வரலாற்றில் இன்று
Today in History நவம்பர்
18
- 1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்சுடன் என்பவரால் வெளியிடப்படட்து.
- 1493 - கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
- 1626 -உரோம் நகரில் உலகப் புகழ் பெற்ற செயின்ட் பீட்டர்சு பாசுலிகா ( St. Peters Basilica) எனப்படும் செயின்ட் பீட்டர் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
- 1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
- 1863 - டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிசுடியன் சுலெசவிக்கு நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் செர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
- 1883 கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.
- 1903 - பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
- 1918 -இலாத்வியா இரசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1926 - சியார்சு பெர்னாட்சா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
- 1989 - கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
No comments:
Post a Comment