Sunday, August 25, 2013

மூன்றாவது தாருங்கள்...

மூன்றாவது தாருங்கள்...






மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நகைச்சுவை உணர்வை விளக்கும் ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை நண்பர் ஆறுமுகம் என்பவர் தம்முடைய குடும்பத் தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதில் சாட்சி கையெழுத்திட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெரு என்பது. அதை நீற்றுக்காரத் தெரு என்றும் கூறுவர். ""இந்த இரண்டில் எதைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம்'' என்று அவர் கேட்டபொழுது, மீனாட்சிசுந்தரம்,
""இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு என்று போட்டுவிடும்'' என்று கூறினாராம். அவர் கூறியதில் உள்ள நகைச்சுவை உணர்வை அறிந்து அனைவரும் மகிழ்ந்தனராம்.
மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு) ஒரு சொல். இரவில் சுண்ணாம்பை அவசியம் ஏற்பட்டாலொழிய இரவல் வாங்கக்கூடாது என்பார்கள். அப்படித் தேவைப்பட்டால் "மூன்றாவது தாருங்கள்' என்றுதான் கேட்ட வேண்டும். கிராமத்தில் இன்றும் இது வழக்கத்தில் உள்ளது.

No comments:

Post a Comment