உலகின் அனைத்து கண்டங்களின் தென்பகுதி குறுகலாகவும் , வடபகுதி அகலமாகவும் இருக்கிறது
தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு 8-வது வாரத்தில் கைவிரல்கள் தோன்றி அதில் ரேகைகளும் பதிய ஆரம்பித்துவிடும், அதன் பின் இறக்கும் வரை எந்த ஒரு மனிதனுக்கும் மாறுவதில்லை
அமெரிக்க சட்டசபை கட்டிடத்தில் ஆண்டின் நாட்களை குறிப்பிடும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
மகாத்மா காந்தியை ‘காந்தியடிகள்‘ என்று முதன்முதலில் அழைத்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார்
சூரியக் கதிர்கள் கடலுக்குள் 350 அடி வரை செல்லும்
மழையை அளக்க ‘புளூவியோ மீட்டர்‘ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது
‘போப்‘ என்ற சொல் ‘பாபா‘ என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும்
கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நம் நாட்டில் முதன்முதலாக குஜராத்தில் தொடங்கப்பட்டது
50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் — மூங்கில்
நின்றுகொண்டே உறங்கும் விலங்கு — குதிரை
இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் — செரி
No comments:
Post a Comment