Thursday, January 14, 2010

கடி



""ஏன் பள்ளிக்கூடத்துக்கு லேட்டா வந்தே?''""கடிகாரத்தை ரிப்பேர் பண்ணிக் கொண்டே இருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை டீச்சர்!''ஞா.செ.சேரலாதன், பொழிச்சலூர்.-----------------------------------------------------------------------------""அந்த சைக்கிள் கடை வச்சிருக்கிறவரு கத்தினா கூட தொழில் ரீதியாதான் கத்துவாரு!''""எப்படி?''""வீல் வீல்'னு!ஜி.ரெஜினா பானு, பழனி.-----------------------------------------------------------------------------""டாக்டருக்கும், இ.பி.காரருக்கும் என்ன ஒற்றுமை?''""தெரியலையே?''""ரெண்டு பேரும் ஃபீஸ் பிடுங்கறவங்க!''பு.நிவேதா, பொலம்பாக்கம்.-----------------------------------------------------------------------------""ஏன் உங்க பையன் லைட் முன்னாடி இப்படி வாயை திறந்துக்கிட்டு நிக்கிறான்?''""நான் லைட்டா சாப்பிடுன்னு சொன்னதை அவன் தப்பாப் புரிஞ்சிக்கிட்டான் போல இருக்கு.''பி.கவிதா, 240, வேளாளர் தெரு, கோவிலாம்பூண்டி, சிதம்பரம்-608 002.-----------------------------------------------------------------------------""தேங்காய் மட்டை நாரைக் கூட விடறதில்லையே ஏன்?''""நார்ச்சத்துள்ள ஆகாரம் சாப்பிடச் சொன்னாராம் டாக்டர்!''செல்.பச்சமுத்து, மேட்டுச்சேரி.-----------------------------------------------------------------------------""ஏன் சாப்பிடும் போது ஃபேனை ஆஃப் பண்ணிடுறே?''""எங்க அப்பா என்னை வேர்வை சிந்தி சாப்பிடச் சொன்னாரு, அதான்!''கே.கவின், 10-ம் வகுப்பு, 47, நேதாஜி ரோடு, பொள்ளாச்சி, கோவை மாவட்டம்-642 001.-----------------------------------------------------------------------------

1 comment:

  1. கடிண்ணா நல்ல கடி.ஆன்னாலும் மிகவும்ரசிச்சேன்.--வேணுகோபால்.கோவை

    ReplyDelete