Friday, December 14, 2012

வரலாற்றில் இன்று Today in History 14 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 14

    இந்தியா - எரிபொருள் சேமிப்பு நாள்
    உலகக் குழந்தைகள் தொடர்பு நாள்
    1287 - நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
    1542 - இளவரசி மேரி இசுடுவேர்டு முதலாம் மேரி என்ற பெயரில் இசுகாட்லாந்தின் அரசியானாள்.
    1819 - அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22 ஆவது மாநிலமானது.
    1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
    1900 - மாக்சு பிளாங்ககு த்  தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
    1903 - ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.
    1911 - ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
    1918 - பின்லாந்தின் மன்னனாக  செர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன்ஃகெசுசென் தெரிவுசெய்யப்பட்டான்.
    1939 - நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
    1941 - உக்ரேனின் கார்க்கிவ் நகரின் நாசி  செர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    1941 - இரண்டாம் உலகப் போர்: சப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
    1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
    1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
    1967 - DNA எனப்படும் மரபணுக்கூறை முதல் முறையாக சோதனைக் குழாயில் உருவாக்கிக் காட்டினர் விஞ்ஞானிகள்
    1972 - அப்பல்லோ 17: யூசின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
    2003 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர்  சியார்சு டபிள்யூ புசு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
    2003 - பாகிசுதான் அதிபர் பெர்வேசு முசாரப்பு கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
    2004 - தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது

No comments:

Post a Comment