skip to main |
skip to sidebar
Last Updated :
1. ஆள் இல்லாத வீட்டில் தலைகீழாக தொங்கும். அது என்ன?2. நீரில் பிறந்தவன், நீரிலே வேகிறான். அவன் யார்?3. உணவை உள்ளே தள்ளியவன், உடையை வீசி எறிவான். அவன் யார்?4. தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?5. காலைக் கடிக்கும் செருப்பு இல்லை; காவலுக்கு உதவும் நாயும் இல்லை. அது என்ன?6. மழைக்குப் பிறந்தவன் குடைக்கு எடுத்துக்காட்டு. அவன் யார்?7. தண்ணீரிலே வாழ்வான்; தலைகுளிக்க மாட்டான். அவன் யார்?8. விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?9. வசப்படும் என்று வால் கட்டிப் பறந்தாலும், எதுவும் புலப்படாமல் போய்க் கொண்டே இருக்கும். அது என்ன?10. நிமிர்த்தினாலும் வளைந்து விடும்; துரத்தினாலும் தொடர்ந்து வரும். அது என்ன?11. பெட்டிக்குள் இருந்தாலும் கெட்டுப் போகாத இடம். அது என்ன?12. பெரிய உருவம் கொண்ட அண்ணாச்சிக்கு, சிறிய கண்கள். அது என்ன?13. அடுக்கடுக்காய் சீப்பு இருக்கும்; ஆனால் தலைவார முடியாது. அது என்ன?14. கையில் எடுத்தால்தான் வாயைத் திறக்கும். தைப்பவரிடம் உதவியாய் இருக்கும். அது என்ன?சிவன், வெண்ணெய்வேலன்விடைகள்:1.வெளவால் 2.மீன் 3.வாழைப்பழம் 4.வாழைப் பூ 5.முள் 6.நாய்க்குடை 7.தாமரை இலை 8.மின்கம்பம் 9.வானம் 10.நாய் 11.குளிர்சாதனப் பெட்டி 12.யானை 13.வாழை சீப்பு 14.கத்தரிக்கோல்
No comments:
Post a Comment