Friday, October 22, 2010

மம்மி

மம்மி என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் போல சிலர் அம்மாவை மம்மி என்று அழைப்பார்கள் அல்லவா, அந்த மம்மிக்கும் இந்த மம்மிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இங்கு மம்மி என்று சொல்வது உயிரற்ற உடலைத்தான். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் சவம். இந்த மம்மிகள் எகிப்தில் உள்ளன.பிரமிடுகளின் நாடுதான் எகிப்து. அங்குள்ள மிகப் பெரிய பிரமிடுகளைப் பார்த்தால் நாம் வியந்துபோவோம். அவை கட்டப்படுவதற்கு எத்தனைக் காலம் ஆகியிருக்கும்! எத்தனை எத்தனை வேலையாட்கள் இதற்காக உழைத்திருப்பார்கள்! வருடக்கணக்காக பல்லாயிரக்கணக்கான அடிமைகளைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டவைதான் ஒவ்வொரு பிரமிடும். பிரமிடுகள் என்பது வெறும் கல்லறைகள்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.புராதன எகிப்தின் சக்கரவர்த்திகள்தான் பாரோக்கள். இவர்களின் சவங்களையும், மற்ற ராஜாக்களின் சவங்களையும் பிரமிடுகளில் பாதுகாத்து வைத்தார்கள். அந்த சவங்கள்தான் மம்மிகள்.ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பிரமிடுகளில் அடக்கம் செய்யப்பட்ட மம்மிகள் இப்போதும் கெட்டுப்போகாமல் இருக்கின்றன. சவ உடல்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கான முறை புராதன எகிப்தியர்களுக்குத் தெரிந்திருந்தது. அழுகச் செய்கின்ற அணுக்களிலிருந்து அவர்கள் சவ உடலைக் காப்பாற்றினார்கள். அதற்காக அவர்கள் "ஆஸ்பல்ட்', "ப்ளாஸம்', எனும் பாதுகாக்கும் பொருள்களை (டழ்ங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ஸ்ங்) பிரயோகப்படுத்தினார்கள். இவை சில ரசாயனப்பொருட்களாகும்.சவ உடலிலிருந்து குடல் முதலிய உறுப்புகளை நீக்கிய பிறகுதான் பிரஸர்வேட்டிவ்களைப் பிரயோகிப்பார்கள். உடல் பக்குவப்படுவதுவரை இப்படிச் செய்வார்கள். பிறகு, எகிப்தின் காவல் தெய்வமான ஒஸீரஸின் முகமூடியை சவ உடலுக்கு அணிவிப்பார்கள். இப்படி பக்குவப்படுத்தப்பட்ட மம்மியை ஒரு மரப்பெட்டியில் வைப்பார்கள். அந்த மரப்பெட்டியை ஒரு கல்லறையில் பத்திரமாக அடக்கம் செய்வார்கள்.சவ உடலிலிருந்து எடுத்த குடல் முதலிய பொருட்களை ஒரு கற்பாத்திரத்தில் இட்டு இந்தக் கல்லறையிலேயே அடக்கம் செய்வார்கள். விரைவாக அணுச்சேர்க்கை நடக்கிற குடல்களைக் காப்பாற்றுவதற்கு ரசாயனப் பொருட்களால் இயலாது. அதனால்தான், குடலைத் தனியாகப் பிரிக்கிறார்கள். இப்படி மம்மியாக்கப்பட்ட சவ உடல்கள் எந்த மாற்றமும் இன்றி இப்போதும் நிலைத்திருக்கின்றன.சவ உடல்களை ஏன் இப்படிப் பாதுகாக்கிறார்கள்? மனிதன், மரணத்திற்குப் பின்னும் வாழ்வதாக எகிப்தியர்கள் நம்பினார்கள். சவ உடலை சற்றும் சேதமடையாமல் பாதுகாத்தால், அந்த உடலுக்குரியவருக்கு மேல் உலகத்தில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!ஆனால், எல்லா சவ உடல்களையும் இப்படிச் செய்ய மாட்டார்கள். சவ உடலை மம்மியாக மாற்ற நிறையச் செலவு செய்ய வேண்டிவரும். அதனால், ஏழைகளின் சவ உடல்கள் மம்மியாக மாற்றப்படுவதில்லை.சக்கரவர்த்திகளாலும் ராஜாக்களாலும், மேல் உலகில் சேவகர்களும் படைவீரர்களும் இல்லாமல் வாழ முடியுமா? இதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? இறந்த சேவகர்களின், படை வீரர்களின் உருவங்களை, மம்மியைப் பாதுகாத்த கல்லறைக்கருகில் செதுக்கி வைத்தார்கள். அப்படி அவர்களுக்கும் மேல் உலகில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!
அன்றாட வாழ்வில் அறிவியல்: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

மீன்களுக்கு தண்ணீரில் நீந்துவதற்கான திறமை மட்டுமல்ல, தண்ணீரில் அப்படியே அசைவற்று நிற்கக்கூடிய திறமையும் உண்டு. மீன்காட்சி சாலைகளில் உள்ள மீன்களைக் கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்குத் தெரியும். சில சமயங்களில், உடலில் எப்பகுதியையும் அசைக்காமல் மீன், தண்ணீரின் மேற்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ அப்படியே அசைவற்று நிற்பதைப் பார்க்கலாம்.÷மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்தியேகமான வாயுப் பை உதவி செய்கிறது. ஏறத்தாழ, ஒரு பலூனின் வடிவில் உள்ள இந்த வாயுப் பை, மீனின் வயிற்றிற்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில்  ஏறத்தாழ 5-லிருந்து 6 சதவிகிதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்ஸிஜன், கார்பன்}டை}ஆக்ûஸடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும். ÷பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும்.÷ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயுப் பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு.
 
கொடிகள் ஏன் அடையாளச் சின்னங்களுடன் இருக்கின்றன?÷
தோற்றம் கப்பல் மாலுமிகளின் தொழிற் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. கடலில் கப்பல்களும், படகுகளும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்ள இந்தக் கொடிகள் உதவுகின்றன. போரிலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகளுக்கும் கொடியின் பங்கு மிகவும் அதிகம். அரசியல் கட்சிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் கொடிகள் உள்ளதால், ஒரு கொடி எந்த கட்சியைக் குறிக்கிறது அல்லது எந்த அமைப்பைக் குறிக்கிறது என்று நாம் தொலைவிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். ÷விளையாட்டுப் போட்டிகளிலும், பல பிரிவினரும், பல நாடுகளும் ஒன்று சேர்கிற சந்தர்ப்பங்களிலும், கொடிகளில் உள்ள சின்னங்கள் ஒவ்வொரு குழுவையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள உதவுகின்றன
ஜெர்மானியப் பழமொழிகள்

1. கிடைக்கக்கூடிய பூக்களைக் கொண்டு பூங்கொத்து செய்வதுதான் மகிழ்ச்சி தரும் காரியம்.2. கடலைப் புகழ வேண்டும் என்றால் கரையில் நிற்க வேண்டும்.3. நாயுடன் மனிதன் நட்புகொள்வதற்குக் காரணம், அது பேசாமல் வாலை மட்டும் ஆட்டிக் கொண்டிருப்பதுதான்.4. அன்பை அறிந்த இதயத்திற்குத்தான், அது எவ்வளவு உயர்வானது என்று சொல்ல முடியும்.5. பொறுமை எனும் மரத்தின் வேர்கள் கசப்பானவைதான். ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை.6. வரலாற்றை உருவாக்குபவனுக்கு அதை எழுதுவதற்கு நேரமிருக்காது.7. வலிமை எஜமானனாகும்போது, நீதி வேலைக்காரனாகிறது.8. ரசிக்கத் தெரியாத மனிதனின் கண்கள் அழைக் காண்பதில்லை.9. உண்மையற்ற சமாதானம் ஆபத்தானது.10. ஒரு நல்ல நண்பன், நம்மிடம் உள்ள செல்வங்களைவிட மேலானவன்.
பெர்முடா ரகசியம்

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும்    நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன்    தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில்  மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.÷"பிளைட்-19' என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை   அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:÷""விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.''÷இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த          விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது. ÷1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட "மேரி செலஸ்டி' என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி "மேரி செலஸ்டி' என்று     அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில்  மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.÷மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது "யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்' எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.÷"ஆரான் பர்' என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் "தியோடோசியா பர் அல்ஸ்பான்', தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு "பேட்ரியாட்' எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.÷முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் "டக்லஸ் பிசி-3.' மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.÷அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து,          கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.÷இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது "எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்' எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் "காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது' என்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.÷மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். "ரய் ஃபுகு மரு' எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,""கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது...! விரைந்து உதவிக்கு வாருங்கள்...''எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.÷மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை   கிடைக்கவில்லை.÷1962-இல் "பிளைட்-19' தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,""நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை...'' என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் "அர்கோசி' எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,""விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது'' எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.÷இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,"நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' எனும் கட்டுரையும், "கண்ணுக்குத் தெரியாத வெளிகள்' மற்றும் "சாத்தானின் முக்கோணத்தில்' எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், "வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்' என்று எழுதப்பட்டிருந்தன.÷கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.÷இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு' என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.÷சில ஆய்வாளர்கள், ""பெர்முடா முக்கோணப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச் சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றன'' என்று தெரிவிக்கின்றனர். மேலும் சில ஆய்வாளர்கள்,""திடீர் மீத்தேன் வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல் மூழ்கடித்துவிடுகின்றன'' என்ற தகவல்களை வெளியிட்டனர்.÷ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,""உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள்  பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய  "ப்ளேக்ரிட்ஜ்' பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்      நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக்   குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது'' என்று தெரிவித்திருந்தது.÷இதுவரை ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம்  அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது. 

Sunday, October 10, 2010

நாடுகளறிவோம்: கிரேக்கம்

நாடுகளறிவோம்: கிரேக்கம்


கிரேக்க நாடு ஐரோப்பியக் கண்டத்தில் உள்ளது. இது முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. கிழக்கில் துருக்கியும், மேற்கில் யவனக் கடலும், தெற்கில் பால்கன் மூவலத் தீவும், வடக்கில் அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.கிரேக்கம், மேற்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் பிறப்பிடம். இதன் தலை நகரம் ஏதென்ஸ். இந்த நாட்டின் ஆட்சி மொழி கிரேக்க மொழி.  "நாடாளுமன்ற குடியரசு முறை அரசியல் அமைப்பு'தான் இங்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவராக "காரொலோஸ் பப்பூலியாஸ்' என்பவரும், பிரதமராக "ஜார்ஜ் பாபன்டிரியோ' என்பவரும் பதவியில் உள்ளனர்.கிரேக்க நாடு 1,31,990 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பினைக் கொண்டது. இந்த நாட்டில் 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11,306,183 பேர் வாழ்கிறார்கள்.இங்குள்ள "பார்த்தினன்' என்பது மிகப் பழமையான, பேரழகான கட்டடமாகும். இது 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வத்தின் பெயர் "கன்னி ஆதெனா'. இந்தத் தெய்வத்திற்கு நன்றி கூறும் விதமாகவே இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இது, ஏதென்ஸ் நகரின் அக்ரோபோலிஸில் அமைந்துள்ளது. பார்த்தினன் கட்டடம், கிரேக்க நாட்டின் மாபெரும் அரசியல்வாதி பெர்க்கிளிஸின் காலமான கி.மு. 438-இல் கட்டப்பட்டது.கி.பி.1821-ஆம் ஆண்டு, மார்ச் 25-ஆம் தேதி கிரேக்க நாடு, துருக்கிய பல்மத அரசான ஆட்டோமன் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக்கொண்டது.கிரேக்க நாட்டின் தேசிய விலங்கு டால்பின் மீன். பீனிக்ஸ் பறவையின் உருவமானது     கிரேக்க நாட்டில் மிக முக்கியமாக மதிக்கப்படுகிறது. சில கிரேக்க நாணயங்களில் இந்தப்  பறவையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.உலகின் முதல் நவீன கோடைகால ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத் தலைநகர் ஏதென்சில்தான் தொடங்கியது. இப்போட்டி கி.பி. 1896-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15-ஆம் தேதிவரை "பனாதினைக்கோ' மைதானத்தில் நடைபெற்றது.மாபெரும் தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ், அவரது மாணவர் பிளாட்டோ ஆகியோர்    கிரேக்க நாட்டவர்கள். சாக்ரடீஸின் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக பிளாட்டோ எழுதிய "குடியரசு',"அரசியல்' ஆகிய நூல்கள் உலகப் புகழ் பெற்றவை.கோதுமை, ஆலிவ், முள்ளங்கி, பீன்ஸ் ஆகியவை இந்த நாட்டின் முக்கிய           விளைபொருட்கள். முக்கியத் தொழில் மீன்பிடித் தொழில். "மெüசாக்கா' என்பது        கிரேக்கத்தின் பாரம்பரிய உணவு. இது, உருளைக்கிழங்கு, தக்காளிச் சாறு, மாட்டிறைச்சி ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. "செüலகி' என்பதும் புகழ்பெற்ற உணவுதான். இது, மாடு அல்லது கோழி இறைச்சி, மீன், எலுமிச்சைகொண்டு தயாரிக்கப்படுகிறது. பூண்டு சேர்த்த ரொட்டி, பாலாடைக்கட்டி, ஆலிவ் சேர்த்த காய்கறிக்கூட்டு போன்றவையும் விரும்பி உண்ணப்படுகின்றன.கிரேக்கப் பெண்களின் பாரம்பரிய ஆடை "கரகெüனா'. வரிசையாகத் தங்க நாணயங்கள் பொருத்தப்பட்ட இந்த ஆடையினை திருமணப்பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.   ஆண்களின் உடைகள் "பெüச்டநெள்ள', "சோலிஸ்' போன்றவை.புத்தாண்டு, கிறிஸ்துமஸ்,மே தினம், ஜூலை இசைவிழா ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.ய்
கருத்துக்கள்

கிரேக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கிரேக்கர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் உள்ள தொடர்பு தமிழ்நாட்டில் யவனர்கள் காவலர்களாக இருந்த நிலைமை, கிரேக்க மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு முதலானவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை முழுமையடையும். பிற நாடுகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் தமிழ்நாட்டிற்குள்ள தொடர்பையும் குறிப்பிட வேண்டும் எனபதை நினைவில் கொள்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2010 3:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *