வரலாற்றில் இன்று
Today in History திசம்பர் 22
Today in History திசம்பர் 22
- 1790 - துருக்கியின் இசுமாயில் நகரை இரசியாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.
- 1807 - வெளிநாடுகளுடனான வருத்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது
- 1845 - பஞ்சாபில் ஃபெரோசிசா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
- 1849 - இரசிய எழுத்தாளர் பியோதர் தசுதயெவ்சுகியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் விலக்கப்பட்டது.
- 1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
- 1895 - எக்சுரேயைக் கண்டுபிடித்த செருமன் விஞ்ஞானி வில்ஃகெம் ரோண்ட்சென் ( Wilhelm Rontgen) முதன் முதலாக தனது மனைவியின் கையை எக்சுரே எடுத்துக் காட்டினார்
- 1915 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
- 1937 - லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
- 1938 - எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அடியோடு அழிந்து போய் விட்டது என்று கருதப்பட்ட கொயலாகாந்த் இன மீன் வகை அன்சூவான் தீவுக்கருகே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
- 1989 - ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செசுகுவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1989 - கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
- 1990 - மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன
No comments:
Post a Comment