்!''
- பி.கோபிகிருஷ்ணன், புதுப்பேட்டை.

விடுகதைகள்

First Published : 01 Aug 2009 12:00:00 AM IST

Last Updated :



1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?
2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?
3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?
6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?
8. கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும். அது என்ன?
9. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
10. ஓட்டுக்குள்ளே வீடு; வீட்டுக்குள்ளே கூடு. அது என்ன?

விடைகள் :

1. வெங்காயம்
2. மின்விசிறி
3. பொம்மை
4. தையல்காரர்
5. நிழல்
6. படகு
7. வெளவால்
8. தலைமுடி
9. தண்ணீர்
10. நத்தை

Thursday, July 16, 2009

விடுகதைகள்



1. கண்டம் விட்டு கண்டம் பாய்வான்; நெருப்பைக் கக்கியபடி பாய்ந்து செல்வான். அவன் யார்?
2. ஓட்டையில்லாத கட்டில்; எந்தப் பக்கமும் நகர்த்த முடியாது. அது என்ன?
3. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
4. வட்டமாக இருப்பான்; தீ எரிய உதவுவான். அவன் யார்?
5. பால்காம்பில் ஒன்றைக் கண்ணுக்குட்டிக்கு விட்டிருக்கு. அது என்ன?
6. கறிக்கு உதவாத கறி. அது என்ன?
7. அவசரத்துக்கு உதவுவான்; அதிவேகமாகவே செல்வான். அவன் யார்?
8. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்?
9. கொப்பரையில் பூங்கொத்து. அது என்ன?
10. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
11. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன?
12. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார்?
13. பாலிலே புழு நெளியுது. அது என்ன?

விடைகள்:

1.ராக்கெட்
2.திண்ணை
3.சாக்பீஸ்
4.வரட்டி
5.மோதிர விரல்
6.அடுப்புக்கரி
7.ஆம்புலன்ஸ் வண்டி
8.விறகு
9.கோன் ஐஸ்
10.நெருப்புக் கோழி
11.நாணயம்
12.அலாரம்
13.சேமியா பாயசம்

கடி



* ""டாக்டர்! காதுல டிரெயின் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்!''
""செக் பண்ணினேன் ஒண்ணும் கேட்கலையே.''
""அப்படின்னா ஏதாவது ஸ்டேஷன் வந்திருக்குமா டாக்டர்?!''
- எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.

* ""வாய்மை என்றால் என்ன?''
""வாய்மை என்றால் "லிப்ஸ்டிக்' சார்!''
- கே.நேசினி, பொள்ளாச்சி.

* ""ஏன்டா... உனக்கு அல்சராமே?''
""ஏன்டா அந்த வயிற்றெரிச்சலை கேட்கிற..!''
- பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

* ""டாக்டர்! நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது.''
""சரி, அந்த நாற்காலியில் போய் உட்காருங்க.''
""இரண்டு நாற்காலி இருக்கே டாக்டர் எதுல உட்காரணும்?!''
- எம்.பழனிச்சாமி, கள்ளிப்பாளையம்.

* ""அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
""நீங்க கொடுத்த "டியூப்' மாத்திரை பெருசா இருக்கு. முழுங்க பயமா இருக்கேன்னு சொன்னால், "காத்த' இறக்கிவிட்டு முழுங்குன்னு சொல்றாரு!''
- எம்.எஸ்.கே.அருள், 3/720, முனியங்குறிச்சி, பெரிய திருக்கோணம் (தபால்), அம்பாபூர் (வழி), அரியலூர் தாலுகா-621 701.

* ""டேய்... ரவி, ஏன்டா ரவி நேத்து சீக்கிரமா வீட்டுக்குப் போயிட்டே..?''
""நீங்கதானே சார் மணி அடிச்சவுடனே வீட்டுக்குப் போகலாம்னு சொன்னீங்க..!''
""ஆமாம்! அதுக்கு என்ன?''
""என் பக்கத்தில் இருந்த மணி என்னை அடிச்சவுடனே நான் வீட்டுக்குப் போயிட்டேன்!''
- ஒய்.ரவிராகு, ஒளவையார்பாளையம், கலிங்கியம் (தபால்), கோபி (தாலுகா), ஈரோடு மாவட்டம்-638 453.

உங்கள் பக்கம்



மத்தியதரைக் கடலின் திறவுகோல்!

* உலகில் அகதிகள் அதிகம் வசிக்கும் நாடு ஆப்கனிஸ்தான்.
* மத்தியதரைக் கடலின் திறவுகோல் என ஜிப்ரால்டர் நதி அழைக்கப்படுகிறது.
* இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காலநேர வித்தியாசம் அரைமணி ஆகும்.
* மாவீரன் அலெக்ஸôன்டரின் காலம் கி.மு.நான்காம் நூற்றாண்டு.
* அதிகளவில் காபி விளையும் நாடு பிரேசில்.
- ஆர்.ஜி.காயத்ரி, திசையன்விளை.

கருங்கடல்!

* காஸ்பியன் கடல் என்பது பெரிய ஏரி. இந்த நீர் உப்புத் தன்மை உடையது.
* உலகின் மிகப் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலின் அடியில் மிகப் பெரிய மலைகள் உள்ளன.
* கருங்கடல் தென்கிழக்கு ஐரோப்பாவை சுற்றி வலம் வரும் மிகப் பெரிய கடல். குளிர்காலத்தில் மூடுபனியால் இக்கடல் தண்ணீர் கருப்பாக தெரிவதால் இப்பெயர் வந்தது.
* 54 சிறிய தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவாக சிங்கப்பூர் உள்ளது.
- டி.வி.கிருஷ்ணமூர்த்தி, நங்கநல்லூர்.

7 பற்றி ஏழு செய்திகள்!

* முள்ளம் பன்றி ஒரே சமயத்தில் 7 குட்டிகளை ஈனும்.
* ரோம் நகரம் ஏழு மலைகளின் மேல் அமைந்துள்ளது.
* உலகில் ஏழு கோடி குதிரைகள் உள்ளன.
* ஜெல்லி மீன் ஏழு மாதங்கள் வரை உயிர் வாழும்.
* பாப்ளர் என்ற பறவை ஏழு ஏழாக பறக்கும்.
* ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுபவை அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிúஸôராம், நாகாலாந்து, திரிபுரா. இவை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஆகும்.
- நெ.இராமன், சென்னை-74.

சார்லி சாப்ளின்!

* கோல்கத்தாவில் சார்லி சாப்ளினுக்கு சிலை உள்ளது.
* மனித உடலில் 457 தசைகள் உள்ளன.
* நண்டு பக்கவாட்டில் நடக்கும் திறன் கொண்டது.
* கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்பு உள்ளது.
* நமது நாட்டில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.
* உலகின் மிகப் பழமையான நகரம் டமாஸ்கஸ்.
- முருகேசன், தேனி.

தொழில்புரட்சி நடைபெற்ற முதல் நாடு!

* இந்தியாவில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலம்
நாகாலாந்து.
* மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கிறது ஜப்பான்.
* முதன்முதலில் தொழில்புரட்சி நடைபெற்ற நாடு
இங்கிலாந்து.
* உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- எம்.சாரு, சென்னை-71.

வங்கதேசத்தின் முதல் பிரதமர்!

* புறாக்கள் இரண்டு முட்டைகளே இடும். பெரும்பாலும் சுத்தமான நீரையே குடிக்கும்.
* லயன், ஓமர் என்ற இனப் புறாக்களே பந்தயப் பிரியர்களால் வளர்க்கப்படுகிறது.
* சமாதானத்தின் சின்னமாக புறாவையே உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
* அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
* ஐ.நா.சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வி லீ.
* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.
மு.தமிழ்ப்பாண்டியன்,
வில்லிவாக்கம்.

லிட்டில் பாய்!

* உலகில் 757 மிருகக்காட்சி சாலைகள் உள்ளன.
* தாமரை மலரில் வெண்தாமரை, செந்தாமரை ஆகியன இரு முக்கிய வகைகள்.
* நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமா.
* ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய்.
* நவீன இத்தாலியின் தந்தை என அழைக்கப்படுபவர் கரிபால்டி.
* பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர்.
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் லில்லி.
- வெ.இராஜாராம், சங்கரன்கோவில்

மிகப் பெரிய மரம்!

* உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை வாட்டிகன் அரண்மனை.
* உலகிலேயே மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் மரம்.
* மிகப் பெரிய வைரச் சுரங்கம் கிம்பர்லி சுரங்கம்.
* உலகில் மிக உயரத்தில் உள்ள ஏரி நியூயார்க்கில் உள்ள கிரான்ட் சென்ட்ரல் ஏரியாகும்.
* இந்தியாவின் மிக நீளமான அணை ஹீராகுட் அணை.
* ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசர்தான் பொது மக்களுக்காக முதன்முதலாக பொது நூலகங்களைக் கட்டியவர்.

- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

Friday, June 26, 2009

உங்கள் பக்கம் - சுரப்பிகள்!
சிறுவர் மணி


சுரப்பிகள்!* பிட்யூட்ரி சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.* பினியல் சுரப்பிகள் மூளைப் பகுதியில் அமைந்துள்ளது.* தைராய்டு சுரப்பி கழுத்தில் காணப்படும்.* கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சுரப்பி தைமஸ்.* கணையச் சுரப்பி வயிற்றின் அருகில் அமைந்துள்ளது.* அட்ரினல் சிறுநீரக உச்சியில் அமைந்துள்ளன.நெ.இராமன், சென்னை-74.உலகின் முதல் குடியரசு நாடு!* வாசனையால் தன் உணவை கண்டறியும் பறவை கிவி.* எம்பரர் பென்குயின் என்ற பறவை தன் முட்டைகளை பாதத்திற்கடியில் வைத்து அடைகாக்கும்.* உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.* முதலில் உலக வரை படத்தை வரைந்தவர் இராடோஸ்தானிஸ்.* திரையரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.* நமது பற்கள் முழுக்க முழுக்க கால்சியத்தாலும், பாஸ்பரஸ் உப்பினாலும் உருவானவை.ஜோ.ரஞ்சித், பேரையூர்.பூமியை விட 17 மடங்கு எடையுள்ள கோள்!* ஜப்பான் மொழியிலும், அதன் அகராதியிலும் ஓய்வு என்ற வார்த்தையே கிடையாது.* அசாம் மாநிலத்தின் பழைய பெயர் காமரூப்.* இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா 1927-ம் ஆண்டு நடந்தது.* பூமியை விட 17 மடங்கு எடை கூடுதலான கோள் நெப்டியூன்.* இராமாயணத்தில் மொத்தம் 48,000 வரிகள் உள்ளன.* மகாபாரதத்தில் மொத்தம் 2,20,000 வரிகள் உள்ளன.ஆர்.ஜி.அம்பிகை ராமன், திசையன்விளை.யூகலிப்டஸ் மரத்தின் தாயகம்!* இந்தியாவில் பறவைகளுக்காகத் துவங்கப்பட்ட முதல் மருத்துவமனை புதுதில்லியில் உள்ள தி சாரிட்டி பேர்ட்ஸ் மருத்துவமனை.* மிக நீண்ட கடற்கரை கொண்ட இந்திய மாநிலம் குஜராத்.* மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய ஏரி நாகார்ஜுன சாகர். இது ஆந்திரத்தில் உள்ளது.* யூகலிப்டஸ் மரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா.* அணுசக்தியால் இயங்கிய முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் நோட்டிலஸ்.* 22 காரட் தங்கத்தில் 91.6 சதவிகிதம் தங்கம் உள்ளது.எஸ்.சபரிஷ் சௌந்தர், பழைய பேராவூரணி.கடல் கரையான்கள்!* கெரடோ என்பது கடலில் காணப்படும் நான்கு அங்குலம் கொண்ட ஒரு புழுவின் பெயர். இதைக் கடல் கரையான்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புழுக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தாக்கினால் கப்பலே கூட கவிழ்ந்து விடுமாம். இந்தப் புழுக்களில் பல்வேறு இனங்கள் உண்டு. ஒரு புழு தன் இனத்தைச் சார்ந்த வேறு எந்தப் புழுவாவது தன் பாதையில் வருவது தெரிந்தால் வேறு பக்கமாக சென்று விடும்.செ.கருணாநிதி, வீரவநல்லூர்.உலகின் மிகப் பெரிய தீவுக்கூட்டம்!* உலகின் மிகப் பெரிய தீவுக் கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.* உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து.* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம்.* உலகின் மிகப் பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.* உலகின் மிகப் பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.அர.கோ.குப்புசாமி, சேலம்.கல்லீரலின் எடை!* ஒரு மணி நேரத்தில் சராசரியாக 100 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. ஓர் ஆண்டில் 8,67,000 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.* மனித உடலின் எடையில் ஆக்ஸிஜன் 65 சதவீதம் உள்ளது.* நமது சிறுநீரகத்தில் லட்சக்கணக்கான வடிகட்டிகள் உள்ளன. இவை தினமும் 190 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.* இரைப்பையின் எடை 4 அவுன்ஸ்.* கல்லீரலின் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது.இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.மிகப் பெரிய மாவட்டம்!* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மாவட்டம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பஸ்தார்.* முயல்கள் குட்டிகளை ஈனும் போது 24-லிருந்து 36 குட்டிகள் வரை போடும்.* ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஹொன்ஷு என்ற தீவில் அமைந்துள்ளது.* ரத்தத்தில் உள்ள கொழுப்பை லெசித்தின் எனும் அமிலம்தான் கரைக்கிறது.* மனித உடம்பின் எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட்தான் அதிகம் இருக்கிறது.* ஐந்து வயதுக் குழந்தைக்கு மொத்தம் 20 பற்களே இருக்கும்.ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

உங்கள் பக்கம் :சிறுவர் மணி

உங்கள் பக்கம்
சிறுவர் மணி

தியாகிகளின் இளவரசர்!

* ஜான் ரங்கின் எழுதிய "அன்டு திஸ் லாஸ்ட்' என்ற ஆங்கில நாவல் குஜராத்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்நாவலுக்கு காந்திஜி சூட்டிய பெயர் "சர்வோதயா' என்பதாகும்.
* "தியாகிகளின் இளவரசர்' என காந்திஜியால் வர்ணிக்கப்பட்டவர் சுபாஷ் சந்திர போஸ்.
* காந்திஜி சுடப்பட்டு இறந்த போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேட்டி, மதுரை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
* காந்திஜியின் சுயசரிதையை குஜராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மகாதேவ் தேசாய்.
* காந்திஜி 2,089 நாட்கள் இந்திய சிறைகளில் இருந்துள்ளார்.
அ.அப்துல்காதர்,
மேற்குத் தாம்பரம்.

நத்தைகள் இடும் முட்டை! * மனித உடலில் நீரை சமநிலைப் படுத்தும் உறுப்பு சிறுநீரகங்கள்தான்.
* மனித ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் 90 சதவீதம் தண்ணீர்தான். மீதி 10 சதவீதம் திடப் பொருள்.
* ராணித் தேனீக்கள் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் முட்டைகள் இடுகின்றன.
* நத்தைகள் ஒரே சமயத்தில் 150 முதல் 300 முட்டைகள் இடும்.
* உயிரினங்களில் சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் மட்டுமே. இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

புன்னகை நாடு!

* கயிறு இழுக்கும் போட்டி முதன் முதலில் தோன்றிய நாடு சீனா.
* புன்னகை நாடு என்றழைக்கப்படும் நாடு தாய்லாந்து.
* உலகின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.
* ஜப்பான் மொழி தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துகள் உள்ளன. * சீனாவில் கம்யூனிஸ ஆட்சியை உருவாக்கியவர் மாசேதுங். ஆர்.ஜி.அம்பிகை ராமன், திசையன்விளை.

மயில் செய்திகள்!

* காங்கோ மயில் ஆப்ரிக்காவில் காணப்படுகிறது.
* மயிலின் தோகையின் நீளம் சுமார் 160 செ.மீ.
* ஆண் மயிலின் தோகை 6 ஆண்டுகளில் முழு வளர்ச்சியடைகிறது.
* ஒரு தடவையில் மயில் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
* இந்தியாவின் தேசியப் பறவை மயில். நெ.இராமன், சென்னை-74. ஐ.நா.சபைக்கு பெயர் சூட்டியவர்!
* எரிமலையிலிருந்து வெளிவரும் உருகிய பாறைக் குழம்பு லாவா எனப்படுகிறது.
* சீன நாட்டு மருத்துவத்தில் தேரையை பயன்படுத்துகின்றனர்.
* ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர் சூட்டியவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்.
* பதினேழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகளில் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது "லண்டன் கெசட்'.
தாமஸ் மனோகரன், முதலியார்பேட்டை.

பாரத ரத்னா விருது பெற்ற முதல் தமிழர்!

* ஞானபீட விருதைப் பெற்ற முதல் இந்தியர் சங்கர குரூப். இவர் "ஓடக்குழல்' என்ற மலையாளக் கவிதை படைப்பிற்காக 1965-ம் ஆண்டு இவ்விருதினைப் பெற்றார்.
* பாரத ரத்னா விருதை தமிழகத்தில் முதன்முதலில் பெற்றவர் ராஜாஜி.
* முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர் நெல்சன் மண்டேலா. இவர் 1990-ல் இவ்விருதைப் பெற்றார்.
ஆர்.பிருந்தா, மதுரை.

பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள நாடு ரஷ்யா!

* தமிழில் முதன்முதலாக பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928-ல் ஆரம்பிக்கப்பட்டது.

* பொங்கல் திருநாளை பஞ்சாபிலும், ஹரியானாவிலும் லோகிரி என்று அழைக்கின்றனர்.
* சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி யாத்திரை புறப்பட்ட மகாத்மா காந்தி கடந்த தூரம் 388 கி.மீ.
* உலகிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள நாடு ரஷ்யா.
முருகேசன், தேனி.

உங்கள் பக்கம்:
தமிழ்நாடு என பெயர் சூட்டியவர்
சிறுவர் மணி


* தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா.
* தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணைக்கட்டு.
* தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா.
* தமிழகத்தில் 1526-ம் ஆண்டு நாயக்கர் ஆட்சி உதயமானது.
தி.தமிழரசன், கலவை.
பால் மனிதர்!

* சியாச்சின் மலையில் உள்ள போர் தளத்திற்குச் சென்ற முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
* இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர் அமுல் நிறுவனத் தலைவர் குரியன். நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்க இவர் நடவடிக்கை எடுத்தார்.
* குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி லட்சுமி ஷைகல்.
* பனிச் சிறுத்தைகள் இமயமலை பிரதேசத்தில் வசிக்கின்றது.
* கங்காரு ஒரே தாவலில் 30 அடிகள் தூரம் வரை தாண்டும்.
வி.ஆனந்த கிருஷ்ணன், சென்னை-101.
எலும்புக் கூடில்லா விலங்கு!

* மிக விரைவாக குட்டிகளை ஈனும் பாலூட்டி சுண்டெலி.
* போலார் கரடி ஆர்க்டிக் பிரதேசத்தில் வசிக்கின்றது.
* யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு திபெத்.
* எலும்புக் கூடில்லா விலங்கு ஜெல்லி மீன்கள்.
* கடல் சிங்கங்கள் அண்டார்டிகா கடல் பிரதேசத்தில் அதிகளவில் கானப்படுகின்றன.
எஸ்.விஜயலஷ்மி, ஆதம்பாக்கம்.
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை!

* இமயத்தின் ஒரு சிகரம் நங்க பர்வதம். இதன் உயரம் 8,126 மீட்டர் .
* உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீட்டர்.
* இந்தியாவில் மிகவும் நீளமான சாலை கிரான்ட் டிரங்க் ரோடு.
* இந்தியாவில் உள்ள மிகவும் உயரமான அணைக்கட்டு பக்ராநங்கல். உயரம் 226 மீட்டர்.
* எல்லோரா குகைக் கோயில் ஒளரங்காபாத் அருகே அமைந்துள்ளது.
* உலகின் மிகப் பெரிய தேவாலயம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
இரா.அனு, பொழிச்சலூர்.

பொதுக் குறிப்புகள்

உங்கள் பக்கம்: ஒன்பது... ஒன்பது... ஒன்பது..!
சிறுவர்மணி


* புல்லாங்குழலில் 9 துவாரங்கள் இருக்கும்.
* பிறை நிலவை விட முழு நிலா 9 மடங்கு பிரகாசமாயிருக்கும்.
* எவரெஸ்ட் சிகரத்தை அடைய 9 வழிகளுண்டு.*
புலிக் குட்டிகள் 9 நாட்களுக்குப் பின் கண்களைத் திறக்கின்றன.
* கடலின் அதிகபட்ச சராசரி ஆழம் 9 கிலோ மீட்டர்.நெ.இராமன், சென்னை-74.தமிழ்த்தாய் கோவில்!
ஐந்து கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் மொழிகள் உலகில் 13 மட்டுமே. இவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று.
* உலகிலேயே மொழிக்காக ஒரே ஒரு இடத்தில்தான் கோவில் கட்டப்பட்டுள்ளது. அது தமிழ் மொழிக்காக கட்டப்பட்டுள்ள தமிழ்த்தாய் கோவில்தான். இது கட்டப்பட்டுள்ள இடம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்.
* இந்தியாவிலேயே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் 1948-ம் ஆண்டு கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
* இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.ஜி.லலித், இராஜபாளையம்.
கரையும் பொருட்கள்!

* பெட்ரோல் காற்றில் கரையும்.
* ரப்பர் பெட்ரோலில் கரையும்.
* கற்பூரம் காற்றில் கரையும்.
* சோழி எலுமிச்சைச் சாற்றில் கரையும்.
* நீரில் உப்பு கரையும்.* மண்ணெண்ணெயில் தார் கரையும்.வெ.இராஜாராம், சங்கரன்கோவில்.
அதிக சத்தம் எழுப்பும் பூச்சி!
* அதிக சத்தம் எழுப்பும் பூச்சியினம் சிகாடா.
* புணேயில் உள்ள ராஜா கெல்கா என்ற அருங்காட்சியகத்தில்தான் இந்தியாவிலேயே அதிகளவு பழமை வாய்ந்த விளக்குகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
* வட பசிபிக் கடல் பகுதியில் சாலஞ்சர் டீப் என்ற 10,912 மீட்டர் ஆழமுள்ள இடம்தான் உலகின் ஆழமான இடமாகும்.
* இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 21 படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
* "கணவாய்' மீனின் ரத்தம் நீல வண்ணத்தில் இருக்கும்.
இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு
.
மயில்!
இந்திய தேசியப் பறவையான மயிலின் பூர்வீகம் இந்தியாதான். அந்தக் காலத்தில் பரிசுப் பொருளாக மயிலைக் கொடுத்ததால் அது உலக நாடுகளுக்கு எளிதாகப் பரவியது. இந்திய மன்னர் ஒருவர் அளித்த மயில்களை சாலமன் என்ற மன்னர் பாலஸ்தீனத்திற்கு எடுத்துச் சென்றார். இந்தியா மீது படையெடுத்த கிரேக்க மன்னர் அலெக்ஸôன்டர் மூலமாக மயில் இனம் வெளிநாட்டிற்கு பரவியது. தற்போது, ஆப்ரிக்கா, பெல்ஜியம், நேபாளம், மியான்மர், வடகொரியா போன்ற நாடுகளில் மயில் தேசிய சின்னமாகவும், ராணுவ முத்திரையாகவும் பாவிக்கின்றனர்.
என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.

புத்திசாலி பறவை!

* கடல்வாழ் உயிரினங்களில் புத்திசாலி டால்பின்.
* பறவைகளில் புத்திசாலி ஆந்தை.
* விலங்குகளில் புத்திசாலி மனிதக் குரங்கு.
* ஆப்ரிக்காவில் ஆண் யானை, பெண் யானை இரண்டிற்கும் தந்தம் உண்டு.
* ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.
* இறக்கையை அசைக்காமல் வானில் வெகுதூரம் பறந்து செல்லும் பறவையின் பெயர் ஆன்டியன் கான்ட்டர் என்பதாகும்.
த.ஜெயபிரகாஷ், கலவை.
தேனீ செய்திகள்!
* தேனீக்கு ஐந்து கண்கள் உண்டு.
* தேனீ மணிக்கு ஏழு மைல் வேகத்தில் பறக்கும்.
* தேனீயின் வயிற்றில் இரண்டு இரைப்பைகள் உண்டு.
* தேனீயின் உடலில் 12 வளையங்கள் உள்ளன.
* ஒரு தேன் கூட்டில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தேனீக்கள் இருக்கும்.
* தேனீக்கு நான்கு சிறகுகள் உண்டு.
* தேனீ நிமிடத்திற்கு சராசரியாக 400 முறை இறக்கையை அசைக்கும்.
எஸ்.நேசமணிகண்டன், மடிப்பாக்கம்.
விடுகதைகள்: அடி மலர்ந்து நுனி மலராத பூ
சிறுவர் மணி


1. மண்டையில் போட்டால் மகிழ்ந்து சிரிப்பான். அவன் யார்?
2. நிலத்தில் முளைக்காத செடி; நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன?
3. கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போடுது. அது எது?
4. மரம் வாழ்பவனுக்கு முதுகிலே மூன்று சூடு. அது என்ன?
5. ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?
6 நடக்கத் தெரியாதவனுக்கு வழிகாட்டுபவன். அவன் யார்?
7. நீரிலே உயிர் பெற்று நிலத்திலே நீர் இறைப்பான். அவன் யார்?
8. அறைகள் அறுநூறு; அத்தனையும் ஓரளவு. அது என்ன?
9. கோணல் இருந்தாலும் குணம் மாறாது. அது என்ன?
10. கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும். அது என்ன?
11. பந்திக்கு வரும் முந்தி; வெளியே வரும் பிந்தி. அது என்ன?
12. அடி மலர்ந்து நுனி மலராத பூ. அது என்ன?
விடைகள்:1.தேங்காய்2.தலைமுடி3.தவளை4.அணில் 5.மிளகாய்6.கைத்தடி7.மின்சாரம்8.தேன்கூடு9.கரும்பு10.அத்திமரம்11.இலை12.வாழைப்பூ
கடி
தினமணி சிறுவர் மணி


* ""இந்த ஊர்ல பலாப்பழம் சீப்பா கிடைக்கும்.''""ஆச்சர்யமா இருக்கே. எங்க ஊர்ல வாழைப்பழம் தான் சீப்பா கிடைக்கும்!''டி.பச்சமுத்து, 5/1078, "இலட்சுமி இல்லம்', பாரதியார் நகர், கிருஷ்ணகிரி-1.*""என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்!''""எப்படிச் சொல்றே..?''""பல்பு கம்பெனியில் வேலை கிடைச்சுருக்கே..!''எஸ்.பொருநை பாலு, 88ஏ, சுந்தரர் தெரு திருநெல்வேலி } 627 006.""நான் கிளாஸ் எடுத்துட்டிருக்கும் போது தூங்கறியே... அப்புறம் எப்படி உன் ஞாபகசக்தி கூடும்?''""தினசரி பகல்ல ஒரு மணி நேரம் தூங்கினால் நினைவாற்றல் கூடும்னு விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்க சார்!''ஜி.வினோத், கிருஷ்ணகிரி.""அவரை ஏன் போலி டாக்டர்ன்னு சொல்றே?''""பின்னே... மனசு உடைஞ்சுப் போச்சு டாக்டர்ன்னு சொன்னேன். மாவு கட்டுப் போட்டு குணப்படுத்தலாம்ங்கறாரே..!''ஆர்.ஜி.காயத்ரி, திசையன்விளை. ""அந்த இரும்புக்கடையில என்னை வேலைக்கு சேர்க்கமாட்டேன்னு சொல்லிட்டாங்கப்பா..!''""ஏன்?''""இரும்பையும் துரும்பாக்கிடுவேன்னு சொன்னேன், அதான்!''நதீன், காயல்பட்டினம்.""எதுக்குடா உங்க அப்பா பெயரை எழுதி ஃப்ரிட்ஜ்க்குள்ள வைக்கறே?''""அவர் பெயர் கெட்டுடக் கூடாதுன்னு தான்!''