Tuesday, November 1, 2011

கடி : 29,10,2011

கடி

First Published : 29 Oct 2011 02:49:34 PM IST


'அந்த லாண்டரிக்காரர் குடும்பம் பெரிய குடும்பமாமே, எப்படி?''ஆமா, ஆமா! அவங்க வீட்டுல 'உருப்படி' அதிகம்...-பாளை பசும்பொன், திருநெல்வேலி.ராமு: நான் படிச்சு முடிச்சதும், டாக்டர் ஆகப் போறேன்... நீ என்னடா செய்யப் போறே?பாபு: நான் படிச்சு முடிச்சதும், புத்தகத்தை மூடி வைப்பேன்..!-ஏ.பாரூக்,பேட்மாநகரம்.அவர்: இந்த ஏரியாவுல தங்க வீடு கிடைக்குமா..?இவர்: தங்க வீடெல்லாம் கிடைக்காது... சாதாரண கான்கிரீட் வீடு, ஓட்டு வீடுதான் கிடைக்கும்..!-பி.யுகபாரதி, சென்னை.ஒருவர்: நீங்க படுக்கும்போது வடக்குப் பக்கம் தலைய வச்சுப் படுப்பீங்களா அல்லது தெற்குப் பக்கம் தலைய வச்சுப் படுப்பீங்களா?மற்றவர்: திசையெல்லாம் எனக்குத் தெரியாது... நான் படுக்கும்போது கழுத்துப் பக்கம்தான் தலைய வச்சுப் படுப்பேன்...-லட்சுமிஆவுடைநாயகம், மடிப்பாக்கம், சென்னை.* பாபு: டேய், நீ போட்டிருக்கியே இந்தச் சட்டை...தீபாவளிக்கு எடுத்ததா?கோபு: இல்லை.... எனக்கு எடுத்தது!-எஸ்.பி.நவீன்பாரதி, 4-ம் வகுப்பு, அரோமா மெட்ரிக் பள்ளி,அம்பாசமுத்திரம்627 401திருநெல்வேலிமாவட்டம்.* ஒருவர்: நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் உங்களுடைய ஓவியம்தான் பாக்கிற மாதிரி இருந்தது!ஓவியர்: ரொம்ப நன்றி சார்!ஒருவர்: ஆமாம்... மத்தவங்களுடைய ஓவியங்களைச் சுற்றிசெம கூட்டமா, அதனால அதையெல்லாம் பார்க்கவே முடியல...ஓவியர்: ???????-சு.ராகுல் விக்னேஷ், 656/3, எம்.எம்.ஆர்.காம்ப்ளக்ஸ், சென்னிமலை ரோடு, பெருந்துறை 638 052.

No comments:

Post a Comment