Tuesday, April 17, 2012

எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ

எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ 

 http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_2631.html

 


ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?
மாணவன்: விடுமுறை ?
**********************************************
நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு இருக்கியாமே ?'
'
யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க

**********************************************
சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'
தெரியாதே !
'
ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'

**********************************************
திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?

**********************************************
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது

நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?

மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது

**********************************************

ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்

மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்

**********************************************

கன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம்
இருக்கே ...உள்ள வாப்பா...!
ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..


**********************************************


முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.

டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்
என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்


**********************************************
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

**************************************


அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?

ஏன் ?

அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்

**************************************
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்

வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?

இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.

ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான

**************************************

 ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.

**************************************
நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க

டாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு 

 உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்

'கடமையைச் செய்; மாமூலை எதிர்பாராதே' 

   http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_8292.html


மனைவி: எதிர் வீட்டு வயசான அம்மாவோட ஏன் காரணமில்லாமே அடிக்கடி சண்டை போடறே?.
கணவன்: அவங்க பார்க்கறதுக்கு அசப்பிலே உங்க அம்மா மாதிரியே இருக்காங்க
"ஜெயிலில் தொழில் கற்றுத் தருவாங்களாமே... நீங்க ஜெயிலில் என்ன கத்துக்கிட்டீங்க?"
 "குற்றத்திலிருந்து எப்படித் தப்பிக்கறதுன்னு கத்துக்கிட்டேன்."
"அந்த டாக்டர்கிட்ட மட்டும் இவ்வளவு கூட்டம் அலை மோதுதே...
அவ்வளவு கைராசிக்காரரா?"
"அங்கதான் சூப்பரான நர்சுகளை வேலைக்கு வைத்துள்ளார்
"அரசியல் தலைவரோட வேகம் குறைஞ்சு போச்சு..." "எப்படிச் சொல்றே...?" "போன வருஷம் மூணு கட்சி தாவினாரு...
 இந்த வருஷம் ஒண்ணே ஒண்ணுதான்...!"
"யோவ் ஏட்டு... போன்ல யாரு?"
"எவனோ பெயர் தெரியாத திருடன் சார்...
 'கடமையைச் செய்; மாமூலை எதிர்பாராதே'ன்னு அட்வைஸ் பண்றான்!"
அந்த டாக்டர் உங்களை ஆறுமாசம் தங்கி வைத்தியம் பார்க்கச் சொல்றாரே...ஏன்?"
 "என்னோட சொத்து மதிப்பு இருபது லட்சமுன்னு சொன்னேன்."
பியூன்: "சார் மணி ஆறாகுது. வீட்டுக்குப் போகலையா...?"
 அதிகாரி: "இன்னிக்கு வருமானம் ஒன்னும் இல்ல...
வீட்டுக்குப் போனால் மானம் போகும்...!"
"கல்யாணமாகி அஞ்சு வருசத்தில ஒரு லாங் டூர் கூப்பிட்டுப் போகணும்னு சொன்னே..
 அதான் ராஜஸ்தான் பாலைவனத்துக்குக் கூப்பிட்டு வந்திருக்கேன்." "உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால என் வாழ்க்கையே பாலைவனமாயிடுச்சே...
 இதுல இந்தப் பாலைவனம் வேறயா?..."

இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே

இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே

 http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_6225.html


எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

ஆன்னு வாயைத் திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான்.

***********************************************************

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?

உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.

***********************************************************

நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இருக்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்?
டாக்டர் - நான் காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா....

**********************************************************

ஏண்டா லேட்டு...?
பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.
*********************************************************

யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே 
இது வரைக்கு லஞ்சமா 1ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்னர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...!
 
நல்ல வேளை இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே.

jokes from nakaichuvai.com

வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!''

ஓர் அம்மா டாக்டரைத் தேடி வந்தாங்க.

''டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு திடீர்ன்னு அகோரப்பசி... ஏற்பட்டுப் போச்சு! நிறைய சமைச்சுப் போடறேன்... அவ்வளவையும் சாப்பிட்டுட்டு... கீழே கிடக்கிற குப்பைக் கூளங்களையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சடறார்... என்னான்னு பாருங்களேன்... டாக்டர்!''

''சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்கு?'''

''ஒரு வாரமா இப்படி இருக்கு!''

''இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே...?''

''வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!''

Monday, April 16, 2012

for your smile

சாமிக்கு மொட்டை போடுறதா 

http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_19.html




எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா

********************************************
ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்

********************************************
டாக்டர். கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதி இருக்கு...

பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாய் போயிடும்.
********************************************
ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?

மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு, வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

********************************************
ஒருவன் : நீங்களே கஷ்டத்துல இருக்கீங்க. எதுக்கு கல்யாணம் வேற பண்ணிக்கிறீங்க...?
மற்றொருவன் : கஷ்டத்தோட கஷ்டமா இருக்கட்டுமேன்னுதான்.
********************************************
காலியான கேஸ் சிலிண்டரை எடுத்துக் கெண்டு டாக்டரை பார்க்க போகிறார் ஏன்?

கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர் தன்னை வந்து பார்க்க சொன்னாராம்.
********************************************

என் அப்பா, அண்ணனை நெனச்சாதான் பயமா இருக்கு டார்லிங் !'

'
ஏன்... நம்மைப் பிரிக்க முயற்சி பண்றாங்களா ?'

'
இல்லை... சேர்க்க முயற்சி பண்றாங்க !'

**********************************************

for your smile

டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?... 

 http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_7897.html


ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு

அது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை

**************************************

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே

**************************************

பார்பர் : சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா?”

நபர் : அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா?”

பார்பர் : இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.

**************************************
டிராபிக் போலிஸ் :ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”

நபர் :எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”
 **************************************
நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

************************************************************************
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

***********************************************************************
"என் கைவசம் 7 சீரியல் இருக்கு."

"
நடிக்கிறீங்களா?'

"
இல்ல..தினமும் பாக்குறேன்"
 
*********************************************************************

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....

*********************************************************************

டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...''
"
ஏன்''
"
சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...''

*************
உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் `குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே?...எதுக்கு? 

 ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார்.

*************
பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...
மாணவர்கள்: ஏன் பெருசு?...
பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் `டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?...

*************

for your smile

பூலோகமே எனக்கு சொர்க்கம் 

http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_9220.html



மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்
சுமதி: ஏன்?..
மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.
*************
(
செல்போன் கடையில்... கடைக்காரர் கிராமவாசியிடம்)

ரீசார்ஜ் பண்ணாமலே `லைப்' பூராவும் பேசலாம்னுதான் சொன்னோம். பேட்டரி சார்ஜ் பண்ணாமலே செல் பேசணுமன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்..

*************

நண்பர்-1: என் பையனுக்கு `செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!
நண்பர்-2: ஏன்,என்னாச்சு?
நண்பர்-1: எந்த நேரமும் அவளையே `சுத்திச் சுத்தி' வர்றான்.
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'
என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''
ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'
என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
 #################