Thursday, November 29, 2012

வரலாற்றில் இன்று Today in History நவம்பர் 30

                                 வரலாற்றில் இன்று   
Today in History 
நவம்பர்30

  1.     1612 - பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
  2.     1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500  படையினர் எசுதோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும்  இரசியப் படைகளை வென்றனர்.
  3.     1718 - நோர்வேயின் பிரெட்ரிக்சுடன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு  இறந்தான்.
  4.     1782 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
  5.     1803 -  இசுபானியர்கள் உலூசியானாவைப் பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்சு இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
  6.     1806 - நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
  7.     1853 - இரசியப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
  8.     1872 -  உலகின் முதலாவது அனைத்துலகக் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்துக்கும்,
  9. சுகாட்லந்திற்கும் இடையே கிளாசுகோவில் நடந்த அந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது.
  10.     1914 - சார்லி சாப்ளினின் முதல் படமான Marking a Living வெளியானது. அந்தப் படத்தில் அவர் தமது வழக்கமான கைப்பிரம்போ மீசையோ இல்லாமலே நடித்திருந்தார்
  11.     1936 -இலண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
  12.     1939 - சோவியத்துப் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டுக் குண்டுகளை வீசீன.
  13.     1943 - இரண்டாம் உலகப் போர்: டெஃகிரானில் கூடிய அமெரிக்க  அதிபர்  பிராங்கிளின்  உரூசுவெல்ட்டு, பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்சுடன்  சர்ச்சில், இரசிய அதிபர்  சோசப்பு தாலின்  ஆகியோர்  சூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.
  14.     1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3 ஆவது பொதுச் செயலராகத் தெரிவானார்.
  15.     1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடசு விடுதலை பெற்றது.
  16.     1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
  17.     1967 - சுல்பிகார் அலி பூட்டோ பாகிசுதான் மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
  18.     1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment