வரலாற்றில் இன்று
Today in History
சனவரி 25
Today in History
சனவரி 25
- மொழிப்போர் ஈகிகள் நாள்.
- 1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாசுகோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
- 1755 - மாசுகோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1881 - தாமசு ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் தொலைபேசி நிறுவனம் (டெலிபோன் கம்பெனி) என்ற நிறுவனத்தைத் தொடங்கினர்.
- 1882 - வேல்சு இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், சார்சு ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
- 1917 - (இ)டானிசு மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
- 1918 - உக்ரேன் மக்கள் போல்செவிக்இரசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
- 1924 - உலகின் முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் France-ன் Alps மலைத் தொடரில் உள்ள சாமனீக்சு (Chamonix) என்ற இடத்தில் நடந்தன.
- 1955 - சோவியத் ஒன்றியம் செருமனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது. 1961 - அமெரிக்காவின் முதன் முதலில் அதிபர் செய்தியாளர் கூட்டம் நேரடியாக ஒலி. ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பெருமையைப் பெற்றவர் சான். எப். கென்னடி.
- 1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
- 1971 - இந்தியாவின் 18 ஆவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1981 - மா சே துங்கின் மனைவி சியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
- 1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1995 - யோசப் வாசு அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
- 1998 - கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
- 1999 - மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2005 - இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றிமக்கள் நெரிசலில் சிக்கிப் பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment