திருமணத்திற்கு வராதீர்கள்... (மகான்களின் வாழ்க்கையில்)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கையைத் தன் உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் அனுப்பினார்.
திருமணத்திற்கு அவசியம் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் கலைவாணர் ஏன்.எஸ் கிருஷ்ணனுக்கு மட்டும் பத்திரிகை அனுப்பிக் கூடவே ஒரு வித்தியாசமான கடிதத்தையும் இணைத்திருந்தனர்.
அன்புள்ள கலைவாணர் அவர்களுக்கு இத்துடன் எனது மூத்த மகள் சரஸ்வதியின் திருமணப் பத்திரிக்கையை அனுப்பியுள்ளேன். தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிடாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
திருமணம் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெறுகிறது. இங்கு நீங்கள் வந்தால் சுற்று வட்டார மக்களும், பாண்டிச்சேரி மக்களும் கூடிவிடுவார்கள். அத்துணைப் பேருக்கும் வேண்டிய வசதிகளை என்னால் செய்து கொடுக்க இயலாது.
கூட்டத்தை சமாளிப்பது திருமண நேரத்தில் சிரமமாகிவிடும். எனவே தயவு செய்து தங்களது வாழ்த்தை மட்டும் அனுப்பி வைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
இந்த துணிச்சல் பாரதிதாசனைத் தவிர வேறு யாருக்கு வரும்?
No comments:
Post a Comment