Friday, December 9, 2011

Jokes : சிரிப்பு வந்தால் சிரியுங்கள்


நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"


வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து
வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து
தருவாங்க.


ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல்
கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!



ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள்
இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."


டாக்டர் : 37'ம் நம்பர் படுக்கையில் இருந்த பேஷண்ட் எப்படியிருக்கிறார்?
நர்ஸ் : அவருக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது... டாக்டர்..
டாக்டர் : ஏன்? என்ன ஆயிற்று அவருக்கு?
நர்ஸ் : என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றி ஓடியதால் ஏற்பட்ட களைப்பு!

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப்
பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது
கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.

"எனக்கு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் பிடிக்கும்."
"உன் காதலருக்கு...?"
"அவர் அரசியல்வாதியாச்சே... பித்தலாட்டம்தான்!"

"அய்யாவுக்கு ஒண்ணும் ஆகலியே?"
"நல்லாதான் இருக்கார். நீ எதுக்குடி கேக்கறே முனியம்மா?"
"நானும் அவரும் ஜாலி டூர் போன கார் மரத்துல மோதற மாதிரி கனவு கண்டேன். அதான்!"


கண்ணம்மா:  ஏங்க.. ஒருநாள் ஓட்டு போட்டுட்டு அஞ்சு வருஷம் கஷ்டப் படறாங்களே..  இந்த வாக்காளர் எல்லாம் பாவம்தானே..?
ராஜா: அடப் போம்மா.. அஞ்சு நிமிஷத்துல தாலியக் கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப் படற ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!

முந்தா நாள் காய்கறி வாங்கப் போன ராஜாவைக் காணோம்ன்னு அடுத்த வீட்டுக் காரியிடம் கண்ணம்மா. வருத்தப் பட்டாங்க . அந்த ராட்சஸி சொன்னா..
இந்த மாதிரி கஷ்டம் வாழ்க்கையில எல்லாருக்கும் வரும்.. சரி.. கவலைப் படாதே..
என் ஃபிரிட்ஜ் ல காய்கறி இருக்கு.. எடுத்து தரேன் வா..!



இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான்
வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?



அமெரிக்கன் சொன்னான்.. எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!
ரஷ்யன் சொன்னான்.. எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?
இந்தியன் சொன்னான்.. பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும் ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?

No comments:

Post a Comment