வரலாற்றில் இன்று
Today in History திசம்பர் 3
Today in History திசம்பர் 3
- உலக ஊனமுற்றோர் நாள்
- 1592 - "எட்வேர்ட் பொனவென்ச்சர்" என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது
- 1818 - இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21 ஆவது மாநிலமானது.
- 1903 - சேர் என்றி பிளேக்கு ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
- 1904 - வியாழனின் இமாலியா என்ற சந்திரன் சார்ல்சு தில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1912 - பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன
- 1959 - திரு Zubir Said எழுதிய சிங்கப்பூரின் தேசியப்பாடல் அறிமுகப்படுத்தப்ட்டது.
- 1967 - தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிசுடியன் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிசு வாசுகான்சுகி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- 1971 - இந்திய-பாகிசுதான் போர், இந்தியா கிழக்கு பாகிசுதானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது. கிழக்கு பாகிசுதான் தனியாகப் பிரிந்து பங்களாதேசம் உருவானது.
- 1973 - வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களைப் பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
- 1976 - ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- 1984 - இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்
- 1989 - மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் சார்சு எச். டபிள்யூ. புசு, சோவியத்து அதிபர் மிக்கைல் கொர்பச்சோவு ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
- 1997 - நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா,இரசியா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
- 1999 - செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.
- 2007 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்திப் புதிய உலக அருவினை படைத்தார்.
No comments:
Post a Comment