Friday, January 11, 2013

கடி

கடி




ஒருவர்: பாயை எடுத்துக்கிட்டு ஏன் அந்தப் பையன் ஆபிசுக்குப் போறான்..?
 மற்றவர்: அவன் ஆபீஸ் பாயாம்...
 -த.கிருஷ்ணஜோதி, சென்னை.

 பாபு: ரெண்டு நாளா ஒரே இருமல்டா....
 கோபு: அப்ப, கடைசி வரைக்கும் ரெண்டாவது இருமல் வரவே இல்லையா?
 -ஜி.செல்லம்மாள்,
 கோவைகுளம்.

 ஏ மருமகள்: நான் கால் டாக்ஸியிலே போனாலும் போவேனே தவிர ஆட்டோவுல போக மாட்டேன்...
 மாமியார்: உன்னை மாதிரி கஞ்சத்தனமா கால் டாக்ஸியிலே போக மாட்டேன். போனா முழு டாக்ஸியிலேதான் போவேன்... தெரிஞ்சுக்கோ...
 -வேங்கடலட்சுமிராமர்,
 27/24, விநாயகர் கோவில் 2-வது வீதி,
 அறிஞர் அண்ணா நகர்,
 மூலச்சத்திரம், மாதவரம்,
 சென்னை 600 051.

 மன்னர்: மந்திரியாரே, நம் அரண்மனைக்கு வந்த வேற்று நாட்டு தூதுப் புறாவுக்கு ஒரு கால் இல்லையே?
 மந்திரி: மன்னா, இதுக்குப் பேர்தான் "மிஸ்டு கால்..!'
 -சி.குணசேகரன், நெடுங்குணம்.

 ஏ ரமேஷ்: உழைச்ச காசு உடம்பிலே ஒட்ட என்ன செய்யணும்?
 சுரேஷ்: ஃபெவிகால் வாங்கி ஒட்டணும்..!
 -பே.மாரிசங்கர்,
 12-பி, புது அம்மன் கோவில் தெரு,
 அம்பாசமுத்திரம் 627 401.
 திருநெல்வேலி மாவட்டம்.

 டைரக்டர்: என்னப்பா இது? முகத்துல வெட்டுக் காயத்தோட வந்து நிக்கிறே?
 வந்தவர்: நீங்கதானே சினிமாவுல நடிக்க நல்ல முகவெட்டு உள்ள புதுமுகம் தேவைன்னு சொன்னீங்க..!
 -ப.திருமுருகன், திருப்பூர்.

 

No comments:

Post a Comment