அட அப்படியா!
Bydn
First Published : 10 November 2012 05:25 PM IST
- *நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் தன் உடலைச் சுருட்டிக் கொண்டு, உடலின் வெப்பத்தைக் காப்பாற்ற தலையை உடலின் உள்ளே பதித்துத் தூங்கும்.
- *சிலவகை மான்கள் தூங்கும்போது தமது சுவாச சக்தியின் மூலம் பகை விலங்குகளின் நடமாட்டத்தை உணரும் சக்தி கொண்டவை.
- *யானை, குதிரை ஆகியவை நின்றுகொண்டே தூங்கும் பழக்கம் உடையவை.
- *சூரியனின் மகள் என்றழைக்கப்படும் தாவரம் பருத்தி.
- *ஆசுதிரேலியாவில் கங்காருவைப் போல புகழ்பெற்ற மற்ற ஒரு விலங்கு கோலாவாகும். இது தன் குட்டிகளைச் சுமந்தபடி மரத்துக்கு மரம் தாவும்.
- *வேப்பமரத்தின் மாற்றுப் பெயர்கள் அருட்டம், கடிப்பாறை, அருணாவதி, கோமுட்டி, பூமாரி, புயாரி மந்தமரம் ஆகியவை.
- *குளிர்ந்த நீரில் குளிக்கும்போது முதலில் தலையில் தண்ணீரை விட்ட பிறகு உடம்பில் நீர்விட வேண்டும்.
- *வெந்நீரில் குளிக்கும்போது முதலில் காலில் தண்ணீரைவிட்டு நனைத்து உடம்பு-கழுத்து-தலை எனப் படிப்படியாக மேலே ஊற்றினால் ஆரோக்கியம்.
- *இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர் வில்லியம் ஆர்வி என்பவராவார்.
No comments:
Post a Comment