Friday, December 2, 2011

new year greeting : joke: புத்தாண்டு வாழ்த்து


புத்தாண்டு வாழ்த்து

சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம்.அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த குரலில்,”எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,”என்று கத்தினான்.உடனே ஒருவன் கேட்டான்,”ஏனப்பா இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கிறாய்?புத்தாண்டு பிறந்து இருபது நாட்கள் ஆகி விட்டனவே!”குடிகாரனுக்கு ஒரே குழப்பம்.பலரும் இதேபோல சொல்ல அவன் கூவினான்,”ஐயையோஇதுவரை நான் இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனதில்லையே.என் மனைவி என்னைக் கொன்று விடுவாளே!”
**********
கல்லூரியில் படிக்கும் பையன் தந்தைக்குக் கடிதம் எழுதினான்,”அன்புள்ள தந்தைக்கு,உங்களிடம் இருந்து செய்தி வந்து நீண்ட நாட்களாகி விட்டன.உடனடியாக ஒரு செக் அனுப்பினால் நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வேன் அல்லவா?”
**********
ஒரு கடையில் சேலை திருடிய குற்றத்திற்காக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி கூறினார்,”இதே குற்றத்திற்காக முன் ஒரு முறை தண்டனை பெற்றிருக்கிறாயே?மீண்டும் அதே தவறை செய்யலாமா?”திருடன் சொன்னான்,”என் மனைவி முதலில் திருடிய சேலை கிழிந்து விட்டது என்று கூறினாள்.அவளும் எவ்வளவு நாள் தான் கிழிந்த சேலையை உடுத்துவாள்?”
**********
ஒரு கூட்டத்தில் பெண்கள் பகுதியில் ஒரே அரட்டை.பேச்சாளருக்கு அது இடையூறாயிருந்தது.”அமைதி,அமைதி,”என்று சொல்லியும் சத்தம் நின்றபாடில்லை.அப்போது பேச்சாளர்,”பெண்மணிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்,”என்றார்.உடனே கூச்சல் நின்றது.
You might also like:

No comments:

Post a Comment