ஏய்... என்னஇது! தயவுசெய்து வாயை மூடுங்க...
“என்கிட்டே வந்துட்டீங்கள்லே... இனிமே எதுக்கும் பயப்பட வேண்டாம்... சொல்லுங்க... என்ன பிரச்சனை?”
“எனக்குத் தொடர்ந்து கொட்டாவி வந்துகிட்டே இருக்கு டாக்டர்...!” (ஏன்... மனோ பதிவை படிச்சாரா)
“அப்படியா...? வந்து இப்படி இந்த நாற்காலியிலே சாய்ஞ்சு உக்காருங்க.. பார்க்கலாம்..!”
“ஏன் டாக்டர்... மனிதன் மட்டும்தான் இப்படி கொட்டாவி விடறானா..?”
“அப்படி இல்லே... பறவைகள், மிருகங்கள், மீன்கள் கூட கொட்டாவி விடறதுண்டு..!”
“ஓ... அப்படியா..?”
“ஆனா ஒரு வித்தியாசம்..?”
“என்னது?”
“நாமெல்லாம் கொட்டாலி விட்டா... ஒண்ணு தூக்கம் வருது.... அல்லது விஷயம் ரொம்ப போர் அடிக்குதுன்னு அர்த்தம் பண்ணிக்கலாம். ஆனா மிருகங்கள் விஷயத்துலே அப்படி இல்லே..!”
“வேறே எப்படி?”
“அதற்கெல்லாம் வேறே வேறே காரணங்கள்... உதாரணத்துக்கு, ஒரு நீர் யானை கொட்டாவி விட்டா அது ஓர் எளிய சண்டைக்குத் தயாராகுது-ன்னு அர்த்தம்.!” (மாப்ள தமிழ்வாசி பிரகாஷ் கொட்டாவி விட்டா அதுக்கு அர்த்தமே வேற.... அட.. நைட் டூயுட்டின்னு அர்த்தங்க...)
“ஆச்சரியமா இருக்கே..!”
“ஆச்சரியப்பட்டு ஏன் இவ்வளவு அகலமா வாயைத்திறக்கறீங்க.. மருந்து விட்டுட்டேன்.. மூடுங்க! ஏன்? மறுபடியும் கொட்டாவி வருதா..?”
“இப்ப நான் வாயைத் திறக்கறது கொட்டாவியினாலே இல்லே டாக்டர்...”
“வேறே எதனாலே?”
“உங்கக் கையிலே இருக்கிற, “பில்”லைப்பார்த்ததுனாலே..!”
கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் என்பர்.
அலுப்பு , உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர். இது இடத்திற்கேற்றாற் போல் வெவ்வேறு பொருள் தரக்கூடிய சைகைக் குறிப்பாகவும் உள்ளது. கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட.
அலுப்பு , உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர். இது இடத்திற்கேற்றாற் போல் வெவ்வேறு பொருள் தரக்கூடிய சைகைக் குறிப்பாகவும் உள்ளது. கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட.
பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன.
- கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
- நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் (வகை II) விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
மூளை குளிர்வடைகிறது. - நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
- மூளை குளிர்வடைகிறது.
கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல் - குருதியில் கரிமவாயு-உயிர்வவாயு நிலைப்பாடு மாறுபடுதல்.
- ஈடுபாடின்மையையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
- அயர்வு
- அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு
- மூளைக்குப் போதிய அளவு குளுக்கோசு கிடைக்காததால்
கடைசியா ஒரு நகைச்சுவை
"தலைவரே! நீங்க இப்ப சொன்னது
நூத்துக்கு நூறு உண்மை...!''
''சரியான ஜால்ராய்யா நீ!
இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
கொட்டாவி தான் விட்டேன்...!''
No comments:
Post a Comment