Friday, June 26, 2009

கடி
தினமணி சிறுவர் மணி


* ""இந்த ஊர்ல பலாப்பழம் சீப்பா கிடைக்கும்.''""ஆச்சர்யமா இருக்கே. எங்க ஊர்ல வாழைப்பழம் தான் சீப்பா கிடைக்கும்!''டி.பச்சமுத்து, 5/1078, "இலட்சுமி இல்லம்', பாரதியார் நகர், கிருஷ்ணகிரி-1.*""என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்!''""எப்படிச் சொல்றே..?''""பல்பு கம்பெனியில் வேலை கிடைச்சுருக்கே..!''எஸ்.பொருநை பாலு, 88ஏ, சுந்தரர் தெரு திருநெல்வேலி } 627 006.""நான் கிளாஸ் எடுத்துட்டிருக்கும் போது தூங்கறியே... அப்புறம் எப்படி உன் ஞாபகசக்தி கூடும்?''""தினசரி பகல்ல ஒரு மணி நேரம் தூங்கினால் நினைவாற்றல் கூடும்னு விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்க சார்!''ஜி.வினோத், கிருஷ்ணகிரி.""அவரை ஏன் போலி டாக்டர்ன்னு சொல்றே?''""பின்னே... மனசு உடைஞ்சுப் போச்சு டாக்டர்ன்னு சொன்னேன். மாவு கட்டுப் போட்டு குணப்படுத்தலாம்ங்கறாரே..!''ஆர்.ஜி.காயத்ரி, திசையன்விளை. ""அந்த இரும்புக்கடையில என்னை வேலைக்கு சேர்க்கமாட்டேன்னு சொல்லிட்டாங்கப்பா..!''""ஏன்?''""இரும்பையும் துரும்பாக்கிடுவேன்னு சொன்னேன், அதான்!''நதீன், காயல்பட்டினம்.""எதுக்குடா உங்க அப்பா பெயரை எழுதி ஃப்ரிட்ஜ்க்குள்ள வைக்கறே?''""அவர் பெயர் கெட்டுடக் கூடாதுன்னு தான்!''

No comments:

Post a Comment