Saturday, October 13, 2012

கருணைக்கு விலையே இல்லை

கருணைக்கு விலையே இல்லை
 
அக்டோபர் 10,2012,17:10  IST

* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.
* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.
* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்தபடியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். பல அசட்டுத்தனமான புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அவை அவர்களை நரகாக்கினியில் மூழ்கடிக்கின்றன.
* நம் சரீர முயற்சியின் பலன் சிறிதளவே ஆகும். ஆனால் தெய்வீகத்தன்மையோ எல்லாவற்றையும் விட அதிகமான பலன் தருவதாகும்.
* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகிவிடும். பெண்களிடத்தில் உன் பலத்தைக் கொடுத்து விடாதே.
- பைபிள் பொன்மொழிகள்
தினமலர்

No comments:

Post a Comment