Friday, November 18, 2011

பன்னாட்டுப் பொன்மொழிகள்

பன்னாட்டுப் பொன்மொழிகள்

First Published : 19 Nov 2011 12:00:00 AM IST


 1.  பெண் என்பவள் முடிந்தபோது சிரிப்பாள்; ஆனால் நினைத்தபோது அழுவாள்!  -பிரான்ஸ்  2.  ஒரு கணத்தில் இழந்த மானத்தை ஓராயிரம் ஆண்டுகளானாலும் பெற்றுவிட முடியாது!  -இத்தாலி  3.  குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள கை நோகிறது; அதைக் கீழே இறக்கினால் மனம் நோகிறது!  -பொலிவியா  4.  விரும்புவதைப் பெற முடியவில்லை என்றால் பெற முடிந்ததை விரும்ப வேண்டும்!  -ஸ்பெயின்  5.  கேள்வி கேட்கத் தெரிந்தாலே. பாதி தெரிந்து கொண்டதாக அர்த்தம்!  -இத்தாலி  6.  அறிவு உள்ளவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களுக்கு அறிவு இருப்பதில்லை!  -சீனா  7.  பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள்; ஒன்று தங்குமிடத்தில் மற்றொன்று தங்காது!  -பிலிப்பைன்ஸ்  8.  பணத்தில் நம்பிக்கை வைக்காதே; நம்பிக்கையான இடத்தில் பணத்தைப் போட்டு வை!  -பலூசிஸ்தான்  9.  விவசாயிகள் சேற்றில் கை வைப்பதால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடிகிறது!  -இந்தியா  10.  உழைப்பிற்கு ஓர் உதாரணம் எறும்பு; மற்றொன்று இதயம்!  -அமெரிக்கா

No comments:

Post a Comment