Monday, November 12, 2012

வரலாற்றில் இன்று : Today in History : 12/11

வரலாற்றில் இன்று

Today in History  

நவம்பர்
12
    • 764 - திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
    • 1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.
    • 1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிசுதான்) ஆப்கானிசுதானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
    • 1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
    • 1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோசு-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.
    • 1918 - ஆசுதிரியா குடியரசாகியது.
    • 1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
    • 1927 - லியோன் ட்ரொட்சுகி சோவியத் கம்யூனிசுட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  சோசப்  தாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
    • 1938 - மடகசுகாரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி  செர்மனியின் திட்டத்தை "ஃகேர்மன் கோரிங்கு" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.
    • 1941 - இரண்டாம் உலகப் போர்: செவசுதபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.
    • 1948 - டோக்கியோவில் பன்னாட்டுப் போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு சப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ஆம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
    • 1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஃகேர்சு வெளியிட்டார்.
    • 1980 - நாசாவின் விண்கப்பல் வொயேசர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை ப் பூமிக்கு அனுப்பியது.
    • 1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் தொடங்கியது.
    • 1982 - சோவியத் கம்யூனிசுட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
    • 1982 - போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
    • 1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விசேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
    • 1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்சு-லீ அறிவித்தார்.
    • 1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • 1994 - இலங்கையின் 5ஆவது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
    • 1996 - சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்சுதானின் இல்யூசின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.
    • 1998 - கியோட்டோ  அறிவிப்பில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.
    • 2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா சோர்சியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.

No comments:

Post a Comment