Thursday, January 14, 2010

கடி



* ""ஏன் தினமும் பூரி,​​ இட்லி,​​ தோசைன்னு டிபன் அயிட்டங்களாகவே சாப்பிடற?''""என்னை யாரும் "தண்டச் சோறு'ன்னு சொல்லிடக் கூடாதுல்ல!''டி.பச்சமுத்து,​​ 5/1076,​ பாரதியார் நகர்,​​ சந்தைப்பேட்டை,​​ கிருஷ்ணகிரி-635 001.* ""அந்தத் திருடனிடம் பீரோ சாவி கொடுத்தீங்க...​ சரி.​ அவனுக்கு ஏன் சல்யூட் அடிச்சீங்க..?''""அவன்தான் "மரியாதையா பீரோ சாவிய கொடு'ன்னு சொன்னானே!''ஏ.பஷீர் அஹமது,​​"சுசிலா நிலையம்'பழைய எண்:12/4,​ சி.என்.கே.​ சாலை,​​ சேப்பாக்கம்,​​ சென்னை-600 005.""அரண்மனைப் புலவர்கள் 64 பேரின் வாய்களையும் தைத்து விடுமாறு மன்னர் உத்தரவிட்டாரே...​ ஏன்?''""மன்னரை பாடிப் பாடியே போண்டி ஆக்கி விட்டார்களாம்!''சி.பி.செந்தில்குமார்,​​ சென்னிமலை.""தலைமுடிக்கும்,தேளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.''""என்னது?''""ரெண்டுமே கொட்டும்.''எம்.அசோக்ராஜா,​​ திருச்சி.""டேய்...​ ரவி,​​ வினாத்தாள் "அவுட்' ஆயிடுச்சாம்!''""என்ன "டக்' அவுட்டா?​ இல்ல "செஞ்சுரி' அடிச்சிட்டு "அவுட்' ஆச்சா..?''டி.பசுபதி பாண்டியன்,​​ அவ்வையார்பாளையம்.""என் நண்பருக்கு மூணு காது!''""எப்படி?''""வலக்காது, இடக்காது. ரெண்டும் கேக்காது!''தி.ஆ.டேவிட்,​​ தென்காசி.

No comments:

Post a Comment