Wednesday, January 23, 2013

வரலாற்றில் இன்று Today in History 23 / 11

வரலாற்றில் இன்று   
Today in History  சனவரி 23

  1.     1556 - உலக வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கம் சீனாவின் Shansi மாநிலத்தை உலுக்கியது. இயற்கையின் அந்தக் கோரத் தாண்டவத்தில் 8,30,000 பேர் மரித்ததாக வரலாறு  கூறுகிறது.
  2.     1570 -  இசுகாட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
  3.     1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிசுகோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
  4.     1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான சியார்சுநகர்  பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  5.     1793 -இரசியாவும் பிரசியாவும் போலந்தைப் பிரித்தனர்.
  6.     1870 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  7.     1924 - விளாடிமிர் லெனின் சனவரி 21 இல் இறந்ததாகச் சோவியத்து ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  8.     1943 - இரண்டாம் உலகப் போர்: ஆசுதிரேலிய,  அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் யப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
  9.     1950 - இசுரேலின் சட்டசபை  செருசலேமை இசுரேலின் தலைநகராக அறிவித்தது.
  10.     1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
  11.     1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
  12.     1978 - இயற்கையைப் பாதுகாக்கவும் ஓசோன் படல அழிவைத் தடுக்கவும் 1978இல் aerosol sprays எனப்படும் தெளிப்பு மருந்துகளையும், திரவங்களையும் தடை செய்தது  சுவீடன்.
  13.     1996 -  சாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
  14.     1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் சனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
  15.     2005 - திருச்சி சிரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment