Friday, August 7, 2009

கடி



*** ""சார்! உங்க உடம்பு குணமாகணும்னா மீன், ஆடு, கோழி சாப்பிடறதை நீங்க உடனடியா நிறுத்தணும்!''
""அது முடியாது. எப்படிங்க அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்!''
ச.கார்த்திக் ராஜா, த/பெ.ப.சரவணன், 5/1076, பாரதியார் நகர், புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி-635 001.

*** ""எனக்கு அல்சர். அதனால காரம் சேர்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்.''
""அதுக்காக நமஸ்"காரம்' கூட சொல்லலைன்னா எப்படி?''
- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

*** ""என்னடா... டாக்டர் "சிம்மம்' ராஜான்னு போர்டு போட்டு இருக்கு!''
""யாரும் ராசியில்லாத டாக்டர்ன்னு சொல்லிடக் கூடாது பாருங்க!''
- பி.பாலாஜிகணேஷ், 240, வேளாளர் தெரு, கோவிலாம்பூண்டி, சிதம்பரம் தாலுகா-608 002.

*** ""இந்த ஊர்ல இருக்குறவங்கள்ல பாதி பேர் வீட்டுல அடுப்பு எரியுதுனா அதுக்கு இவர்தான் காரணம்னு சொல்றியே எப்படி?''
""இவர் இந்த ஊர் சமையல் கேஸ் ஏஜென்ட் ஆச்சே!''
- பரதன், எழில்நகர்.

*** ""என்னது... நீ சின்ன வயசிலே இருந்து மூட்டைத் தூக்கி படிச்சியா?''
""ஆமாங்க. புத்தக மூட்டையைத் தூக்கி படிச்சேன்!''
- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.

*** ""கண்ணன் மீது கார் மோதியது. இது என்ன காலம்?''
""கண்ணனோட போதாத காலம் சார்!''
- பி.கோபிகிருஷ்ணன், புதுப்பேட்டை.

No comments:

Post a Comment