ஒருவர்: பாயை எடுத்துக்கிட்டு ஏன் அந்தப் பையன் ஆபிசுக்குப் போறான்..?
மற்றவர்: அவன் ஆபீஸ் பாயாம்...
-த.கிருஷ்ணஜோதி, சென்னை.
பாபு: ரெண்டு நாளா ஒரே இருமல்டா....
கோபு: அப்ப, கடைசி வரைக்கும் ரெண்டாவது இருமல் வரவே இல்லையா?
-ஜி.செல்லம்மாள்,
கோவைகுளம்.
ஏ மருமகள்: நான் கால் டாக்ஸியிலே போனாலும் போவேனே தவிர ஆட்டோவுல போக மாட்டேன்...
மாமியார்: உன்னை மாதிரி கஞ்சத்தனமா கால் டாக்ஸியிலே போக மாட்டேன். போனா முழு டாக்ஸியிலேதான் போவேன்... தெரிஞ்சுக்கோ...
-வேங்கடலட்சுமிராமர்,
27/24, விநாயகர் கோவில் 2-வது வீதி,
அறிஞர் அண்ணா நகர்,
மூலச்சத்திரம், மாதவரம்,
சென்னை 600 051.
மன்னர்: மந்திரியாரே, நம் அரண்மனைக்கு வந்த வேற்று நாட்டு தூதுப் புறாவுக்கு ஒரு கால் இல்லையே?
மந்திரி: மன்னா, இதுக்குப் பேர்தான் "மிஸ்டு கால்..!'
-சி.குணசேகரன், நெடுங்குணம்.
ஏ ரமேஷ்: உழைச்ச காசு உடம்பிலே ஒட்ட என்ன செய்யணும்?
சுரேஷ்: ஃபெவிகால் வாங்கி ஒட்டணும்..!
-பே.மாரிசங்கர்,
12-பி, புது அம்மன் கோவில் தெரு,
அம்பாசமுத்திரம் 627 401.
திருநெல்வேலி மாவட்டம்.
டைரக்டர்: என்னப்பா இது? முகத்துல வெட்டுக் காயத்தோட வந்து நிக்கிறே?
வந்தவர்: நீங்கதானே சினிமாவுல நடிக்க நல்ல முகவெட்டு உள்ள புதுமுகம் தேவைன்னு சொன்னீங்க..!
-ப.திருமுருகன், திருப்பூர்.
No comments:
Post a Comment