Tuesday, August 11, 2009

கடி



""ஸ்கூல்ல வாத்தியாரா இருந்தவரை மேனேஜர் ஆக்கினது தப்பாப் போச்சு!''
""என்னாச்சு?''
""ஆபீஸ்க்கு லேட்டா வர்றவங்களை எல்லாம் பெஞ்ச் மீது நிற்க வெச்சிடுகிறார்!''

- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

************

""நாய் எப்பவும் வாள்வாள்னு தானே கத்தும்? இது ஏன் வீல்வீல்னு கத்துது?''
""சைக்கிள் வீல் ஏறிடுச்சாம்!''

- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

************

""அப்பா... உங்களால இருட்டுல எழுத முடியுமா?''
""முடியுமே!''
""அப்போ லைட் ஆஃப் பண்றேன். பிராக்ரஸ் ரிப்போர்ட்ல கையெழுத்து போடுங்க பார்ப்போம்!''

- டி.பி.சரவணன், 5/1076, பாரதியார் நகர், சந்தைப்பேட்டை, கிருஷ்ணகிரி-635 001.

************

""எந்த சோப்ப நீங்க குளிக்கப் பயன்படுத்துறீங்க?''
""கோபால் சோப் டாக்டர்!''
""அது என்ன புது கம்பெனி சோப்பா?''
""இல்ல டாக்டர். அது என் ரூம்ல தங்கியிருக்கும் கோபாலோட சோப்!''

- த.ஞானசெல்வன், 1, அவுலியன் சாகிப் 6-வது தெரு, ல்லீஸ் சாலை, சென்னை-2.

************
""மேனேஜர் வரும் போது நான் மரம் மாதிரி நின்னுக்கிட்டிருந்தது தப்பாப் போச்சு!''
""ஏன்... என்ன பண்ணாரு?''
""அறுத்து தள்ளிட்டாரு!''

- ஜி.மஞ்சரி, புதுப்பேட்டை.

No comments:

Post a Comment