Saturday, November 10, 2012

தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை

First Published : 10 November 2012 05:17 PM IST
தீரன் சின்னமலை தனது பதினாறாவது வயதில் ஒருநாள் குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்தார். வழியில் பணப்பையைச் சுமந்து கொண்டு வரும் தண்டல்காரன் எதிர்ப்பட்டான்.
 சின்னமலை அவனை தடுத்து நிறுத்தி,""யார் நீ?'' என்று கேட்டார்.
 தான் தண்டல்காரன் என்றும் மைசூர் அரசருக்கு வரிப்பணம் கொண்டு செல்வதாகவும் சொன்னான்.
 ""கொங்கு நாட்டு வரிப்பணத்தை மைசூர் அரசுக்கு ஏன் தர வேண்டும்? கொடு அந்தப் பணப்பையை!'' எனக் கூறி அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டார் தீரன் சின்னமலை.
 தணடல்காரன் பயந்து நடுங்கி, ""மன்னர் கேட்டால் என்ன சொல்வது?'' எனக் கெஞ்சினான்.
 ""சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையிலுள்ள "சின்னமலை' வாங்கிக் கொண்டான் என்று போய்ச்சொல்'' என்றார்.
 கந்தகமலை மீது விழுந்த நெருப்புப் பந்தங்களாக வந்த இந்த பதிலைக் கேட்டு, தண்டல்காரன் பயந்து ஓடிவிட்டான்.

No comments:

Post a Comment