வரலாற்றில் இன்று Today in History
நவம்பர் 22• 1574 - சிலியின் சூவான் பெர்னாண்டசு தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
• 1908 - அல்பேனிய எழுத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
• 1922 - துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
• 1925 - காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநில மாநாட்டிலிருந்து பெரியார் வெளியேறிய நாள்
• 1935 - பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமான அஞ்சல்களை வழங்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 அஞ்சல்களுடன் மணிலாவை அடைந்தது.)
• 1942 - இரண்டாம் உலகப் போர்: செர்மனிய த் தளபதி பிரீட்றிக் பவுலசு, இசுடாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக இட்லருக்கு த் தொலை வரி மூலம் செய்தி அனுப்பினான்.
• 1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின் ரூசுவெல்ட்டு, பிரித்தானியப் பிரதமர் வின்ஸசுடன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
• 1943 - லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
• 1956 - பதினாறாவது ஒலிம்பிக் போட்டிகள் ஆசுதிரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்கியது.
• 1963 - அமெரிக்க நாட்டடுத் தலைவர் சான் எப். கென்னடி கொல்லப்பட் அதே நாளில் டெக்சாஸசு மாநில ஆளுநர் " சான் கொனலி" படுகாயமடைந்தார். உதவி-த்தலை வர் (இ) லிண்டன் சான்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.
• 1968 - மதராசு என்றிருந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ் நாடு என்று மாற்ற மக்களவை ஏற்பு அளித்தது
• 1974 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.
• 1975 - பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து சூவான் கார்லொசுஇசுபெயின் மன்னனானார்.
• 1986 - உலக மிகு எடை குத்துச்சண்டைப்போட்டியில் மைக் டைசன், டிரெவர் பெர்டிக் என்பவரை வீழ்த்தி விருதைப் பெற்றார்.
• 1990 - மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.
• 2002 - நைசீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
• 2003 - சியார்சியாவில் அதிபர் எடுவார்டு செவர்நாட்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அதிபரைப் பதவி விலகுமாறு கோரினர்.
• 2005 - செர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
• 2005 - எக்சு பாக்சு 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
• 2007 - இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
No comments:
Post a Comment