Saturday, November 17, 2012

அழகே... அழகே...!

அழகே... அழகே...!

* இரவு படுக்கும் முன்பு பால் ஏட்டை முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் சருமம் பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.
* குளிப்பதற்கு முன்னால் எலுமிச்சை சாறை ஒரு பஞ்சில் நனைத்துக் கன்னத்தில் தேய்த்தால் பருக்கள் மறையும்.
* செம்பருத்திப் பூவின் சாறையும், நல்லெண்ணெயையும் சம அளவில் கலந்து கொண்டு ஓர் அகலமான பாத்திரத்தில் விட்டு தண்ணீர் வற்றும் வரை காய்ச்சி பின்னர் அத்தைலத்தை கூந்தலுக்கு உபயோகித்தால் கூந்தல் செழித்து நீண்டு வளரும்.
* ரோஜாப் பூவின் இதழ்களை சந்தனம் சேர்த்து அரைத்து, அதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழுவி வந்தால் சில வாரங்களிலேயே முகத்தில் உள்ள கறுமை நிறம் மறைந்து பட்டுப் போல மாறிவிடும்.
* தேங்காய் எண்ணெயில் காய்ந்த வேப்பம் பூவைப் போட்டு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

No comments:

Post a Comment