skip to main |
skip to sidebar
Last Updated :
1. அரைச்சாண் ராணி; அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன?2. ஆனை விரும்பும், சேனை விரும்பும்; அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். அது என்ன?3. இரவெல்லாம் பூங்காடு; பகலெல்லாம் வெறுங்காடு. அது என்ன?4. உருவத்தில் பெரியவன்; ஊருக்கு உயர்ந்தவன். அவன் யார்?5. உருவத்தில் சிறியவன்; உழைப்பில் பெரியவன். அவன் யார்?6. ஊரெல்லாம் வம்பளப்பான்; ஓர் அறையில் அடங்குவான். அவன் யார்?7. எட்டி நின்று பார்ப்பான்; பெட்டியில் போட்டுக் கொள்வான். அவன் யார்?8. ஏறினால் வழுக்கும். இனிய கனி தரும். காயைத் தின்றால் துவர்க்கும். அது என்ன?9. ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை. அது என்ன?10. ஓயாது இரையும் இயந்திரம் அல்ல; உருண்டோடி வரும் பந்தும் அல்ல. அது என்ன?11. கடிக்கத் தெரியாதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?12. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு பிடி தண்ணீர். அது என்ன?13. தரையில் தாவுவான்; தண்ணீரில் மிதப்பான். அவன் யார்?14. ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன பாய்?15. ஊரெல்லாம் சுற்றும் தலை. அது என்ன தலை?தி.சே.அறிவழகன், சி.ஆனந்தன்விடைகள்:1.வெண்டைக்காய்2.கரும்பு 3.வானம் 4.கோபுரம் 5.எறும்பு 6.நாக்கு 7.கேமரா 8.வாழை 9.உள்ளங்கை 10.கடல் அலை11.சீப்பு 12.இளநீர் 13.தவளை14.ரூபாய்
nalla than irukku super
ReplyDeleteவிடுகதை விளையாட்டுகள், தமிழ் விடுகதைகள், விடுகதைகள் போன்ற அனைத்து தமிழ் தகவல்களுக்கு http://www.valaitamil.com/tamilnadu-children-game-vidugathai_7010.html
ReplyDelete