
எலிகாப்டர் பூனை -புதியபரிதி
அன்பு அதிகபட்சம் என்ன செய்யும்? ஒருவரை காக்கும், ஒருவரை
வளர்க்கும், உயிருடன் இருக்கும் வரை தாங்கி நிற்கும். இறந்து விட்டால்?
வேண்டியவர்களாக இருந்தால் மனப்பிறழ்வுக்கு கூட இட்டுச் செல்லும். அதுவே
வளர்ப்பு பூனையாக இருந்தால்… டச்சு நாட்டைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் ஒரு
இசைக்கலைஞர். இவர் ஆசையாக வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். வீட்டில்
ஏதோ ஒரு வேலையில் ஜேம்ஸ் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஆர்வில் என்ற அந்தப் பூனை
வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டது.
அந்த நேரம் சாலையில் வந்து கொண்டிருந்த கார் பூனையின் மேல் ஏறிவிட சம்பவ
இடத்திலேயே பூனை இறந்துவிட்டது.பூனை இறந்துகிடந்ததைப் பார்த்ததும், ஜேம்ஸ்
கதறி, அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். பூனை இறந்த ஏக்கம் ஜேம்ஸால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், பூனையை அடக்கம் செய்யவும் இல்லை.
ராத்திரி முழுவதும் கண் விழித்து ஒரு பைத்தியக்காரனைப் போல் ஜேம்ஸ்,
பூனையையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் திடீரென்று பொறி
தட்டியது.
உடனடியாக பூனையின் குடல் பாகங்களை எல்லாம் எடுத்துவிட்டு, அதை
சுத்தம் செய்து, அதில் பஞ்சுகளை வைத்து அடைத்து அதன் உடலை கட்டுமஸ்தாக்கி,
அதில் ஹெலிகாப்டர் என்ஜின்களைப் பொருத்தி, கால்களில் இறக்கைகளை இணைத்து,
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் ஹெலிகாப்டராக மாற்றிவிட்டார். இப்போது
வீடு முழுக்க ஆர்வில் என்கிற பூனை பறந்துகொண்டு இருக்கிறது. இதைப் பார்த்து
பலரும் தங்களது இறந்த பூனைகளை ஜேம்சிடம் கொண்டுவந்து அதே போல் செய்து
தரக் கேட்கிறார்கள். என்ன கொடுமை சார் இது.
No comments:
Post a Comment