Sunday, December 30, 2012

வரலாற்றில் இன்று Today in History 30 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 30

  1.     1853 - ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 கிமீ² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
  2.     1880 - டிரான்சுவால் குடியரசு ஆகியது.
  3.     1896 - பிலிப்பீன்சின் தேசியவாதி  சோசே ரிசால் மணிலாவில் இசுபானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
  4.     1906 - அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
  5.     1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
  6.     1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
  7.     1924 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் அபிள் அறிவித்தார்.
  8.     1941 - மகாத்மா காந்தி காங்கிரசு தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
  9.     1943 - சுபாசு சந்திர போசு அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
  10.     1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  11.     1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
  12.     1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
  13.     1956 - புதுச்சேரியில் கமலம்மாள் எனும் பெண்மணிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன் எடை 11 கிலோகிராம். உலகிலேயே மிக அதிக எடையுடன் பிறந்த குழந்தை.
  14.     1965 - பேர்டினண்ட் மார்க்கொசு பிலிப்பீன்சு அதிபரானார்.
  15.     1972 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
  16.     1993 - இசுரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
  17.     1996 - அசாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
  18.     2006 - முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

No comments:

Post a Comment